- Tuesday
- February 25th, 2025

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள மக்களின் காணிகள் நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அவர்களின் காணிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்க தனியான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார். இந்தக் குழு ஒரு வாரத்துக்குள் தரவுகளை சேகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்படும் இதன் பின்னர் அவரது பணிப்புக்கு அமைய...

புதிய தரவுகள் சேகரிப்பு என்பது தமது மீள்குடியேற்றத்தை இழுத்தடிப்பு செய்வதற்கான நடவடிக்கை என வலி.வடக்கு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வலி.வடக்கின் மீள்குடியேற்றம் புதிய தரவுகள் சேகரிக்கும் ஆரம்ப கட்டத்துடன் நிற்பது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தினை தந்துள்ளதாக அந்தமக்கள் தெரிவிக்கின்றனர். வலி. வடக்கில் மக்களை மீளக்குடியேற்றும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட...

யாழ் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மீள்குடியேற்றப்பட வேண்டிய இடங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், நேற்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேனா ஹெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்றது. யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மீள்குடியேற்றப்பட வேண்டிய இடங்கள்...

தேசிய பாதுகாப்பு நலனுக்கு தேவைப்படும் காணிகள் எவையும் வடக்கில் விடுவிக்கப்படாது. அதற்குப் பதிலாக உரிமையாளர்களுக்கு மாற்று காணிகள் வழங்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தக் குழு ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை மக்களின் காணிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையில், அந்நிகழ்வு திடீரென மறு அறிவித்தல் வரும்வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளினால் உரிய மக்களிடம் கையளிக்கப்படவேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி...

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடிமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (19) பிற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நத்தார் விழாவில் கலந்துகொண்டபோது இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம் ஒன்றுக்குச் சென்று அவர்கள் பற்றி விசாரித்ததுடன், அவர்களை மீள்க்குடியமர்த்துவதற்கான காணிகளை காண்பிக்கும் நடவடிக்கைகள் ஆறு மாத...

அண்மையில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பலாலி வயாவிளான் மற்றும் தையிட்டி பகுதிகளில் உள்ள மக்கள் தமது காணிகளில் உள்ள இயற்கை வளங்களை கூட பாதுகாக்க முடியாத நிலமையில் காணப்படுகின்றார்கள். கடந்த இருபத்தைந்து வருடங்களாக இடம்பெயாந்து தமது வீடு வாசல்களை இழந்து சொத்துக்களை இழந்து பல்வேறு துன்ப துயரங்களுக்கும் உள்ளாகிய...

யாழ்ப்பாணத்தில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். பலாலி படைத்தலைமையகத்தில் நேற்றுமுன்தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை படையினர் விடுவிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை...

யாழ்ப்பாணம் அல்-ஹதீஜா மகளிர் மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலையில் சுமார் 6 வருடங்களாக தங்கியிருக்கும் தங்களை மாற்று இடமொன்று வழங்காமல் அங்கிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகக் கூறியே குறித்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையில் தற்போது 13 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990ஆம்...

தேசிய பொங்கல் விழா இடம்பெற்ற ஆலயம் அமைந்துள்ள பலாலி பகுதி இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களின் இருப்பிடங்கள் என்பதால் இதனை நேரடியாக பிரதமரிடம் எடுத்துக்கூறவே தேசிய பொங்கல் விழா வழிபாட்டில் கலந்துகொண்டேன் என மாவை சேனாதிராசா தெரிவித்தார். பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையானது அப்பகுதியை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றதா? அல்லது ஜனாதிபதி பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறும் பகுதியை படைமுகாம்கள் அற்ற பகுதியாகக் காட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சியா என பொதுமக்கள்...

வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட மயிலிட்டி இறங்குதுறையில் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வர்த்தகர்கள் கடற்படையினரின் உதவியுடன் பொருட்களை இறக்குமதி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் முப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த இறங்குதுறை காணப்படுதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் மயிலிட்டி பகுதியைச்...

எதிர்வரும் 15ஆம் திகதி பொங்கல் தினத்துக்கு முன்னதாக 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை திங்கட்கிழமை (11) மாலை நேரில் சென்று பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

அண்மையில் யாழ் மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் தயாராகவுள்ள என இலங்கைக்கான நோர்வே நாட்டு தூதுவர் Thorbjørn Gaustadsæther தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) வதிவிடப்பிரதிநிதி ஜோர்ன் சொரேன்சென் (Joern Soerensen) க்கும் தூதுவருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த புரிந்துணர்வு...

வலிவடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலய எல்லைப் பகுதிகளில் வெடிப்பொருட்கள் இருப்பதற்கான அபாய எச்சரிக்கை காணப்படுவதால் மக்கள் குடியேறுவதில் அச்சம் வெளியிடுகின்றனர். அத்துடன் இராணுவத்தினர் அமைத்திருந்த பதுங்கு குழிகள் மற்றும் மண் மூட்டைகள் அடுக்கப்பட்ட பாதுகாப்பு அரண்கள் போன்றனவும் அகற்றப்படாமல் இருப்பதால் அவற்றிலும் வெடி பொருட்களின் அபாயம் இருக்கலாம் என கருதி...

தங்கள் வீடுகள் 1987ஆம் ஆண்டு இருந்தமையும், தற்போது இருந்த இடமே இல்லாமல் அழிக்கப்பட்டதையும், வலிகாமம் வடக்கு மக்கள் புகைப்பட ஆதாரத்துடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் காட்டினர். உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்குப் பகுதிகளை முதலமைச்சர், வியாழக்கிழமை (07) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போதே மக்கள்...

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் பொதுமக்களின் ஏழாயிரம் ஏக்கர் நிலம் படையினர் வசம் இன்னும் உள்ளது என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி எம் சுவாமிநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் அதை சிறிது சிறிதாக அந்த நிலங்களை தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத வகையில் விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் அவர் கூறுகிறார். அண்மைக்...

தெல்லிப்பழை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 5840 ஏக்கர் காணியில் 984 ஏக்கர் காணியை விடுவித்து 2050 குடும்பங்களை அங்கு மீள்குடியேற்ற இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்- நல்லிணக்கம் மற்றும்...

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்ட வலி.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினர் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை வரைபடங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. வலி.வடக்குப் பிரதேசத்தில் 700 ஏக்கர் நிலப்பரப்பு அண்மையில் விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பில் வீமன்காமத்தில் இராணுவ முகாம் இருந்த நிலமும் அடக்கம். இந்தப் பகுதிக்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கான தலைமை முகாமாக செயற்பட்டிருக்கலாம்...

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 65,000 வீடுகளை கட்டும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளின் தேவை என்பது இதைவிட இருமடங்கு அதிகமாக இருந்தாலும் முதல் கட்டமாக இதை முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளது என மீள்குடியேற்றத்துறை துணை அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். அந்தப்...

All posts loaded
No more posts