யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மரண தண்டனை!!

“யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மரண தண்டனை வழங்கப்பட்து இன்றைய தினமே” என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டி படுகொலை செய்தமை மற்றும் இருவரை கொலை செய்யும்...

முக்கொலைகளையும் நானே செய்தேன்!

நான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். நான் செய்ததை நியாப்படுத்த முனையவில்லை என முக்கொலை வழக்கின் எதிரி தனது சாட்சியத்தில் தெரிவித்து உள்ளார்.கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை புதன்கிழமை மதியம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா....
Ad Widget

அச்சுவேலி முக்கொலை ; இரண்டாம் நாள் சாட்சிப் பதிவுகள்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் இரண்டாம் நாள் சாட்சிப் பதிவுகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றது. சாட்சியப்பதிவில் கொலை சம்பவத்தில் தடயப் பொருள் ஆய்வினை செய்த யாழ்.சோக்கோ பொலிஸ் பிரிவில் சம்பவம் நடந்த காலப்பகுதியில் கடமையாற்றியிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஜெயவம்ச சாட்சியமளித்தார்....

திருமலை மாணவர்கள் படுகொலை: சாட்சியாளர்களை தேடுவதற்கு உத்தரவு

திருகோணமலையில் பாதுகாப்புப் படையினரால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சியாளர்கள் வெளிநாடு சென்றுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களுடன் தொடர்புகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாதிக்கப்பட்ட தரப்பின் இரு சாட்சியாளர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி...

ரவிராஜ் கொலை வழக்கு; விடுலையான கடற்படை அதிகாரிகளை கண்டுபிடிக்குமாறு உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா கடற்படையின் மூன்று புலனாய்வு அதிகாரிகளையும் கண்டுபிடிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவர் இறந்து விட்ட நிலையிலும், இருவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால் வழக்கில் சமூகமளிக்காத...

” கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க” என கத்திக்கொண்டு வாளினால் வெட்டினார்

நானும் நாலு மணித்தியாலங்களாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். என்ன கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க என கத்திக்கொண்டு வாளினால் என்னை வெட்டினார் என தனஞ்செயன் தர்மிகா என்பவர் யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை...

வல்வெட்டித்துறையில் 2KG ஹெரொயின் மீட்பு

வல்வெட்டித்துறை பகுதியில் 2kg கிலோ ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினரும், மதுவரி திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையில் குறித்த போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போதைபொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றய தினம் வல்வெட்டித்துறை பகுதியில் போதைபொருள் கொண்டுவரப்படுவது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின்...

இலங்கையிலிருந்து கடத்திச்சென்ற தங்கத்துடன் தமிழகத்தில் ஒருவர் கைது

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை வைத்திருந்தவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்தே, இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தங்க கட்டிகள் ராமநாதபுரத்துக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தயாரான நிலையிலேயே, 16.5 கிலோ தங்க கட்டிகள்...

கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஊர்காவற்துறை கர்ப்பிணி படுகொலை வழக்கின் சந்தேகநபர்களான சகோதர்கள் இருவரின் விளக்கமறியல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்றய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கு விசாரணையை அடுத்து வழக்கினை எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரையில் சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில்...

நாய்களைத் தெருவில் விட்டால் 2 வருட சிறைத்தண்டனை!

நாய்களை பொது இடங்களிலும் தெருக்களிலும் விட்டுச்செல்லும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இதற்கமைய, நாய்களைத் தெருக்களில் விடுபவர்களுக்கு எதிராக, 1901ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க நாய்களை பதிவு செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சகத்துக்கு கிடைத்துள்ளது. இதன்படி நாயொன்றினைத் தெருவில் விட்டுச் செல்லும்...

ஆலயத்திற்குள் மது அருந்திய நால்வர் பொலிஸாரால் கைது

தெல்லிப்பழை, பன்னாலையில் உள்ள ஆலயம் ஒன்றில் மறைந்திருந்து மது அருந்திய நால்வரை கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்தில் மது அருந்துவதாக தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் வாகன சாரதிகள் எனவும் தெரியவந்துள்ளது. குறித்த நால்வரும் ஆலயத்தோடு தொடர்பு...

புங்குடுதீவு மாணவி கொலை: விசாரணைகள் 98% நிறைவு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது என, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று (22) தெரிவித்தார். மாணவி, 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்...

பெருந்தொகை போதைப் பொருளுடன் இலங்கை யுவதி கைது

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இலங்கை யுவதி ஒருவர் இந்தியாவின் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும், இவர் வசம் இருந்து 64 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. கொழும்பில் இருந்து பெங்களூக்கு சென்ற குறித்த 39 வயதான யுவதி, சென்னை நோக்கி செல்லவிருந்த நிலையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்....

அச்சுவேலி முக்கொலை தொடர்பில் நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவு

அச்சுவேலி முக்கொலை வழக்கின் தொடர் விசாரணையை அடுத்தவாரம் ஆரம்பிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்றையதினம் யாழ். நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் வசித்து வந்த தனஞ்சயன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே...

மாணவனின் கையில் கற்பூரத்தைக் கொளுத்திய ஆசிரியைக்கு இடமாற்றம்

மாணவனின் கையில் கற்பூரத்தைக் கொளுத்திய ஆசிரியைக்கு, இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக, ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார். மாணவி ஒருவரின் பணத்தைத் திருடிய சந்தேகத்தில், ஆசிரியை ஒருவர், மாணவர்கள் அறுவரின் கைகளில் கற்பூரத்தைக் கொழுத்தியச் சம்பவமொன்று, பொகவந்தலாவ பிரதேச தமிழ்ப் பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவை ரொப்கில் தமிழ் வித்தியாலயத்திலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக, மாணவரொருவரின் வலது...

தமிழக மீனவர்கள் 10 பேர் நெடுந்தீவு கடற்பகுதியில் கைது

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளதுடன் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கைது நடவடிக்கை நெடுந்தீவு கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணி கொலை : கணவனின் இரத்த மாதிரிகளை பெற்றுக்கொள்ள உத்தரவு

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் கணவரின் இரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், உத்தரவிட்டார். ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணியும் 4 வயது சிறுவன் ஒருவரின் தாயான ஞானசேகரம் ஹம்சிகா (வயது...

ஆவா குழுவுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் கொள்ளை மற்றும் கப்பம் பெறும் செயற்பாடுகளில் பிரதானமாக ஈடுபட்டு வரும் ஆவா குழுவினருடன் தொடர்புடையதாக சந்தேகநபர்கள் 3 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர். யாழ்ப்பாண பொலிஸூடன் தொடர்புடைய சில குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கொட்டாஞ்சேனை...

நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது

போலிக் கடவுச்சீட்டு வைத்திருந்த நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த எட்டு பேரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு இலங்கையர்களும் போலி இந்தியக் கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த இலங்கையர்களுடன் நான்கு பிரித்தானியர்களும்...

சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுமணனின் உடலில் 06 வெளிக்காயங்கள். 16 உள்காயங்கள்

சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட, சுமணன் எனும் இளைஞனின் உடலில் 06 வெளிகாயங்களும் 16 உள்காயங்களும் காணப்பட்டதாக விசேட சட்ட வைத்திய அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார். சுன்னாக காவல்துறையினரால் கைது செய்யபப்ட்ட சுமணன் எனும் இளைஞன் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்...
Loading posts...

All posts loaded

No more posts