- Saturday
- February 22nd, 2025

யாழ். குடாநாட்டின் கிழக்கு கடல் பகுதியில் ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் கிழக்கு கடலில் இருந்து 750 கிலோ மீற்றர் தூரத்திலே சூறாவளி மையம் கொண்டுள்ளதாகவும் இதனையடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் இலங்கை வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளிவரவுள்ளன என பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படுவதுடன் நாளை நண்பகல் முதல் கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை முடிவுகளை பரீட்சைத் திணைக்களத்தில் சென்று நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக அமைச்சரும் ஈ.பி.டி.பியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வி இவ்வாறு தெரிவித்துள்ளார்.வடக்கில் ஆட்கடத்தல்களில் ஈ.பி.டி.பி ஈடுபட்டதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவே தாம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக...

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கலாசார பிறழ்வு மற்றும் போதைப் பொருள் பாவனையிலிருந்து யாழ்.மக்களை பாதுகாப்பதற்காகவும் யாழின். கலாசாரத்தினை பேணுவதற்காகவும் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் புதிய குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அதன் பிரதிநிதி சீ....

தமிழீழ விடுதலைப் புலிகளை விட தமிழ் தேசிய கூட்டமைப்பு மோசமாக நடந்து கொள்கிறது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று புதன்கிழமை(21.12.2011) நாடாளுமன்ற கட்டடத்தில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே பசில் ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்பதை கடந்த காலங்களில் நடந்த...

பாடசாலைகளுக்கான 2012ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் 203 நாட்கள் நடைபெற வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம் குணசேகர அறிவித்துள்ளார்.அத்துடன் அதற்கான தவணைகள் பற்றிய விபரத்தினையும் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் யாவும் ஜனவரி 2ம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 5ம் திகதி வரை...

இலங்கையின் 14 கரையோர மாவட்டங்களில் சுனாமி முன்னெச்சரிக்கைக்கான ஒத்திகை நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.இதற்கமைய கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, போன்ற மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் இந்த ஆழிப்பேரலை முன்...

கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது பொறுப்புக் கூறும் விடயங்களை கையாள்வது தொடர்பில் அர்த்தபுஷ்டியான வலுவான முறைமைகளை கையாள்வதிலும் இருந்து முற்று முழுதாக தவறிழைத்து விட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் 13 பேர் கையொப்பமிட்டு சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பி வைத்துள்ள மேற்படி ஊடக அறிக்கையில் மேலும்...

சபையை கட்டுப்படுத்த வேண்டியது அக்கிராசனத்தின் பொறுப்பு. ஆளும் கட்சியின் பிரதம கொறடாவே! உங்களுடைய உறுப்பினர்களை கட்டுப்படுத்தவும் இடையூறுகளை தாங்க முடியவில்லை. சினம் பிடித்த நாய்கள் கூக்குரல் இடுகின்றன என்று சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் எம்.பி.யான சுமந்திரன், கோமாளியை சபையை விட்டு வெளியேற்றவும் என்றும் கோரி நின்றார்.பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் தமிழ்த்...

புலம்பெயர் சொந்தங்களிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்தி சம்பாதிக்கும் பணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உல்லாசப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (19.12.2011) இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு காணி அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியதுடன் இதற்காக இந்திய மாநிலங்கள் மற்றும் ஏனைய நாடுகளின் காணி அதிகாரங்களை...

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் மற்றும் ஏனைய நிர்வாகிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிலையிலேயே கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க 72 வாக்குகள் பெற்று மீண்டும் தெரிவாகியுள்ளார்.தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகியோர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது....

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனினால் வெளியிடப்பட்ட கருத்து பிழையானது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான ஓர் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

யாழ் மாவட்டத்தில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழவேண்டிய இடத்தில், இன்று சுமார் 1 இலட்சத்து 8 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 15 ஆயிரம் மக்களே வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18.12.2011) நடைபெற்ற ஆறுமுக நாவலரின் 132ஆவது குரு பூஜைத்தின...

யாழ் சதுரங்க சம்மேளனத்தால் யாழ் மாவட்டத்தில் முதல் முறையாக மின்னல்வேக சதுரங்கப்போட்டி, 20-20 சதுரங்கப்போட்டி என்பன நடாத்தப்படவுள்ளதாக சதுரங்க சம்மேளனத்தின் செயலாளர் கு.ஆதவன் தெரிவித்துள்ளார்.டிசெம்பர் மாதம் 26ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற உள்ள சதுரங்கப்போட்டியிலே இப்போட்டிகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர்.20-20 சதுரங்கப்போட்டி 9,11,13,15,17 ஆகிய வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலாருக்கும் நடைபெறவுள்ளது.மின்னல்வேக சதுரங்கப்போட்டி...

ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையும் ரயில்வே பாதை அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளன. (more…)

இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு எதிராக மின்பாவனையாளர்கள் மூவர் வழக்கு தாக்கல் செய்திருப்பதாக யாழ்.மவட்ட நீதிமன்றப் பதிவாளர் எஸ். ரெட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்டத்தில் சட்ட விரோத மின்பாவனையாளர்கள் அண்மையில் கைது செய்தமை தொடர்பாக பிரபல வர்த்தகர்கள் இந்த வழக்கைத் தொடுத்திருப்பதாகவும் அவர்களுக்கான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ்.நீதவான்...

கடந்த சில தினங்களாகச் செயலிழந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் குடாநாட்டுக்கான கேபிள் தொலை பேசி இணைப்புகள் இன்று வியாழக்கிழமை வழமைக்குத் திரும்பும் என ரெலிக்கொம் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.யாழ்.பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் தொலைத் தொடர்புக் கோபுரம் மீது கடந்த ஞாயிறன்று இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது. இதனால் அந்தக் கோபுரத்தில்...

யாழில் அதிவேகமாக பயணிக்கும் வாகனங்களினது வாகன உரிமைப் பத்திரம் யாழ்.மாவட்ட செயலகத்தினால் ரத்து செய்யப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்டத்தில் வீதிவிபத்துக்கள் அதிகரித்துள்ளதினால் இந்நடவடிக்கை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. (more…)

வட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில்த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம் என்றதலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts