பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்க பதவி நீக்கம்

இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கு நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது.அதன்படி அங்கீகார ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கையெழுத்திட்டுள்ளார். (more…)

யாழ் பல்கலை மாணவர்களை எச்சரித்து வீடுகளுக்கு கடிதங்கள்; அச்சத்தில் மாணவர்கள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். (more…)
Ad Widget

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சூடான விவாதங்கள்

திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றம் திவிநெகும சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. (more…)

ஜனாதிபதியின் யாழ். விஜயம் ரத்து

தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி அரசாங்க அதிபர் ரூபினி அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

கல்விச் செயற்பாடுகளைஆரம்பிக்க ஒத்துழைக்காவிடில் பதவி விலகுவேன் – துணைவேந்தர் எச்சரிக்கை!

யாழ்.பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை நாளை ஆரம்பிக்க முடியாது போனால் துணைவேந்தர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மாணவர் பிரதிநிதிகளிடம் கூறியதாக தெரியவருகின்றது.யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாணவர்கள் பிரதிநிதிகள், துணைவேந்தர் ஆகியோர் இன்று கூட்டம் ஒன்றை நடாத்தினார்கள். (more…)

யாழ். பல்கலை நாளை ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை நாளை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவ ஆலோசகர் புஸ்பரட்ணம் தெரிவித்தார்.யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரியரட்ணம் தலைமையில் (more…)

கைதான பல்கலை. மாணவர்கள் பொங்கலுக்கு முன் விடுதலை?; உயர்கல்வி அமைச்சர் தகவல்

தைப்பொங்கல் தினத்தன்று யாழ். பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படாவிட்டால் அதனை மூடுவதற்கு தீர்மானித்துள்ளோம். இதேவேளை கைதாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படக் கூடும் என நம்புகிறேன் இவ்வாறு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

வட-இலங்கை பள்ளிக்கூடங்களில் கற்பிக்க இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன.இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ். பல்கலை கல்வி நடவடிக்கைகள் 16முதல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்குமாறு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே (more…)

வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்தும் 10நாட்கள் தடுப்புக்காலில் வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.கடந்த 29ம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் 6மணித்தியாலம் இராணுவத்தினரின் விசாரணையின் பின்னர் மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். (more…)

தைப்பொங்கலுக்கு ஜனாதிபதி யாழ்ப்பணத்திற்கு விஜயம்!

தைப் பொங்கலுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் இதன்போது முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கு கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஜப்பானின் ஜெய்க்கா நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய மாடிக்கட்டிடத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். (more…)

நல்லூர் கந்தன் ஆலய வளாகத்திலுள்ள காவலரணை அகற்ற படைதரப்பு இணக்கம்

நல்லூர்க் கந்தன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலரணை அகற்றுவதற்கு படைதரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். (more…)

யாழ். மாணவர்களை விடுதலை செய்யுங்கள்!; பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்

அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது. என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது. தடுத்து வைத்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் அதிகாரம் வாய்ந்தோர் விடுவிப்பதன் மூலம் (more…)

புலிகளின் நடவடிக்கைகள் தொடர்கின்றன! யாழ். இளைஞர்,யுவதிகளுக்கு இந்தியாவில் போர் பயிற்சி!- ஹத்துருசிங்க

விடுதலைப்புலிகளின் இரண்டாம் பரம்பரை படையினரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாண படைகளின் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளார்.யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கு இந்தியாவில் போர்ப் பயிற்சி வழங்க தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

யாழ். பல்கலை. நிர்வாகம் தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட ஒன்றியம் கவலை!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  (more…)

பிள்ளைகள் தவறான வழியில் சென்றால் அதிலிருந்து பெற்றோர் விடுபட முடியாது- வலம்புரி ஆசிரியருக்கு தளபதி பதில் மடல்

பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டி யது பெற்றோரின் கடமையாகும். அந்தப் பிள்ளைகள் தவறான வழியில் செல்வார்களேயானால் அதற்கான பொறுப்பில் இருந்து பெற்றோர் ஒருபோதும் விடுபட முடியாது. பிள்ளைகள் அவ்வாறு தவறான வழியில் சென்று சமூகவிரோதச் செயல்களில் ஈடு படும்போது சட்டத்தையும் ஒழுங்கையும் பாது காக்கும் அதிகாரிகள், (more…)

பல்கலைக்கழகத்தில் படையினர் வெறியாட்டம்! – மாணவர்கள் மீது தாக்குதல்! ஆனந்தகுமாரசுவாமி விடுதியில் சுடரேற்றம்!.

வவுனியா அரசியல் கைதிகளில் ஒருவர் அடித்துக்கொலை! ஒருவர் கோமா நிலையில்! பலரின் நிலை கவலைக்கிடம்:வெலிக்கடை படுகொலையினை ஞாபகமூட்டுகிறது

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நிமலரூபன் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை வைத்தியசாலைக்கு ண்டுசெல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...

உணர்வுபூர்வமாக நடந்த வாழ்வுரிமைப்போராட்டம்! காவல்துறை அடாவடி!