கோப்பாயில் கஞ்சா, வாளுடன் அறுவர் கைது

யாழ். கோப்பாய் பகுதியில் வாள் மற்றும் கஞ்சாவுடன் ஆறு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி சுபாஷ் மஞ்சுள காந்தோல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், கோப்பாய் பகுதியில் கஞ்சா புகைத்து விட்டு குழப்பத்தை தோற்றுவிக்கும் கும்பல் ஒன்று தொடர்பாக மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்றய தினம் அதிகாலை பொலிஸார்...

நடு வீதியில் அமர்ந்த பெண் பொலிஸாரால் கைது

வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் பிரதான கண்டி வீதியில் நடுவே அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பழகிவந்த குறித்த பெண் பணம் கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவும் இருவருக்கிடையே இடம்பெற்ற முரண்பாடுகளை அடுத்து பணம்கொடுத்த பெண் பணம் வாங்கிய பெண்ணிற்கும் இடையே...
Ad Widget

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களை எதிர்வரும்26ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் இ.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து குறித்த 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்...

குதிரையோடிய ஆசிரியர் கைது!

வவுனியா - உலுக்குளம் மகாவித்தியாலயத்தில் பிறிதொரு நபருக்காக க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதிய அரச பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா மின்சார சபையில் பணியாற்றும் நபரொருவர் சாதாரண தரப்பரீட்சையில் தோற்றுவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கான அனுமதி அட்டையும் கிடைத்திருந்தது. இந்நிலையில் மின்சாரசபையில் பணியாற்றும் குறித்த நபர், கைதுசெய்யப்பட்டுள்ள சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கடமைபுரியும்...

காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை, விற்பனை செய்தமை தொடர்பான வழக்கில் 5கோடி தண்டம்!

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை, அவற்றை விற்பனை செய்தமை தொடர்பாக 815 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று தொடரப்பட்ட வழக்கில் 5,305,500 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக பாவனையாளர் அதிகார சபையின் யாழ் மாவட்ட அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் பாவனையாளர் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில்...

நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு இரட்டை மரண தண்டனை

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது 2001 ஆம் ஆண்டு தாக்குதல் நடாத்தியமை தொடர்பான வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நெப்போலியன் எனும் நபர் பிரபல ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் ஆவார். கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில் நிமலராஜன் வீட்டில்...

சுன்னாகம் இளைஞர் கொலை : பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவரை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அன்டன்...

7 குற்றங்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் உறுதி!

7 குற்ற செயல்களுக்கு தீர்மானிக்கப்பட்ட 25,000 ரூபாய் தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த 7 குற்றச்சாட்டுகளுக்கும் சட்டத்தை செற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாரதி...

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்களை மாலை 5 மணியளவில் பனிக்கன்குளம் பகுதியில் வீதிகடமையில் ஈடுபட்டிருந்த மாங்குளம் பொலிஸ்நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி...

த.தே.கூ மீது தாக்குதல்: மூவருக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரை படுகொலை செய்ததுடன் 20 பேர் வரை காயமடைந்தனர். குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று எதிரிகளுக்கும் இரட்டை மரண தண்டனையும் பத்து வருட சிறைத் தண்டனையும் விதிக்க வேண்டும் என்று சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி அரச...

கருணாவுக்கு பிணை கிடைத்தது!

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரச வாகனத்தை துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, கடந்த 29ம் திகதி நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட கருணா, பின்னர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மேலும், கடந்த ஐந்தாம் திகதி அவரது...

குழந்தைக்குத் தான் தந்தையில்லையென பெண்ணை ஏமாற்றிய இளைஞனுக்கு சிறை

சட்டரீதியாகத் திருமணம் செய்வதாகக் கூறி நம்பிக்கை மோசடி செய்து குழந்தை ஒன்று பிறப்பதற்குக் காரணமான இளைஞனுக்கு, 5 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்சம் ரூபாய் பணத்தினை நட்டஈடாக வழங்குமாறு உத்தரவிட்டார். சந்தேகநபரின் மரபணு, குழந்தையின் மரபணுவுடன் ஒத்துபோனநிலையில்;...

வாள் வீசிய ஐவருக்கு விளக்கமறியல்

கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் வாளுடன் வெள்ளிக்கிழமை (02) கைதான சந்தேகநபர்கள் ஐவரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதாக, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.மஞ்சுல கஹந்தவெல தெரிவித்தார். குறித்த நபர்களும் சுன்னாகம், மானிப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற பாரதூரமான...

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய உயர்தர மாணவன் உள்ளிட்ட ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 5 இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 வாள்கள், வாள்வெட்டுக்கு தயாராகும் புகைப்படங்கள், வீடியோக்கள் அடங்கிய கையடக்க தொலைபேசி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் முயற்சியில்...

ஹெரோயினுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கைலாசப்பிள்ளையர் கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை (02) இரவு ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். பொம்மைவெளி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வைத்திருந்த 3 கிராம் 146 மில்லிகிராம் அளவுடைய ஹெரோயினை கைப்பற்றியுள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை...

யாழ் பல்கலை மாணவர்கள் கொலை வழக்கில் ஆயுதம் எடுக்கப்பட்டது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவு

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ம் திகதி பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்து இருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான்...

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை : 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் வாகனம்...

தப்பிச் சென்ற குடு பேபி மீண்டும் கைது

நீதிமன்றில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற போது தப்பிச் சென்ற குடு பேபி என அழைக்கப்படும் கரிகாலன் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேடுதல் நடத்திய வேளையில் யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். 180 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் குடு பேபி என அழைக்கப்படும் கரிகாலன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக...

ஆவா குழு உறுப்பினர்கள் 11 பேருக்கும் பிணை

யாழில் இயங்கும் ஆவா எனும் குழு தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 11 பேரையும் சரீரப் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் யாழில் இடம்பெற்ற சில வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா எனும் குழு தொடர்புபட்டுள்ளதாக, தகவல் வௌியானது. இதற்கமைய, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த குழுவுடன்...

ஆவாக் குழுவெனக் கூறி தமிழ் இளைஞர்கள்மீது பயங்கரவாதத் தடைச்சட்டம், ஒருவரை பிணையில் விடுவித்தது நீதிமன்றம்!

ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் யாழ்ப்பாணக் காவல்துறையினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நான்கு இளைஞர்களைக் கைதுசெய்தனர். ஆவாக் குழுவுடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே குறித்த நான்குபேரும் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், குறித்த நபரால் முகநூலில் பதிவேற்றப்பட்ட புகைப்படம் ஒன்றில் காணப்படும் மோட்டார் சைக்கிள் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர்...
Loading posts...

All posts loaded

No more posts