- Saturday
- April 19th, 2025

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இதன்படி ஆறாம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரையில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சுகாதார விதிமுறைமைகள் பின்பற்றப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தொற்றுநோயியல் பிரிவின் தலைமை நிபுணர் வைத்தியர்...

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் முதல் கட்டமாக தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், பாடசாலைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி மீளத் திறப்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூன்றாம் தவணைக்காக திறப்பது தொடர்பாக தொடர்ந்தும் பேச்சுக்கள்...

2020ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அத்துடன், தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு 162 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை...

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது பிற்போடப்பட்டுள்ளதால் தொலைக்கல்வியூடாக மாணவர்களுக்கு வீடுகளில் இருந்து கற்பிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பாடசாலைகள் நேற்று(09) ஆரம்பிக்கப்பட இருந்தன. ஆனால் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு இருவாரங்களுக்கு பின்போடப்பட்டுள்ளது.கல்விச் செயற்பாடுகளில் இருந்து மாணவர்கள் தூரமாவதை தடுக்கும் வகையில் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். பொதுஜனபெரமுன அலுவலகத்தில்...

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் பாடசாலைகளில் இன்று மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் தற்போதுள்ள கொரோனா தொற்று...

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகளை ஆரம்பிப்பது இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நவம்பர் ஒன்பதாம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த கல்வி நடவடிக்கைகள் மேலும் இரண்டு வாரத்திற்கு நீடிப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா...

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறப்பதற்கான திகதியை தீர்மானிக்க கல்வியமைச்சு இந்தவாரம் முக்கிய கூட்டத்தை நடத்தவுள்ளது. மேல் மாகாணம், குருணாகல் நகரம், குலியாபிட்டி மற்றும் எஹெலியகொட பொலிஸ் பகுதிகளுக்கு நவம்பர் 09 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திகதியை கல்வி...

யாழ்.இந்துக் கல்லூரியிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 31 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக மொத்தமாக 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ் 107 பேரும் பழைய பாடத்திட்டத்தில் கீழ் 72 பேரும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாப்பெருந் தொற்று அபாயத்தையடுத்து நாட்டில் எழுந்துள்ள நிலைமை காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களம் இம்மாதம் நடாத்தவிருந்த சகல பரீட்சைகளையும் ஒத்திவைத்துள்ள நிலையிலும், பல்கலைக் கழகங்களின் விரிவுரைகளை ஒன்லைன் மூலமாக நடாத்துவதற்குப் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பரீட்சைகளை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்து விசனம் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த...

நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரு தடவைக்கு மேல் தோற்றுபவர்கள் பொது அறிவுப் பரீட்சையில் முன்னைய ஆண்டில் 30 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்றிருந்தால் இம்முறை அந்தப் பாடத்துக்கான பரீட்சைக்குத் தோற்றவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். பரீட்சைகள் ஆணையாளர், சனத் பூஜித விடுத்துள்ள ஊடக அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;...

இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் (ரூ.89,895,000) பெறுமதியான காசோலை நேற்று 2020.10.13 அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபகஷவிடம் கையளிக்கப்பட்டது. ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் சிறியான் டி சில்வா...

முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளில் கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தேவையான சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப பரீட்சைகள் நடத்தப்படும் என்றும்...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன்...

நாடு முழுவதும் இன்று முதல் ஆரம்பமாகும் இரண்டாம் தவணை விடுமுறையானது தனியார் மற்றும் இலங்கையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலைகளுக்கும் பொருந்தும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள சகல தனியார் வகுப்புக்களும் இன்று முதல் மறுஅறிவித்தல் வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அனைத்து முன்பள்ளிகளும் இன்று முதல் மூடப்படுகிறது. கம்பஹா...

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை (05) முதல் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (09) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2021ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் வவுச்சருக்கு பதிலாகச் சீருடை துணியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களை வழங்குவதற்கான திட்டம் இருந்தபோதிலும், சீருடை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பாடசாலை சீருடைக்கான துணியை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சரை வழங்குவதற்கு பதிலாக தேசிய துணி...

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகள் நடத்துவதற்கான இறுதி திகதி கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனைத்து தனியார் கல்வி வகுப்புகளும் ஒக்டோபர் 6ஆம் திகதிக்குள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான...

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது. நேற்றைய தினம் பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாகத் தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தித் தருமாறு கோரியே இந்தப் போராட்டம்...

பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினியை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதியை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அரச வங்கிகளுடன் இணைந்து இந்த கடன் வசதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபாய் சலுகை கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளது. அத்தோடு, பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின்னர்...

All posts loaded
No more posts