ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இன்னும் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார் நாடாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதன்படி 18ஆம் திகதியும் பெரிய...

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – கள ஆய்வில் ஈடுப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரி, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதோடு, கள விஜயத்திலும்...
Ad Widget

பசுவிற்காக பிரதேச சபை நுழைவாயிலில் அமர்ந்து உரிமையாளர் போராட்டம்!!

உரிமையாளரால் மேச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு மாடு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் குறித்த பசுமாட்டை பிரதேச சபையினர் சட்ட ரீதியாக பிடித்து கட்டிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை நகர்ப்பகுதியில் கால்நடை பண்ணை நடத்திவரும் பெண் உரிமையாளர் ஒருவர் பிரதேச செயலக நுழைபாதையை வழிமறித்து போராட்டம் ஒன்றை நேற்று...

பாடசாலை கல்வித் தவணை, விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!

2025 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளின் கல்விக் காலத்தின் முடிவு மற்றும் தொடக்கத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கூற்றுப்படி, முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 (வெள்ளிக்கிழமை) அன்று முடிவடையும். மேலும், முதலாம் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி தொடங்கி 2025 மே...

16 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்களுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது- பிரதமர்

நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்விகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக ”யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்ட போதும் , இம் மோதலுக்கான மூலக்காரணம் இன்னமும் தீர்க்கப்படவில்லை...

பிள்ளையான் CID யினரால் கைது!!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (08) மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நபர் ஒருவரை கடத்தியமை மற்றும் அவரை காணாமல் ஆக்கியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID)...

தனியார் துறை சம்பள அதிகரிப்பு விபரம்!

2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கீழ்க்காணும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்குரிய ஏனைய சட்ட ரீதியான நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அனுமதி!

18,853 பட்டதாரிகள், இளைஞர்களை அரசு சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச துறையில் உள்ள வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

யாழில் சீவல் தொழிலாளி மீது மதுவரி திணைக்கள அதிகாரிகள் மோசமான தாக்குதல்!!

வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக சீவல் தொழிலாளி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு குறித்த நபர் கருத்து தெரிவிக்கையில், கடந்த 04.04.2025 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் கள் இறக்குவதற்காக எனது பகுதிக்கு சென்றிருந்தேன்.திடீரென அங்கு சிவில் உடையில் வந்த பருத்தித்துறை மதுவரி திணைக்கள அதிகாரிகள்...

எம்.பி அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!!

இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். தனது பேஸ்புத் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில், "டிக்டொக் இதுவரை ஒரு பெரிய தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால்...

புதுமுக மாணவன் மீது தாக்குதல் – இரு மாணவர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர்,...

தனியாருக்கு விற்கப்பட்ட இடுகாடு – மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து, அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு சுமார் 150 இற்கும் மேற்பட்ட உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல கல்லறைகளும் கட்டப்பட்டுள்ளன. அத்துடன்...

வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து மக்களைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவசர கோரிக்கை!

வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான பொன்ராசா என்பவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் அவர் முறைப்பாடு செய்துள்ளார். அரச உத்தியோகத்தரான அவர் அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வீதியில் நின்ற வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை மறித்து...

பரந்தனில் இராணுவத்தினர் வசமிருந்த 15 ஏக்கர் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி – பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர் வசமிருந்த 15ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15 ஏக்கர் காணி தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமிருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த காணி கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம் 553வது படைப்பிரிவின் நிர்வாக அதிகாரியினால் கையளிக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட பரந்தன் இரசாயன...

காங்கேசன்துறைக்கு வந்த பாய்மரப்படகுகள் நாகபட்டினம் நோக்கி புறப்பட்டன!!

சென்னையிலிருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் நேற்று வியாழக்கிழமை (03) மாலை வந்தடைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளன. 400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு "Royal madras yacht club" அங்கத்தவர்களால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை...

வடக்கில் சிறுவர் இல்லங்களில் அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (02) சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது ஆளுநரிடம்,...

தையிட்டி விவகார தீர்வு கலந்துரையாடல் – இடைநடுவே வெளியேறிய அமைச்சர்கள்

தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்களின் காணிக்குள்...

பலாலி வீதி மிக விரைவில் முழுமையாக மக்கள் பாவனைக்கு!!

யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி மிக விரைவில் திறந்துவிடப்படவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் காலத்தில் வலி, வடக்கில் பெருமளவு நிலப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போர் நிறைவடைந்த பின்னர் அதன் பெரும் பகுதி நிலம்...

இந்தியப் பிரதமரிடம் யாழ் மீனவர்கள் பகிரங்க கோரிக்கை!!

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம் பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இக்கோரிக்கையை மீனவர்கள் விடுத்துள்ளனர். இதற்கமைய பிரதமர் மோடிக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் நேற்றையதினம் (02) கையளித்துள்ளனர்....

பல்கலைக்கழக மாணவன் பகிடிவதை – மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், "யாழ்ப்பாண...
Loading posts...

All posts loaded

No more posts