- Monday
- February 24th, 2025

எம்.ஏ.சுமந்திரனின் சேவை தமிழ் மக்களுக்கு தேவை அவர் பொறுமையாக இருந்து வடமாகாணசபை முதல்வராக வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். நேற்று (17) வவுனியாவில் நடந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தின் போது, சிறிதரன் இதனை தெரிவித்தார். சுமந்திரன் அவசரப்படக்கூடாது. அவரது சேவை...

மட்டக்குளி பிரதேசத்தில் சனிக்கிழமை(16) இரவு ரோந்து பணியின் போது. கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி...

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரியவருகிறது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது...

என்மீது கட்சிவைத்த நம்பிக்கையை ஏற்று இந்தபகுதி மக்களுக்கு முழுமையான சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. பாரிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினராக இருந்த போது பல...

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் அறிவித்துள்ளார். ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் வேலணை மத்திய கல்லூரி விடுதி வாக்களிப்பு நிலையம், சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலய நால்வர் மணிமண்டபத்திற்கும், நாரந்தனை தெற்கு பொது நோக்கு மண்டப வாக்களிப்பு நிலையம், நாரந்தனை தெற்கு கிராம சக்தி...

நாடாளுமன்ற தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது. வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும்...

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளார். சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர்....

கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆனையிறவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த போது அந்த வீதி தடையை 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆணையிறவு மீட்கப்பட்டு மீண்டும் ஆணையிறவு வீதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் 8 வருடங்களின் பின்னர் அதாவது...

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் செல்வாக்கின் கீழ், இன்றும் (13) அடுத்த சில நாட்களிலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு வளிமண்டலச் சூழல் சாதகமாக உள்ளது. வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும். பிற இடங்களில் மாலை அல்லது இரவில்...

வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்க முடியும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவே வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. ஆகவே வாக்காளர் அட்டை உள்ளவர்கள் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டையை கொண்டு செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆளடையாள அட்டை இல்லாவிடின் வாக்குச்சீட்டு வழங்கப்படமாட்டாது. அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாதவர்கள் தமது வதிவிட கிராம சேவகரை...

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இக் கலந்துரையாடலில் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து நாளைய வாக்களிப்பு நிலையங்களுக்கு சிரேஷ்ட தலைமை தாங்கும்...

பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட போது குறித்த 12 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மது, புகைத்தலுக்கு எதிராக தலைவர் பிரபாகரன் கட்டளையிடமுன்னர் தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமத்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று காலை 10.30 மணியளவில்...

தென்மேற்கு வங்காள விரிகுடா கடலில் இன்று (12) தாழமுக்க வலயம் உருவாக வாய்ப்பு உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன் செல்வாக்கின் காரணமாக, நாளை (13) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வளிமண்டல நிலைமைகள் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் (12) வட மாகாணத்தில் பல தடவைகள் மழை...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை, குழுக்கள் குழுக்களாக மியான்மாரில் உள்ள சைபர் முகாம்களுக்கு அனுப்புவது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய அதிரடிப்படை எச்சரித்துள்ளது. அண்மைக்காலமாக அதிகளவான இலங்கையர்கள் குறித்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, அதிக கணினி அறிவு உள்ளவர்களை அதிக சம்பளம் வழங்குவதாகவும், வேறு நாடுகளில் வேலைக்கு அனுப்புவதாகவும்...

தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ்...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை விளக்கினார். "கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கையின் சிறிய விரலுக்கு...

சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை (7) முதல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் மீள செலுத்தப்பட்டது. இலங்கை - இந்திய கப்பல் சேவை தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளதாவது, மழையுடனான வானிலையினால் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது....

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தயாராக உள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று (10) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். வடக்கில் தமிழ் மக்களின்...

சுன்னாகம் பொலிஸாரின் அராஜகத்தை தொடர்ந்து, குறித்த அராஜகத்தை மேற்கொண்ட பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு விசேட இடமாற்றம் செய்வதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன. சுன்னாகம்...

All posts loaded
No more posts