- Saturday
- February 22nd, 2025

இந்தியாவை சேர்ந்த கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், CSE, SoftView நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும் கணினி வரைகலை நிபுணரும் தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆர்வலரும் பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆன்ரோ பீற்றர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். இறக்கும்போது இவருக்கு வயது 45. (more…)

2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பாக வெளியிடப்பட்ட இஸட் புள்ளி பட்டியலை இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிபர முறைமைகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் , பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு தனித்தனியாக இஸட் புள்ளி பட்டியல்களை மீண்டும் கணிப்பீடு செய்து வெளியிடுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது....

வடமாகாண தமிழ்த்தினப் போட்டியில் யாழ். மாவட்டம் 202 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத் தமிழ்த் தினப்போட்டிகள் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தை 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.பரீட்சை முடிவுகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு மேற்கொண்டுள்ள பகுப்பாய்வு...
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து தோற்றிய 231 மாணவர்களில் 15 மாணவர்களுக்கு 9A சித்திகள் கிடைத்துள்ளன.வேம்படி மகளிர்கல்லூரியில் 18 மாணவிகளுக்கு 9A சித்திகள் கிடைத்துள்ளன. மேலதிக பெறுபேறுகள் விரைவில்....
”போருக்கு பிந்தைய சூழலில் திறன் அபிவிருத்தி ” என்ற தொனிப்பொருளில் யாழ் பல்கலைக்கழகம் வரும் ஜூலை 20ம் திகதி நடாத்தவிருக்கும் மாநாட்டுக்காக ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டிருக்கிறது பட்டியலிடப்பட்ட துறைகளில் இதுபற்றி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலதிக தகவல்களை http://www.jfn.ac.lk/juice2012/ இல் பார்வையிடலாம்.பல்கலைக்கழக மாணவர்கள் துறைசார் வல்லுனர்கள் கூட ஆய்வுகளை சமர்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது...

கொழும்பில் அண்மையில் இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையம் நடத்திய பசுமை அமைதி விருதுப் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர் ஒருவர் வடமாகாண ரீதியில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.யாழ். இந்துக் கல்லூரி மாணவரான செங்கதிர்ச்செல்வன் சேந்தன் என்ற மாணவனே வட மாகாண ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவருக்கான தங்கப்பதக்கத்தை பேராசிரியர் எஸ்.ஏ.நோபேற் வழங்கிக்...

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களால் அண்மையில் வெளியிடப்பட்ட சங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள பாடல் ”கனவுகள் வளர்த்திடுவோமே..புதிய கலைகள் வளர்த்திடுவோமே..இந்துவின் மைந்தராய் இமையத்தை வென்றிடவேண்டும்.”எனும் பாடல். இப்பாடலில் Dr.A.P.J. Abdul kalam ,இன் “இளைஞர்களே கனவு காணுங்கள்” என்ற வார்த்தைக்கு அமைய அவருடைய அனுபவங்கள், தத்துவங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு பாடப்பட்டது இப்பாடல். (more…)

சட்டக்கல்லூரியில் கற்கையினை மேற்கொள்பவர்களுக்கு வயதெல்லைக்கான வரையறை நீக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு முதல் சட்டக்கல்லூரியில் சட்டம் தொடர்பான கற்கை நெறிக்கான தகுதிகாண் பரீட்சையில் தோற்றுபவர்களுக்கு வயதெல்லையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சட்டக்கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இதுவரைக்கும் சட்டம் தொடர்பான கற்கை நெறிக்கான தகுதிப்பரீட்சைக்கு தோற்றுபவர்கள் 35 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும் என்ற ஒரு வரையறை காணப்பட்டது.ஆனால் இவ்வாண்டு...

தேசிய கல்வி நிறுவகம் நடத்தும் முதுகல்விமாணிக் கற்கை நெறி முதன்முறையாக யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.கல்விவாண்மை, அனுபவம் கொண்ட தகுதியானவர்களைக் கொண்டு இந்தக் கற்கைநெறிக்கான விரிவுரைகள் இடம்பெறவுள்ளன.யாழ். மாவட்டத்தில் உள்ள திறந்த பல்கலைக்கழகம், யாழ்.பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள விரிவுரையாளர்கள் மட்டுமே இதற்கு விரிவுரையாற்ற வேண்டும் என்ற மட்டுப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது. (more…)

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளிவரவுள்ளன என பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படுவதுடன் நாளை நண்பகல் முதல் கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை முடிவுகளை பரீட்சைத் திணைக்களத்தில் சென்று நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

தென்னாபிரிக்காவில் கடந்த டிசம்பர் 1ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெற்ற்ற 8 ஆவது சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் சுந்தரேஸ்வரன் வித்தியாசாகர் இலங்கை சார்பாகவும், யாழ் இந்து கல்லூரி சார்பாகவும் வெண்கல பதக்கத்தை வென்றார்.இலங்கையில் இருந்து 5 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர் அதில் யாழ் இந்துக்கல்லூரி சார்பில்...