- Sunday
- February 23rd, 2025

99X Technology,d இணை ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம், SLASSCOM,d; 2015/16 பருவ காலத்துக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற SLASSCOM வருடாந்த பொது ஒன்றுகூடலின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்பம்/மென்பொருள் முகாமைத்துவம் ஆகியவற்றில் சேகரம் சுமார் 25 வருட கால சர்வதேச அனுபவத்தைக் கொண்டுள்ளார். அத்துடன், இவர்...

சிறந்த கணினித் தொடர்பாடல் திறமைகள், படைப்பாற்றலினுடாக புதிய கண்டுபிடிப்புக்களை வழங்கும் இளம் தொழில்நுட்பவல்லுநர்களை அடையாளங்காணும் போட்டி நிகழ்ச்சியான Yarl Geek Challenge இன் நான்காவது பருவத்தின் அறிமுகமும் ஆரம்பமும், எதிர்வரும் சனிக்கிழமை (12) மதியம் 1.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலைய மண்டபத்தில்...

பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமத்தனமான ஆண்ட்ராய்ட் திறன் பேசி செயலி ஒன்று வலம் வருவதை இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 'அடல்ட் பிளேயர்' என்ற இந்த செயலி பயனாளிகளுக்கு ஆபாசப் படங்களைக் காட்டும், ஆனால் உண்மையில் அது ஃபோனில் முன்பக்கத்து கேமராவை ரகசியமாக இயக்கி பயனாளியை படம் பிடித்துவிடும். பின்னர் இந்த செயலி...

இலங்கை உள்ளிட்ட ஆசிய மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த அகதிகள் தங்குவதற்கும், நிதியுதவி பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வதற்கும் ஒரு புதிய இணையத்தளத்தை ஜேர்மனியை சேர்ந்த தம்பதிகள் உருவாக்கியுள்ளனர். பெர்லின் நகரை சேர்ந்த மரெய்கே கெய்லிங் (28) மற்றும் ஜோனஸ் ககோஸ்கே (31) என்ற தம்பதியினர், அகதிகளுக்கு பலன் ஏற்படும் வகையில் http://www.refugees-welcome.net/...

வழமையாக புத்தகங்கள் மனிதர்களுக்கான அறிவூட்டல்களையே வழங்குகிறது. மனிதனும் புத்தகங்களிலிருந்து வேறுபட்ட அறிவுகளையே பெற்றுக் கொள்கிறான். ஆனால் தற்போது அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் புத்தகமானது நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்த உதவும் என தெரிவித்துள்ளனர். குடிக்கக்கூடிய புத்தகம் (‘Drinkable book’) என்ற பெயரிலான இந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமும் வௌ்ளி, செப்பு மற்றும் நனோ துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது. கழிவு...

கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதான சுந்தர் பிச்சை சென்னையைச் சேர்ந்தவர். சுந்தர்ராஜன் பிச்சை தான் இவரது முழுப் பெயர். சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்த இவர் பின்னர் ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும் பென்சில்வேனியாவில்...

இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற 2014 சூன் 15 அன்று, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்த இணைய பலூன்களில், சூரிய கல தகடுகளுடன், அன்ரெனாக்கள், கணினிகள், இலத்திரனியல் சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், மின்கலங்கள்...

நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதன்பின்னர், உலகிலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது...

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றில் தினமும் 2 மணி நேரத்திற்கு மேல் நேரத்தை செலவிடுபவர்களுக்கு மனோநோய் ஏற்படுவதோடு அவர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆபத்து இருப்பதாகவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கனடாவில் உள்ள ஒட்டாவா பொது சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த ஹியூக் சம்பாசா கன்யிங்கா மற்றும் ரொசாமண்ட் லூயிஸ் என்ற ஆராய்ச்சியாலர்கள் இது தொடர்பாக ஆய்வு...

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விவசாயபீட மாணவனொருவன் அரிய கண்டுபிடிப்பொன்றை கண்டுபிடித்துள்ளார். தானியங்கி முட்டை பொரிக்கும் இயந்திரமொன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். விவசாயபீடத்தின் இறுதியாண்டு விவசாய இயந்திரவியல்துறை மாணவனான வாகீசன் டிவாகர் இதனை கண்டுபிடித்துள்ளார். இவர் யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர். இதுவரை பாவனையில் உள்ள தானியங்கி முட்டைபொரிக்கும் இயந்திரங்கள் அனைத்தையும் விட தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாகவும், அதிக வசதிகளை கொண்டதாகவும்,...

இலங்கை அரசாங்கத்தால் பொது இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ள வைஃபை எனப்படுகின்ற கம்பிஇல்லாத இணையத் தொடர்பு சேவையானது நாட்டிலேயே யாழ்ப்பாணத்தில் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கண்டறியப்பட்டிருக்கின்றது. நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள பொது நூலகம், ரயில் நிலையம் போன்ற 100 இடங்களில் அரசின் இந்த இலவச இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. இணையத்திற்கான இந்த இலவச சேவையைப்...

அன்றாட வாழ்வில் சிக்கலை சந்திக்கும் பெரும்பாலானோர், அதிலிருந்து மீள வழி தெரியாத போது தற்கொலையை தான் தங்களின் ஒரே தீர்வாக தேர்ந்தெடுக்கிறார்கள். இதை தடுக்க கவுன்சிலிங், சேவை மையங்கள் என பல வழிகளை அரசுகள் பயன்படுத்தி வந்தாலும், தற்கொலையை கட்டுப்படுத்த முடியவில்லை. தென்கொரியாவில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை சம்பவங்கள், அரசுக்கும், பெற்றோருக்கும் பெரும்...

முன்பு, ஏழை மக்கள் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பணமின்றி தவிக்கும் போது பேஸ்புக் நிறுவனம் ஒரு ஷேருக்கு இத்தனை பணம் என்று கொடுத்து வந்தது. இனி அப்படி பணமின்றி தவிக்கும் மக்களுக்கு நம்மால் முடிந்தளவு பணத்தை, அதுவும் ஒரு புகைப்படத்திற்கு லைக் கொடுக்கும் நேரத்தில் பணம் கொடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்?....

ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச தகவல்கள் அடங்கிய இணைப்புகளை (லிங்க்) முகப்புத்தக கணக்குகளுக்கு அனுப்புவதன் மூலம் முன்னெடுக்கப்படவிருந்த பாரியதொரு சமுக சீரழிவு, அமெரிக்காவிலுள்ள முகப்புத்தக தலைமையக அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்தார். இவ்வாறான இணைப்புக்கள் கிடைப்பதான ஐந்து முறைப்பாடுகள், இலங்கை...

புதிய கையடக்கத் தொலைபேசி வாங்குவது முதல் காதலி பிரிந்து போன சோகம் வரை இன்றைய இளசுகள், தன் சுக துக்கங்களை முதலில் தெரிவிப்பது பேஸ்புக்கில்தான். எனவே, ஒரு மனிதனின் மனநிலையை பேஸ்புக்கினால் புரிந்து கொள்ள முடியும். இந்த வகையில் பயனாளிகளின் தற்கொலை எண்ணத்தை சரியான நேரத்தில் புரிந்து கொண்டு அதை தடுப்பதற்கான ‘உயிர் காப்பான் தோழன்’...

முகப்புத்தக கணக்கு (Facebook) வைத்திருப்பவர் இறந்ததன் பின்னர் அக்கணக்குக்கு என்ன நடக்கும்? இது யாரும் எதிர்பார்க்காத பிரச்சினையாகும். எனினும், முகப்புத்தக (Facebook) நிறுவனம் இந்த பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. அதன் பிரகாரம் முகப்புத்தக (Facebook) கணக்கு உரிமையாளர் மரணமடைந்ததன் பின்னர் அக்கணக்குக்கு என்ன நடக்கும் என்பதை அக்கணக்கின் உரிமையாளர் உயிருடன் இருக்கும் போதே தீர்மானித்துகொள்ள...

நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் மாற்றத்துடன் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) தலைவர் பதவி மற்றும் பணிப்பாளர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மாற்றமானது புதிய அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வகையில் புதிய தலைவராக நியமிக்கப்ட்டுள்ள திருமதி சித்ராங்கனி முபாரக் நேற்று முன்தினம் (09) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். முகாமைத்துவ பணிப்பாளராக...

உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் பல லட்சம்பேர் இன்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தங்களின் பேஸ் புக் கணக்குகளை தொடர்புகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் இந்த அளவுக்கு செயற்படாத மோசமானதொரு நிலைமை ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன்...

உலகின் முதல்தர சமூக வலைத்தளமான முகப்புத்தகம் என்றழைக்கப்படும் Facebook தளம் சற்றுமுன்னர் முடங்கியது ”. "Sorry, something went wrong. We're working on getting this fixed as soon as we can." என்ற செய்தி வருவதாக பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். முகப்புத்தகம் 1.32 பில்லியன் மாதாந்த பயனாளர்களை கொண்டமை குறிப்பித்தக்கது.

மென்பொருள் துறையின் ஜாம்பாவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான "விண்டோஸ் 10" ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் விண்டோஸ் 10 மென்பொருளை, அனைத்து விண்டோஸ் மற்றும் விண்டோஸ் மொபைல் பயனாளிகள் இலவசமாக அப்கிரோடு செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம்...

All posts loaded
No more posts