- Monday
- April 21st, 2025

உறுப்பினர்களுக்கு தொலைபேசி படி வழங்க வேண்டும் என சபை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 16 மாதங்களுக்கு பின்னர் தீர்மானம் ஒன்று முன் மொழியப்பட்டு, சபையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் படியில் 6000 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. (உறுப்பினரின் சம்பளம் 20, 000 ரூபாய் அத்துடன் தொலைபேசி படி 6,000 ரூபாய். என 26,000 தற்போது வழங்கப்படுகின்றது)...

யாழ் மாநகரசபையின் 2020 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டவேளையில் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் அவர்களால் ஆற்றப்பட்ட உரையின் முழு வடிவம்.. கௌரவ முதல்வர் அவர்களே, ஆணையாளர், செயலாளர், கௌவர உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம். கௌரவ முதல்வரின் அனுமதியுடன் நீங்கள் சமர்ப்பித்த பாதீட்டின் பிரகாரம் எனது வரவு செலவுத்திட்ட உரையினை நிகழ்த்துகின்றேன். யாழ்.மாநகர...

நேற்றைய தினம் யாழ்.மாநகர சபையில் 2020 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை அங்கீகரிப்பதற்கான விசேட அமர்வு நடைபெற்றது. மத்தியம் 2.30 மணியளவில் அவ் அமர்வு முடிவடைந்து உறுப்பினர்கள் வெளியேறும் போது யாழ்.மாநகர சபையின் பிரதான் வாசலுக்கு அருகில் ஒரு விபத்து நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் விபத்துக்குள்ளானதில் அவர் தலைப்பகுதியில் அடிபட்டு இரத்தம் வெளியேறிய...

யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் கையூட்டு வாங்கினார் என்ற குற்றச்சாட்டை அந்தச் சங்கத்தின் புதிய தலைவர் முன்வத்ததையடுத்தே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர...

தியாக தீபம் தீலிபனின் நினைவுத்தூபி, யாழ் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ளதால் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும் என யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிகையிலையே அவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “செப்டம்பர் 26ம் நாள் 1987ம் ஆண்டு எமக்கெல்லாம்...