- Tuesday
- February 25th, 2025

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.இந்த போட்டிக்கான இரண்டு அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவையும் இருக்காது என்று கூறப்படுகிறது.எனினும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்று அணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேநேரம், இந்த தொடர் இலங்கை வீரர் டி.எம். டில்சானின் இறுதி சர்வதேச கிரிக்கட்...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி, 4-1 என தொடரையும் நலுவ விட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, முன்னதாக இடம்பெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதன்படி டெஸ்ட் தொடரை 3-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது. அத்துடன், ஐந்து ஒருநாள் போட்டிகளில்...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி, தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பையும் நலுவ விட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, முன்னதாக இடம்பெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதன்படி டெஸ்ட் தொடரை 3-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது. அத்துடன், திட்டமிடப்பட்டுள்ள ஐந்து ஒருநாள்...

தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 28ம் திகதி இடம்பெற்ற போட்டியால், பெருமளவு இலாபம் கிட்டியுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த 3வது ஒருநாள் போட்டியில், நுழைவுச் சீட்டுக்கள் (டிக்கெட்டுக்கள்) விற்பனையால் 4.6 மில்லியன் இலாபம் கிடைத்துள்ளதாக, அந்த மைதானத்தின் பொறுப்பதிகாரி மற்றும் முகாமையாளர் சுஜீவ கொடலியத்த குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குறித்த போட்டியைப்...

ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற இலங்கையின் சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது. நேற்றய தினம் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 444 ஓட்டங்களைக் குவித்துள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்ட...

இலங்கை அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையைத் தனிப்பட்ட விடயம் எனக் குறிப்பிட்ட திலகரட்ண டில்ஷான், அதுபோன்ற தனிப்பட்ட விடயங்கள் குறித்துக் கவலைப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த போதிலும், அணித்தலைமையிலிருந்து நீக்கப்பட்டமை வலித்ததாகத் தெரிவித்தார். இலங்கையின் முன்னாள் தலைவரான திலகரட்ண டில்ஷான், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து, நேற்று முன்தினம் இடம்பெற்ற இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3ஆவது போட்டியுடன்...

அண்மையில் பிரேசில் ரியோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டித் தொடரில் இலங்கையின் சார்பில் 9 வீர வீராங்கணைகள் பங்கேற்றிருந்தனர். ஆனால் இவர்களுடன் மொத்தமாக 46 அதிகாரிகளும் பிரேசில் சென்றிருந்தனர். ஒன்பது வீர வீராங்கணைகளுக்காக ஏன் 46 அதிகாரிகள் பிரேசில் சென்றார்கள் என்பது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய ஒலிம்பிக்...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 42 ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர் திலகரத்னே டில்ஷான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான டில்ஷான் தம்புல்லாவில் நடக்கும் 3வது ஒருநாள் போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறப் போவதாக தெரிவித்திருந்தார். இதன்படி நேற்று களமிறங்கிய டில்ஷான் தனது...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, இரண்டு விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று தம்புள்ளை விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணியின் ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக ஐந்து ஓட்டங்களுடன் வௌியேறி அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து களத்தில் இருந்த டில்ஷானுடன்...

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தின் எதிர்காலமாக, இளம் வீரர் குசல் மென்டிஸ் மாறுவார் என, அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2ஆவது போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 3ஆவது...

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கு மத்தியில், அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பவுள்ளார். கடந்த புதன்கிழமை இடம்பெற்ற 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் முடிவிலேயே அவர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளார். இதன்படி, அடுத்த 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் அதைத் தொடர்ந்துவரும் 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் ஸ்மித்...

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திலஹரத்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். 329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 10,248 ஓட்டங்களை குவித்துள்ளதோடு, 22 சதங்கள் மற்றும் 47 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார். மேலும் 78 இருபதுக்கு இருபது போட்டிகளை சந்தித்துள்ள அவர், 1 சதம் 13 அரைச்சதங்கள் அடங்களாக...

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய, திலகரட்ன டில்ஷான் ஆகியோரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை மயிரிழையில் இலங்கையணியின் உப தலைவர் தினேஷ் சந்திமால் தவறவிட்டுள்ளார். குமார் சங்கக்கார, சனத்...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், நேற்று 2வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது....

இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் ஹூட்டர்ஸ் ஒலி மற்றும் ஹோர்ன் ஒலி பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (cope) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துநெதி இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றிற்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்...

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போர்ட் ஒஃப் ஸ்பெயினில் இடம்பெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி, வெறும் 22 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் முடிவுக்கு வந்தது. எனவே, இந்திய அணி 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரித்திமான் சகாவினால் கீழ் வரிசையில்...

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பிற்பகல் 2.30மணிக்கு கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பிக்கிறது. சொந்த மண்ணில் இடம்பெறுகின்ற தொடராக இருந்தாலும் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வென்ற நிலையில் அழுத்தத்துடனேயே இலங்கை அணி களமிறங்குகிறது. முதலாவது போட்டியில் ஆறு சுழற்பந்துவீச்சாளர்கள் தெரிவுடன்...

தென்னாப்பிரிக்காவுக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான எதிர்வரும் கிரிக்கட் தொடரிலும், வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இணைத்துக் கொள்ளப்படமாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இந்த வருட ஆரம்பத்தில் காயமடைந்த அவர், ஐ.பி.எல். போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றிருந்த நிலையில் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர் அடுத்த...

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 3-0 என ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்தது. இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது. பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போடடிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததால் பாகிஸ்தான்...

All posts loaded
No more posts