- Monday
- April 14th, 2025

எதிர்வரும் 16,17. மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அடுத்தமாதம் 7,8,9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப்பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணம் பல்கலைக்கழக...

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பீ.சி.ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆளணியை நியமிப்பதற்குத் துணைவேந்தர் நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்த 3பேர் பல்கலைக்கழகத்தின் நிதிமூலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீட கொரோனா...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ.கபிலன் தாவரவியலில் பேராசிரியராகவும், இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியலில் பேராசிரியராகவும், தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதியும், விவசாய பீடத்தின் முன்னாள்...

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கிவந்த “யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்” எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் “இலங்கை வவுனியா பல்கலைக் கழகம்” எனத் தரமுயரும்...

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது....

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் ஆயிரத்து 600 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சிறப்பு பணிப்புரை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை, 3ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழக ஆளணியருக்கு சினோபாம் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இந்தத் தகவலை பல்கலைக் கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் கோப்பாய் பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளைத் தடுக்கும் முகமாக நேற்றைய தினம் முதல் பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு காண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தடைகள் கண்காணிப்புக்களை மீறி பல்கலை வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் சுடரேற்றி...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு மாணவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பல்கலை காவலாளிகள் இருவர், கோப்பாய் பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு, இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக...

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது பல்கலைக்கழக காவலாளி மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அகற்றியுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த...

இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதேவேளை யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று பிற்பகலில் இருந்து இராணுவம், பொலிஸ் மற்றும்...

மே-18 தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளில் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், அரசாங்கத்தின் இழிச் செயலுக்கு வரலாறு பதில் சொல்லும் என மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “மே-18 தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்வி பயின்றுவரும் 31 மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பம்பைமடுவில் அமைந்துள்ள குறித்த வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதியில் நேற்று (புதன்கிழமை) சுகாதாரப் பிரிவினரால் அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவுகளின்படி, அங்கு தங்கியுள்ள 31 மாணவர்ககுக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த மாணவர்க்ள அனைவரும் தென்பகுதியைச்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவுக்கு யாழ்.போதானா வைத்தியசாலையில் வெற்றிகரமாக இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கொழும்பில் இருந்து வந்த விசேட இருதயச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.மித்திரகுமார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவர்களும் இணைந்து சந்திரசிகிச்சையை மேற்கொண்டனர். அவருக்கு அஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சையின் பின் தான் நலமாக இருப்பதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். இந்த அறுவைச்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலைக்கழக மாணவர்கள்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத்தூபியினை காலை துணைவேந்தர் திறந்து வைக்கவிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. தமது அழைப்பின் பேரில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா திறந்துவைப்பார் என பல்கலை மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி எட்டாம்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று (24)காலை ஆரம்பமாகியது. இன்றும், நாளையும் 6 அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமை தாங்கி பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, வவுனியா வளாக முதல்வர்கலாநிதி...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கோவிட் 19 நிலமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம் என வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் ஆலோசனை வழங்கியுள்ளார். யாழ். பல்கலைக் கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24,...

கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி கோவிட்- 19 சிகிச்சை நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீட மாணவி தனது ஆண்டு இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பதுளையைச் சேர்ந்த கலைப்பீட மாணவி ஒருவர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில்,...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இரண்டு நாள்களிலும், ஆறு அமர்வுகளாக நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப்படிப்புகள், உள்வாரி, வெளிவாரி என 2 ஆயிரத்து 608 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள...

All posts loaded
No more posts