- Saturday
- February 22nd, 2025

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் 3 க்கு புதிதாக 1090 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் 706 பேரையும், திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 384 பேரையும் ஆட்சேர்ப்பதற்காக இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த (07) வெள்ளிக்கிழமை வெளிவந்த வர்த்தமானியில் இவ்விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத்...

தொழில்வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் இம் மாதம் 14 ஆம்...

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக பணி செய்யும் கலாசாரமொன்றை ஏற்படுத்தும் வகையில் இளம் தலைமுறையினரை பேண்தகு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நம்பகமாகவும் தர்க்கபூர்வமான அடிப்படையிலும் பங்களிக்கச் செய்வது இதன் நோக்கமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள்...

தொழில்வாய்ப்பற்ற சகல பட்டதாரிகளுக்கும் இவ்வருடத்தில் தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ராஜகிரிய, கோட்டே பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். எந்தவித...

பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினூடாக குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாதிரி விண்ணப்பப்படிவம் ஜனவரி 20ஆம் திகதி செய்தித்தாள்களில்…… நேர்முகப் பரீட்சை பெப்ரவரி 26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள்….. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு 06 மாதகால பயிற்சி…… பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு… பயிற்சியின் பின்னர்...

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பயணிகள் போக்குவரத்து மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் 54 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதாகவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத் தரும் பொறுப்பினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வாரமளவில் இவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படவுள்ளதாகவும்...

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 1 இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன. பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால், பயிலுனர் பதவிகளிற்கான முதலாம் கட்ட ஆட்சேர்ப்பிற்கான விபரங்கள் இன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 100,000 வேலைவாய்ப்பிற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கிறது. இதற்கான மாதிரி விண்ணப்படிவத்தை நீங்கள் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவில் பெற்று, பூர்த்தி...

குறைந்த வருமானம் பெறும் மற்றும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கப்படவுள்ள 100,000 வேலை வாய்ப்புகள் தொடர்பான, பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, இதற்கான பொருத்தமான ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் விண்ணப்பங்கள் ஜனவரி 20 க்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும். பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் நோக்கம், மிகவும் வறிய...

சுமார் 50 ஆயிரம் உள் மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதிகு முன்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மேலும் இந்த நியமங்கள் வயதைக் கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் பேரை பொலிஸ் சேவைக்குள் இணைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து பொலிஸ் சேவைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 200 பேர் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கும் ஆயிரத்து 400 பேர் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கும் 400 பெண்கள், பெண் பொலிஸ் கொஸ்தாபல்...

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் இந்த திட்டத்தினை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான உத்தேச திட்ட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்றுள்ளது. சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கான தகைமைகளை பூர்த்தி செய்தும் அது கிடைக்காத...

ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வித் தகைமை கொண்டவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சியை...

புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 பட்டதாரி இளைஞர்களை வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கு வேலை வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த இளைஞர்கள் 20 பேருக்கும் புனர்வாழ்வு திணைகளத்தால் புனர்வாழ்வுக்கு உட்பட்டுள்ளதாகவும், புதிய திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கோரியுள்ளதாகவும் அமைச்சரவைக்கு பத்திரம் முன்வைக்கப்பட்டது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உயர் கல்விக்கு உட்பட்டிருந்தாலும், 20 பட்டதாரிகளும் “சிவில் சமூகங்களால் தங்கள் தகுதிநிலை...

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் பத்து பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது, குறித்த பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்....

வேலையற்ற பட்டதாரிகளில் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் நாடு பூராகவும் வழங்கப்பட்ட 16 ஆயிரத்து 800 பேருக்கான நியமனத்தில் வடக்கு மாகாணம் முழுமையாக ஆயிரத்து 905 பேருக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விபரங்கள் 5 மாவட்டச் செயலகங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் மாவட்ட ரீதியில் சேகரிக்கப்பட்டு அவர்களிற்கான நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்ற நிலையில்...

வட மாகாணத்தை சேர்ந்த 5000 இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் கொண்டுள்ள திறன்களின் அடிப்படையில் இலவசமாக NVQ தகமை மட்டம் III அல்லது IV வழங்குவதற்கான விசேட செயற்திட்டமொன்று கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வழிப்படுத்தலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த மூவாயிரம் (3000) இளைஞர் யுவதிகள் மற்றும் கிளிநொச்சி...

வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆயிரத்து 117 தொண்டர் ஆசிரியர்களுக்கு வரும் 27ஆம் திகதி நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்படவுள்ளது. அவர்களது பெயர் விவரங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பிரிவு வெளியிட்டுள்ளது. இவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு வரும் 27ம் திகதி 2 மணிக்கு இல.294, திருகோணமலையில் உட்துறைமுக...

இலங்கை பொலிஸ் சேவைக்கான பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இலங்கை பொலிஸ் சேவைக்கான ஆண், பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் நாளை பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய பொலிஸ் பதவிக்கான விண்ணப்பங்கள், நாளை காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்வைத்து ஏற்றுக்கொள்ளப்படும் என, யாழ் மாவட்ட...

நாட்டில் 22 ஆயிரம் பட்டதாரிகள் விரைவில் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் இதற்கான ஆட்களை இணைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதற்காக பனை...

வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் 81 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (20) பிற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது. 57 தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் 15 கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களும் 9 விவசாய...

All posts loaded
No more posts