- Sunday
- February 23rd, 2025

யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் நடவடிக்கையினால் யாழ். மாவட்டம் முற்று முழுதாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு, வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய...

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சந்திப்பு பற்றி முதலமைச்சர்...

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 32 சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை என்பதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 32 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யுமாறு...

யாழ்.மாவட்டத்தில் நடைபெறும் சமூக விரோதச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் பாவனை, கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக அறிவிப்பதற்கான தொடர்பிலக்கத்தினை யாழ்.அரச அதிபர் என்.வேதநாயகன் நேற்று அறிவித்துள்ளார். 0212225000 என்ற எண்ணிற்கு அழைத்து அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை உள்ளிட்ட சகலவிதமான முறைப்பாடுகளையும் அறிவிக்கலாம் என்றும் அரச அதிபர் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்படும் அனைத்து...

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார்.சென்னையிலிருந்து வெளியாகும் "தெ ஹிந்து" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, "அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்" என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக்...

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும் கோரி அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்தார். சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் உத்தரவாதம் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம்...

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அதனை முதலமைச்சர் பொறுப்பற்ற விதமாக கையாண்டதாகவும் வெளியாகிக் கொண்டிருந்த பொய்களுக்கு முதலமைச்சர் இன்றைய தினம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த சில தினங்களாக ஊடகங்களில் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதி தொடர்பில் முதலமைச்சர் மீது குற்றஞ்சாட்டும் செய்திகள் வெளியானதும், கடந்த 35வது...

எமது மக்களின் சகஜ வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் காரணிகள் பல திடமாக ஐக்கிய நாடுகள் ஆய்வறிக்கையில் ஆராயப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற எண்ணக் கருவின் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இரணைமடுவிலிருந்து தொடக்கப்படுகின்றது....

அமெரிக்காவின் திருத்த யோசனைக்கு 25 நாடுகள் இணை அனுசரணையை வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில், அமெரிக்காவின் திருத்த யோசனையில் பல பரிந்துரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் மனித உரிமை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் ஆகியனவற்றை, மேம்படுத்தல் என்ற தலைப்பின் கீழ் இந்த யோசனை இன்று ஜெனீவா மனித உரிமை பேரவையில்...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் இலங்கை இனப்படுகொலை விசாரணை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை யில் இவ்வாறு தெரிவித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட விசாரணையானது மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியை மட்டும் விசாரித்து இருந்த போதிலும், இதுவரைகாலத்தில் வந்துள்ள அறிக்கைகளுள் இலங்கையில் பாரியளவில் இழைக்கப்பட்ட மிகக்கொடூரமான குற்றங்கள் பற்றிய தகவல்களை...

யாழ்.இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று (27) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது முழுமையான உரை வருமாறு அதிபர் அவர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே, பல நாடுகளிலும் இருந்து இங்கே வந்திருக்கக்கூடிய பழைய மாணவர்களே, பழைய மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளே, கல்விமான்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே,...

யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டங்களை பழைய மாணவர்சங்கம் புறக்கணித்துள்ள நிலையில் இன்றைய(24) முதல் நாள் நிகழ்வுக்கு மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்ச பிரதம விருந்தினராக வந்து கலந்து கொண்டார்.யாழ் இந்துக்கல்லுரிக்கு கல்வியமைச்சர் உலங்கு வானூர்தியில் வந்திறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. [caption id="attachment_50594" align="aligncenter" width="587"] Daya Aviation என்ற தனியார் நிறுவனத்தின் கெலியில் 300,000...

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லமுடியாது என சுவிஸ் அமைதி அமைப்பினால் 18.9.2015 இல் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர்,மே17 இயக்கம் , மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க...

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அலங்கை போர்க்குற்ற விசாரணையறிக்கையினை தொடர்ந்து அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்தின் உத்தேச நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான சர்வதே பிரகடனங்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்திப்பட்டுள்ளது.இலங்கையின் சுதந்திரம், இறைமை, பௌதீக ஒருமைப்பாடு, ஐக்கியதன்மை...

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு எதிர்கட்சியின் பிரதமகொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணியிற்கு கையளிக்க தீர்மானம் எடுத்திருக்கின்றது. இதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மக்கள் விடுதலை முன்னணியின் அநுரகுமார திஸாநாயக்கவை பிரேரிப்பதாக கதாநாயகரிடம் கூறியுள்ளார். இரா.சம்பந்தன் வருகை தராத சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரான மாவை...

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறையினை வலியுறுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொது வேலைத்திட்டம் சம்பந்தமாக வெகுஜன அமைப்புகள் மக்கள் பிரதிநிதிகள் பல்கலைக்கழக சமூகம் ,ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களிடையேயான கலந்துரையாடல் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் திருநெல்வேலியில் இன்று (2) மாலை இடம்பெற்றது. கலந்துகொண்டவர்களிடமிருந்து பெறப்பட்ட...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று (1.09.2015) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கௌரவ. இரா. சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன், கௌரவ சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் தமிழ்த் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர் கௌரவ. செல்வம்...

இன அழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றினை கோரி வடமாகாணசபை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. இறுதி போரின் போது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை காலை முன்னெடுத்திருந்தார். வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை...

இலங்கையின் இறுதிப்போரில் அடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது. இந்த தொடர்ச்சியான போராட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகைளையும் பொதுஜன அமைப்புக்களையும் மக்களையும் இணந்து கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நாளை(2) முக்கிய கூட்டம் ஒன்றை அனைத்து தரப்பினருடனும் ஏற்பாடு செய்துள்ளனர்...

All posts loaded
No more posts