பாடசாலை மாணவர்களிடம் முறையற்ற விதத்தில் பணம் அறவிட்டால் உடன் பதவி நீக்கம் ; கல்வியமைச்சர்

பாடசாலை மாணவர்களிடம் முறையற்ற விதத்தில் பணம் அறவிடும் அதிபர் அல்லது ஆசிரியர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யும் வகையில் புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். (more…)

பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள்

2012ம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பில் மேலதிகமாக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. (more…)
Ad Widget

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தினால் நடாத்தப்படும் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி

தமிழ் மாணவர்களின் விஞ்ஞான அறிவி;னை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் கடந்த காலங்களில் நடாத்திவந்தது போன்று இவ்வருடமும் வடமாகாண பாடசாலைகளுக்கிடையேயான விஞ்ஞானப் போட்டி நிகழ்ச்சிகளை “சமூக வலுவூட்டலுக்கான கல்வி” என்ற கருப்பொருளுக்கு அமைய நடாத்தத் தீர்மானித்துள்ளது .இப்போட்டிகள் பெப்பரவரி 8ம் திகதி தொடக்கம் மார்ச் 4ம் திகதி வரை நடைபெறும் என உதவிப் பொதுச்...

கோட்டா முறையில் மாற்றம் யாழ்.மாணவருக்கு பாதிப்பு??

பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி தொடர்பில் நடைமுறையில் இருக்கும் மாவட்டக் கோட்டா முறை மாற்றப்பட்டால், அண்மைய சனத் தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம் யாழ். மாவட்டத்தில் இருந்து பல் கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர் எண்ணிக்கையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

அதிவிசேட சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

வடமாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதிவிசேட சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. (more…)

உயர்தரப் பரீட்சையில் 9057 பேர் 3 பாடங்களிலும் ”ஏ” சித்தி

2012 ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த 128,809 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளனர். (more…)

உயர்தரப் பரீட்சையில் வாழ்வக மாணவன் சாதனை.

க.பொ.தா உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சுன்னாகம் வாழ்வகத்திலிருந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்விபயிலும் மாணவன் 3 பாடங்களிலும் ஏ தர சித்திபெற்று சாதனை படைத்துள்ளார். (more…)

வெளிநாடு செல்லும் தேவைகளுக்காக ஒரே நாளில் உயர்தரப் பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படும்: பரீட்சைகள் ஆணையாளர்

வெளிநாடு செல்லும் தேவைகளுக்காக ஒரே நாளில் உயர்தரப் பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். (more…)

யாழ். பரு. ஹாட்லி கல்லூரி மாணவன் கணித பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்! தேசிய மட்டத்தில் 3ம் இடம்!

நேற்றிரவு வெளியிடப்பட்ட 201ம் ஆண்டுக்கான க.பொ.த.ப. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் பா. கபிலன் கணிதப் பிரிவில் 3 ஏ பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளார். (more…)

வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் யாழ். இந்துக்கல்லூரி முன்னிலையில்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சில பாடசாலைகளில் இணையவழி மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரி கணிதம் மற்றும் வர்த்தகப் பிரிவிலும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை விஞ்ஞானப் பிரிவிலும் முன்னிலையில் உள்ளன. (more…)

பல்கலைகழகங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் விவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு

திமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைய பல்கலைக்கழகங்களில்; சேர்த்துக்கொள்வதற்காக ஒப்புக்கொண்ட அளவுக்கு சில மாவட்டங்களில் போதியளவு மாணவர்கள் இல்லாத குறையை நிரப்புவதற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து மாணவர்களை சேர்ப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது. (more…)

பல்கலைக்கழகத்திற்கு அதிகளவு மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் சிக்கல்

பல்கலைக்கழகத்திற்கு அதிகளவு மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று புதன்கிழமை இரவு வெளியிடப்படும்

2012 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று புதன்கிழமை இரவு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்ள ஆணையாளர் நாயகம் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும். பத்தரமுல்லை மற்றும் கொழும்பை அண்மித்த பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் பெறுபேருகளை நாளை வியாழக்கிழமை...

இலங்கையில் பள்ளிக்கூட, பல்கலைக்கழக வயது எல்லைகள் குறைப்பு

இலங்கையில் பள்ளிக்கூட மற்றும் பல்கலைக்கழக அனுமதி வயது எல்லைகள் குறைக்கப்படவுள்ளன. இதன்படி, பள்ளிக்கூடங்களுகான அனுமதி வயது 4 ஆகவும், பல்கலைக்கழக அனுமதி வயது 16 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. (more…)

வலிகாமம் கல்வி வலயத்திற்கு புதிய கல்வி பணிப்பாளர் நியமனம்

வலிகாமம் கல்வி வலய புதிய கல்வி பணிப்பாளருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. வலிகாமம் கல்வி வலய புதிய கல்வி பணிப்பாளராக திரு.செ.சந்திரராஜா நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் வழங்கினார். ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், வட மாகாண கல்வி அமைச்சின்...

க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகள் 30ஆம் திகதி!

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்தார். (more…)

க.பொ.த சா/த, உ/த சித்தியடையாவிட்டாலும் பட்டப்படிப்பை மேற்கொள்ள வாய்ப்பு: கல்வி அமைச்சர்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடையாத மாணவர்கள் 2013ஆம் ஆண்டில் பட்டப் படிப்பொன்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)

தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் தரம் 06 அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்

கடந்த வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை, பிரபல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் ஆறாம் தரத்தில் அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளள. (more…)

வடக்கு மாகாணத்தில் 2011 இல் மட்டும் 38 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகினர்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னர் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர். (more…)

தனியார் மாணவர்களும் தலைமைத்துவ பயிற்சியை கோருகின்றனர்

தலைமைத்துவ பயிற்சியில் பங்குபெறுவதற்கு தம்மையும் அனுமதிக்குமாறு தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் கோருவதாகவும் இதற்காக அவர்கள், பிரத்தியேக கட்டணத்தை செலுத்தவதற்கு தயாராக உள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts