“என்னுடைய இடமாற்றத்தை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” : இமெல்டா சுகுமார் கவலை

யாழ்.அரச அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது எனக்கு இடமாற்றம் வரும் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லையென்று, கவலையுடன் யாழ்.அரச அதிபராகக் கடமையாற்றிய திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். (more…)

டக்ளஸுக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் சபையில் கடுமையான வாய்ச்சண்டை

பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் டக்ளஸுக்கும் இடையில் கடுமையான வாய்ச்சண்டை ஏற்பட்டது. (more…)
Ad Widget

யாழ்.அரச அதிபர் திடீர் இடமாற்றம்

யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பதவி உயர்வுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு செயலாளர் பதவி ஒன்று வழங்கப்படலாம் என்று தெரியவருகிறது. இவரது இடத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் எஸ். அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, வவுனியாவுக்கு புதிய அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

பலாலியில் குடியமர்த்தாவிடின் சாகும் வரை உண்ணாவிரதம்; இடம் பெயர்ந்த மக்கள் எச்சரிக்கை

தம்மைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் பலாலியில் இருந்து இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தம்மைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் பலாலியில் இருந்து இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் எச்சரிக்கை...

தனியார் கல்வி நிலையங்கள் இனி மாலை 6 மணி வரையே; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை என்கிறார் முதல்வர்

தனியார் கல்வி நிலையங்களுக்கான நேரக்கட்டுப்பாடு தொடர்பான கூட்டம் நேற்று யாழ். மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் முதல்வர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே மாநகர சபை முதல்வரும் தனியார் கல்வி உரிமையாளர்களும் வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட்டனர்.கூட்டத்தில், கலாசாரச் சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தனியார் கல்வி நிலையங்களில் கற்பித்தல் நேர ஒழுங்கில் வரையறை விதிக்கப்படுகிறது. இதன்படி...

சங்கங்களில் கோதுமைமாவின் நுகர்வு பெரும் வீழ்ச்சி , தீட்டல் பச்சை அரிசிக்கு மவுசு

கோதுமை மாவின் நுகர்வு குறைவடைந்துள்ள அதேவேளை சங்கங்களில் தீட்டல் பச்சை அரிசியின் நுகர்வு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது (more…)

போதனா வைத்தியசாலையில் ஊழியர் போன்று கொள்ளையர்; நோயாளர்களே! உங்கள் நகை கவனம் ஆஸ்பத்திரிப் பொலிஸார் எச்சரிக்கை

பெரும்பாலும் வெளிநோயாளர் பிரிவிலேயே இந்தக் கொள்ளை அதிகம் இடம்பெறுகிறது. மருத்துவ விடுதிகளிலும் இவை ஆங்காங்கே இடம்பெறுகின்றன. (more…)

யாழ். மாவட்டத்தில் பத்தாயிரம் குடும்பங்கள் மீள்குடியேற விண்ணப்பம்

யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறுவதற்காக இதுவரை உயர் பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்திருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். (more…)

தற்போது யாழில் பாலியல் கல்வி மிக அவசியமாகும்: வைத்தியர் யோகேஸ்வரன்

தற்போது யாழ். குடாநாட்டில் பாலியல் கல்வி செயற்திட்டம் கட்டய தேவையாக உள்ளது என யாழ். மாவட்ட தொற்றா நோய்கள் பிரிவு வைத்திய அதிகாரி வி.யோகஸ்வரன் தெரிவித்தார்.யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், (more…)

கிணற்றிலிருந்து இரு சகோதரிகள் சடலமாக மீட்பு: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பலாலி, 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள வீட்டுக் கிணறொன்றிலிருந்து இரு சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 9.30 மணியளவில் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷாலினி (வயது 20) மற்றும் தனூஜா (வயது 22) என்ற இரு சகோதரிகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். (more…)

வடக்கின் கல்வி நிலை வீழ்ச்சி?

அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தை 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.பரீட்சை முடிவுகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு மேற்கொண்டுள்ள பகுப்பாய்வு...

பிரித்தானிய எம்.பி – யாழ். ஆயர் சந்திப்பு

எல்லா மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான நல்லாட்சியை இலங்கை அரசு ஏற்படுத்துவதே பிரித்தானியாவின் விரும்பம் என இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நெசபி யாழில் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இவர், யாழ். ஆயர் இல்லத்தில் செவ்வாய்கிழமை யாழ். ஆயர் தோமஸ் சௌவுந்தர நாயகத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் (more…)

தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் 27 வருடங்களின் பின் யாழ்ப்பாணம் திரும்புகிறார்

இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக ஆரம்பகாலத்தில் போராடியவர் தந்தை செல்வநாயகம் அவர்கள். 1983 ம் ஆண்டு தொடக்கம் இந்தியாவில் தங்கியிருந்த இவரது மகன் எஸ்.சி.சந்திரகாசன் 27 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இலங்கை செல்ல முடிவெடுத்துள்ளார்.இலங்கை தமிழர்களின் உரிமைக்காக ஆரம்பகாலத்தில் போராடியவர் செல்வநாயகம். இவரால் தொடங்கப்பட்ட பெடரல் கட்சி தமிழர்களுக்கு சம உரிமை கேட்டு பல போராட்டங்களை நடத்தியது....

யாழில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி செய்த சுதந்திர கட்சி முக்கியஸ்தர் கைது

யாழ். மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக, இளைஞர் யுவதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியிருந்த சுதந்திரக்கட்சி முக்கியஸ்தரை யாழ்.பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய போது, தனது அரச கட்சி என்ற பெயரை பாவித்து இளைஞர் யுவதிகளிடம் மோசடி செய்துள்ளார். (more…)

வலி.வடக்கு மீள்குடியமர்வு இராணுவத்தினர் கைகளிலேயே! என்னால் எதுவும் செய்ய முடியாது: இமெல்டா கைவிரிப்பு

வலிகாமம் வடக்கு பகுதி மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக என்னால் எதுவும் கூற முடியாது எனவும் மக்கள் இப்பகுதியில் குடியமர பாதுகாப்பு தரப்பினரே தனக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.வலிகாமம் வடக்கு, ஊரணி, மயிலிட்டி வடக்கு, பலாலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.அரச...

யாழ்.மாவட்டத்தில் அரச ஊழியர்களுக்கு புதுவருடம் முதல் ஒரே வர்ணத்திலான சீருடைகள்

யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் பணியாற்றும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு ஒரே வர்ணத்திலான சீருடை வழங்ப்படவுள்ளதாக தெரியவருகின்றது.இதற்காக பெண்களுக்கான சேலைகள் அடங்கிய ஒரு தொகுதி சீருடைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.எதிர்வரும் புதுவருடத்திலிருந்து இவர்கள் கடமையின் போது கட்டாயம் இதனையே அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. (more…)

பகிடிவதையால் யாழ். பல்கலைக்கழக மாணவன் வைத்தியாசாலையில் அனுமதி

யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட முதலாம் வருட கலை பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.பல்கலைக்கழகத்திற்குள் வைத்து குறித்த மாணவனை சிரேஸ்ட மாணவர்கள் பலர் தாக்கியுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். (more…)

பளை வரை வந்தது லக்ஸபான மின்சாரம்

20 வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் லக்ஸபான மின்சாரம் நேற்று முதல் பளைப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக 91ம் ஆண்டுக்குப் பின்னர் லக்ஸபான மின்விநியோகம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது. (more…)

யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மின்சார இணைப்பு எந்த நேரத்திலும் நிறுத்தப்படும் அபாயம்!

மின்சாரக்கொடுப்பனவுகளை உரிய காலத்தில் செலுத்தாததினால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மின்சார இணைப்பு எந்த நேரத்திலும் நிறுத்தப்படும் அபாயம் காணப்படும் அதேவேளை, பணத் தொகையை செலுத்த மின்சார சபை வழங்கிய காலஅவகாசமும் நிறைவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மின்சார இணைப்புக்களை வழங்கும் இலங்கை மின்சார சபைக்கு யாழ்.போதனா வைத்தியசாலையினால் கடந்த 8 மாதாகாலத்திற்கும் அதிகமாக மின்சார...

வடபிராந்திய போக்குவரத்து சபையின் சேவைகள் முடங்கும் அபாயம்

ஊழியர்களுக்கான சம்பள நிலுவைகள் வழங்கப்படாமையினாலும், போதியளவு பேரூந்துகள் இன்மையானலும், இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சேவைகள் முற்றாகச் செயலிழக்கும் அபாயம் காணப்படுவதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்திய அலுவலகத்தினருக்கு கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாத்திற்கான சம்பள நிலுவைகள் இதுவரையில் வழங்கப்படவில்லை. (more…)
Loading posts...

All posts loaded

No more posts