தொடர்ச்சியாக பாடசாலைகளை மூடுவதால் மாணவர்களுக்கு நீண்டகாலத்தில் பிரச்சினைகள் ஏற்படும்!!

ஊரடங்கு உத்தரவை நீக்கியவுடன் பாடசாலைகளை விரைவில் திறப்பது அவசியமானது என கொழும்பு மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவப் பேராசிரியர், மருத்துவ வல்லுநர் பூஜித விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். “இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம்....

தரங்கள் 7-13இல் பயிலும் மாணவர்களுக்கு விரைவில் கோவிட்-19 தடுப்பூசி – பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படும்

12-18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு விரைவில் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர், கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக, பாடசாலைகள் அவ்வப்போது சுமார் ஒன்றரை வருடங்கள் மூடப்பட வேண்டியிருந்தது. அதனால் மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் கூறினார். இன்று (09) சுகாதார...
Ad Widget

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க இனியும் காத்திருக்க வேண்டியதில்லை – பேராசிரியர் நீலிகா

பாடசாலைகளை மீண்டும் திறக்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு, மூலக்கூறு மற்றும் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார். பல மேற்கத்திய நாடுகளில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், பாடசாலைகள் இன்னும் திறந்தே உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். “இந்த ஆண்டு மே மாதத்திற்குள், இலங்கை உள்பட...

பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆலோசனை!

நாட்டில் உள்ள 18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த விடயம் குறித்து...

பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

சுகாதார அமைச்சின் அனுமதியுடன், திட்டமிட்டபடி, எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைளினதும் கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்...

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி – அரசாங்கம்

12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிக்கையில், நாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் கொவிட் 19 தடுப்பூசியை வழங்கினோம். இதனைத் தொடர்ந்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது...

தரம் 5 புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் அடுத்த வாரம் முடிவு!!

ஒக்டோபர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திவைப்பது குறித்த முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது; ஒன்பது மாகாணங்களின்...

ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்

தடுப்பூசி செலுத்திய பின்னர் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்றும்...

வயதுக் கட்டுப்பாடின்றி சகல ஆசிரியர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் திங்களன்று ஆரம்பம்!

நாட்டில் முன்னுரிமை தொழில் படையாக பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட்- 19 தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் நாடுமுழுவதும் பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியில் வயதுக் கட்டுப்பாடின்றி அனைத்து...

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பம்!

கொவிட் தடுப்பூசி அடுத்த வாரம் தொடக்கம் அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பமாகும் எனவும் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒவ்வோர் ஆசிரியருக்கும் தடுப்பூசி...

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு எப்போது?

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து அவர் இதனை தெரிவித்துள்ளார். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை திறப்பதற்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. விசேடமாக பாடசாலைகளை...

உ/த. பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும்

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்படி விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 30 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் மற்றும் பாடசாலை ரீதியான பரீட்சார்த்திகள் விண்ணப்பங்கள் ஆன்லைன் ஊடாக மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சை ஆணையாளர் பீ....

100 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை ஆரம்பிக்க பரிசீலனை!!

100 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை இந்த மாதம் மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு பரிசீலித்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் 100இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 3 ஆயிரம் பாடசாலைகள்...

இணையவழிக் கற்றல் விருத்தி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை விருத்தி செய்வது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இணைய வழியில் கற்றலை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் துறைசார் தரப்பினரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த அதிகாரிகள் எதிர்கெபாள்ளும் பிரச்சினைகள் தொடர்பில்...

யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது....

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!!

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு உகந்த சூழல் உருவாக்கப்பட்டவுடன் பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். பாடசாலை மீண்டும் திறப்பதற்கான பின்னணியை முறையாக தயாரிப்பது குறித்து இன்று நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்டார். பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முதல்...

மாணவர்களின் இணையவழிக் கற்றலுக்கு கட்டணமின்றிய இணைய வசதி – நாமல்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் எந்தவொரு இணைய கட்டணமும் இன்றி இணையவழிக் கற்றலில் ஈடுபட உதவும் இ-தக்ஸலவா திட்டத்தை விரைவுபடுத்துமாறு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சருமான நமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய இ-தக்ஸலவா அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க...

நுண்கலை கல்லூரி அனுமதிக்கு இணைய வழி வாயிலாக தெரிவுப் பரீட்சை!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைமாணி (பரதம்), நுண்கலைமாணி (சங்கீதம்), நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) ஆகிய நான்கு வருடக் கற்கை நெறிகளின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி மற்றும் தெரிவுப் பரீட்சைகள் இணைய வழியாக இடம்பெறவுள்ளன. நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அனுமதி மற்றும் தெரிவுப் பரீட்சைகளை மாற்று ஏற்பாட்டின் படி...

புதிய மாணவர்களுக்கான பல்கலைகழ அனுமதி விண்ணப்பம் – முக்கிய அறிவிப்பு

2020/2021 கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் திகதியை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே 21 முதல் ஜூன் 11 வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts