காரைநகரில் மனநலம் குன்றிய யுவதியை முஸ்லிம்கள் இருவர் வன்புனர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

காரைநகரில் மனநலம் குன்றிய யுவதியை முஸ்லிம்கள் இருவர் வன்புணர்வுக்கு உட்படுத்திய செயல் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது (more…)

வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த த.தே.கூட்டமைப்பு நிலைப்பாட்டில் தளர்வு!

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டுமென்ற தனது நீண்டகால கோரிக்கையை தளர்த்தி, இவ்விடயம் குறித்து முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)
Ad Widget

மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு விசேட பொலிஸ் குழு : யாழ். டி.ஐ.ஜி

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் தர்ஷாந்தன் தாக்கப்பட்டமை தொடர்பாக விசாரிப்பதற்கு யாழ்.பிரதம பொலிஸ் பரிசோதகர் குணசேகரா தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) கே.ஈ.எல். பெரேரா தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற வாரராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கால வரையறையற்ற வகுப்பு பகிஷ்கரிப்பை திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் வரையில் கால வரையறையற்ற வகுப்பு பகிஸ்கரிப்பை மேற்கொள்ளோம் என மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளதுஇது தொடர்பில் மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

கூட்டமைப்பின் பதிவு விண்ணப்பம் மீண்டும் நிராகரிப்பு

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்தல் செயலகம் நிராகரித்துள்ளது.கட்சிப் பதிவு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் கட்சிப் பதிவினை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. (more…)

உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாம் இருக்கின்றோம்: மாவை எம்.பி

'எங்கள் உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். தென்பகுதி போர் வெற்றிக் கொண்டாட்டம் தமிழர்களின் கண்ணீரில் நெருப்பை மூட்டுவதாக இருக்கிறது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் வெள்ளிக்கிழமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாடில் இலங்கை...

முள்ளிவாய்க்கால் வலிகள் தந்த வாரம்: யாழ்.பல்கலையில் உணர்வு பூர்வமாகஅனுஷ்டிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் இரும்புக்கம்பித்தாக்குதல்! மாணவர்கள் முற்றுகைப்போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கோண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று...

யாழில் இராணுவ சிப்பாயைத் தாக்கிய பொதுமக்கள்

மதுபோதையில் கே.கே.எஸ் வீதியிலுள்ள கொத்து ரொட்டிக் கடையில் தகராறில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். (more…)

யாழ்பாணத்தைச் சேர்ந்த பெண் வைத்தியர் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர், தனக்கு தானே சிகிச்சை செய்து கொண்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் சிலாபத்தில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் வடமராட்சி வியாபாரி மூலையைச் சேர்ந்த வைத்தியரான திருமதி பிரணவன் நீராயா வயது 27 என்ற பெண் வைத்தியரே மரணமானவராவார். (more…)

யாழில் இராணுவத்தினரின் யுத்தவெற்றி நிகழ்வு!மாணவர்கள் படையினருக்கு சின்னம் சூட்டினர்.

யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு யாழ். பலாலியில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன், யுத்தத்தில் உயிரிழந்த படை வீரர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார்...

யாழ். பல்கலை மருத்துவபீடத்தின் ‘சுகவாழ்வை நோக்கி’ மருத்துவக் கண்காட்சி

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினால் 'சுகவாழ்வை நோக்கி' என்ற தொனிப்பொருளில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஒன்று நடத்தப்படவுள்ளது.யாழ். பல்கலைக்கழக மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியினை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். (more…)

திருடப்பட்ட தொலைபேசி, தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் 12 மணித்தியாலயத்திற்குள் கண்டுடிப்பு

யாழ். காரைநகர் பிரதேச செயலரின் தொலைபேசியைத் திருடியதாக கூறப்படும் நபரை யாழ். பொலிஸார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளனர் யாழ். நகரப்பகுதியில் வைத்து இன்று செவ்வாய்கிழமை காலை காரைநகர் பிரதேச செயலரின் கைப்பையில் இருந்த சுமார் 66 ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைபேசி திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது. (more…)

2012ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் இடாப்புக்களை திருத்த ஏற்பாடு

2012ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட்ட தேர்தல் வாக்காளர் இடாப்புக்களை யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இதற்கான கலந்துரையாடல்கள் வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளன. பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் தோறும் இக்கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள உதவித் தேர்தல் ஆணையாளர் பி.குகநாதன் தெரிவித்துள்ளார். (more…)

இந்த மாதத்துடன் வெளியேறுகிறது டனிஷ் கண்ணிவெடி அகற்றும் பிரிவு

யாழ்.மாவட்டத்தில் மிதிவெடி அகற்றும் செயற்பாடுகளில் டனிஷ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம், ஹலோட் ரஸ்ற் மற்றும் இராணுவத்தினரின் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பிரிவு ஆகியன ஈடுபட்டு வந்தன. தொடர்ச்சியாக நிதிப் பற்றாக்குறைகள் இருப்பதன் காரணமாக டனிஷ் கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் தனது பணியாளர்களைக் குறைத்துக் கொண்டு வந்தது. இந்த நிலையில் தொடர்ந்தும் இயங்க முடியாத இக்கட்டான...

யாழ். மாவட்ட புதிய அரச அதிபர் இன்று பதவியேற்பு

யாழ்.அரச அதிபராகக் கடமையாற்றி திருமதி இமெல்டா சுகுமார் இடமாற்றம் பெற்று ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் நிலையிலேயே, மட்டக்களப்பு அரச அதிபராக கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் யாழ்.அரச அதிபராக நியமிக்கப்பட்டார். (more…)

முதலாவது பெண் அரச அதிபராகி பெருமை சேர்த்தவர் இமெல்டா- அரச அதிகாரிகள் பலரும் பாராட்டு

யாழ். மாவட்டத்தின் முதலாவது பெண் அரச அதிபராகப் பதவியேற்று, மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து சேவை செய்து மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்று, தேசிய விருதுகளை வென்று மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்தவர் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்.இவ்வாறு திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலர்கள், கணக்காளர்கள், திட்டப் பணிப்பாளர்கள், சிற்றூழியர்கள் அனைவரும் அவரை நேற்றுப் பாராட்டி வாழ்த்தினர். (more…)

யாழில் நடைபெற்ற அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான கருத்தரங்கு

ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான இரண்டாவது வழிகாட்டல் கருத்தரங்கு யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ்ப்பாண எம்.பிக்களின் எண்ணிக்கை மேலும் குறையும்

2011ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் யாழ். மாவட்டத்துக்குத் தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போது 9 ஆசனங்களாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6 ஆகக் குறைந்தது. பெரும் பாலும் புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் இது 5 ஆகக் குறையக் கூடும் என்று தேர்தல் திணைக்கள...

அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றலாம்

மணல் ஏற்றிச் செல்வதில் ஏற்பட்டு ள்ள சிக்கலைத் தவிர்க்கும் வகை யில் வியாழக்கிழமை முதல் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்வதற்கான அனு மதியினை அரசாங்கம் வழங்கியுள் ளது என்று சுற்றாடல் துறை அமைச் சர் அநுர பிரியதர்­ன யாப்பா நாடாளு மன்றத்தில் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts