- Monday
- February 24th, 2025

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் தேர்தல் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், வேட்பாளர்கள் அமைத்துள்ள தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை (12) நள்ளிரவு வரை...

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸார் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜருள் தெரிவித்துள்ளார். சுன்னாகம் பகுதியில் கடந்த சனிக்கிழமை வான் - மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வாகன...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. இதேவேளை, நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும்...

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூடப்படும் பாடசாலைகள் மீண்டும் நவம்பர் 18 ஆம் திகதி திறக்கப்படம். நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

தெற்கில் இருக்கும் மக்கள் வழங்கியுள்ள ஆணையை போன்று அல்லது அதற்கும் பலமான ஒரு ஆணையை மக்கள் எங்களுக்கு வழங்குவது ஊடாக தான் வட கிழக்கிலுள்ள மக்களின் பிரிக்க முடியாத மற்றும் உதாசீனப் படுத்த முடியாத நெருக்கடியை உருவாக்க முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வேட்பாளருமான கஜேந்திரகுமார்...

பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள்...

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் நவம்பர் 25 ஆரம்பமாகி டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறும். குறித்த பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் கால அட்டவணைகள் அந்ததந்த பாடசாலை அதிகர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள், கால அட்டவணைகள் தபால்...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமாரின் 2020-2-24 காலப்பகுதி பாராளுமன்ற உரைகள் நுாலாக வெளியிடப்பட்டுள்ளது அதனை இங்கே தரவிறக்கம் செய்யலாம் Gajenthirakumar-Final-1

நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் அரசாங்கத்தின் நியமனத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பனை அபிவிருத்தி சபைக்கு புதிய தலைவர் நியனம் மற்றும் அவர் அச் சபையின் ஊழியர்களுடன் நடந்து கொள்ளும் அநாகரிகமாக செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதிவியேற்ற பின்னர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக...

இம்முறை பொதுத் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. இம்முறை பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்றும் (07) நாளையும் (08)...

பிரசார மேடைகளில் சுமந்திரனின் பெயரைத் தவிர்த்து முடிந்தால் ஏனைய கட்சிகள் உங்களது தேர்தல் பரப்புரைகளை செய்யுங்கள் பார்க்கலாம் என தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் சவால் விடுத்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு முதலில் வெளியேறியவர்கள்...

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின்...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் தனது வீட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை (05) மாலை பிரச்சார பணிகளுக்காக காரில் பயணித்த போது கார் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காரில் சசிகலா ரவிராஜ் இருந்த...

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வாக இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளமுடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.எம்.டி.நிலுஷா பாலசூரிய தெரிவித்தார். இம்முறையானைது நாளை மறுதினம் (06) முதல் அமுலுக்கு வரும்...

2024 (2025) க்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (05) முதல் 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic மூலம் இணையவழியூடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என திங்கட்கிழமை (04) வெளியிடப்பட்ட அறிக்கையில் பரீட்சை திணைக்களம்...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரைக்கூட்டம் நேற்று மாலை 4 மணியளவில் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை வேட்பாளர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பாலச்சந்திரன் கஜதீபன் கலந்து கொண்டனர். இதில் கலந்தது கொண்டு பேசிய வேட்பாளர் தருமலிங்கம் சித்தார்த்தன் உரையாற்றுகையில்... ஜேவிபி கட்சிக்கு அளிக்கும் வாக்கு மிகவும்...

உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்துவிட்டோம். இனங்களுக்கிடையே புரிந்துணர்வு இன்மை மற்றும் சம உரிமை கிடைக்காமை முதலான காரணங்களால் உள்நாட்டு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கான வளிமண்டலச் சூழல் சாதகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில்...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொது மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பின் அடிப்படையில் தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பின்றி வாக்களிக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளதாக...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் மூன்றாம் நாள் இன்றாகும் (04). கடந்த ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்குகளை அளிக்க முடியாத முடியாத முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது....

All posts loaded
No more posts