வித்தியா கொலை விவகாரம்: இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவியமை தொடர்பாக, இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்த் தெரிவித்துள்ளார். யாழில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார், கொழும்பிற்கு தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கு, யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நேற்று...

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 49 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர். நேற்றயதினம் அதிகாலை நெடுந்தீவு, காரைநகர் மற்றும் காங்கேசன்துறை ஆகிய கடற்பகுதிகளில் வைத்தே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் சமிந்த வலாகுளுக்கே தெரிவித்தார். குறித்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 12 றோலர்...
Ad Widget

ஆவா குழு உறுப்பினர்கள் அறுவரும் காவலில் வைத்து விசாரணை

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்ட ஆவா குழு தலைவர் உள்ளிட்ட ஆறு பேரையும் 48 மணித்தியாலங்கள் காவலில் வைத்து, யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர்கள் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதியில் வைத்து பொலிஸ் அதிகாரிகள் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின்...

பொலிஸாரின் பிணை மனுவை நிராகரித்தார் நீதிபதி இளஞ்செழியன்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் பிணை மனுவை, யாழ். மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாணவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் சார்பில் பிணை மனு, நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இக் கொலை தொடர்பான விசாரணை நடைபெற்று...

சந்தேக நபரை அடையாளம் காட்டினாா் நீதிபதி இளஞ்செழியனின் சாரதி!

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ். நீதவான் நீதிமன்றில், நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ். நல்லூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி நடத்தப்பட்ட மேற்படி துப்பாக்கிப்...

தேடுதல் வேட்டையில் 100பேர் கைது!! அடையாளம் தெரியாத 31 மோட்டார் சைக்கிள், வேன்,லொறி மீட்பு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை (07) 6.00 மணி வரை இரு நாட்களாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஷ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத...

யாழ். வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய அறுவர் கைது!

கொக்குவில் பகுதியில், பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய அறுவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொக்குவிலைச் சேர்ந்த விக்டர் நிசாந் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முக்கிய சந்தேக நபர்கள் கைது...

ஆவா குழு உறுப்பினர்கள் கொழும்பில் கைது!

ஆவா குழுவைச் சேர்ந்த தலைவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களிடமிருந்து வாள்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன. புறக்கோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நிஷா விக்டெர் என்பவர் ஆவா குழுவின் தலைவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்...

பொலிஸார் மீது வாள்வெட்டு : மேலும் ஒருவர் கைது

கொக்குவில், பொற்பதிப் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள் வெட்டு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு இளைஞன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் அம்பால் வீதியை சேர்ந்த 24 வயதான புஸ்பராஜா தக்ஸன் என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள் வெட்டை மேற்கொண்ட இளைஞர்கள் தக்ஸனின் மோட்டார் சைக்கிளை...

யாழில் தொடரும் கைதுகள்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தமது பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். ஆவா குழு உறுப்பினர்கள் என போலியாக தமது பிள்ளைகளை பொலிஸார்...

அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து புகலிடம் கோரிய பதினைந்து இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவின் ஸ்கை ட்ரேடர்ஸ்...

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இரு இளைஞசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் குறித்த சந்தேக நபர்களுக்கு தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை இரு இளைஞர்களையும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இரு இளைஞசர்கள் கொக்குவில் மற்றும் நல்லூர் ஆகிய...

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

ரயில் நிலையங்களில் உள்ள கழிவறைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோரை கைது செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் ரயிலில் யாசகம் கேட்போரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைதுசெய்ய ரயில் நிலைய பாதுகாப்புப்...

வித்தியா கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை என ஜின்டேக் நிறுவனத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர் ருவான் இளையபெரு நேற்று ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான...

சுன்னாகத்தில் வாள்வெட்டு: மூவர் கைது

யாழ். சுன்னாகம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், வாள்வெட்டுக்கு இலக்காகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக, இன்று காலை மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் யாழ். போதனா...

கோப்பாய் வாள்வெட்டுச் சம்பவம்: மேலும் இருவர் கைது

யாழ். கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகத்தின் பேரில், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்.பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (வியாழக்கிழமை) இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நல்லூர் அரசடி வீதியைச் சேர்ந்த முத்து எனப்படும் யோகராசா சதீஸ் மற்றும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த அருள்சீலன் பிரட்றிக் தினேஸ் ஆகிய இருவமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

சுண்ணாகத்தில் வாள்வெட்டு சம்பவம் ; முவர் படுகாயம்

வாள்வெட்டு சம்பவம் ஒன்று நேற்று இரவு சுண்ணாகத்தின் மத்தியில் இடம்பெற்றுள்ளதாக சுண்ணாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரும் 21 வயது மதிக்கத்தக்க இருவரும் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

வாள்வெட்டு சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவு

கொக்குவில் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை, அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (புதன்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறும் பணித்துள்ளார்....

நீதிமன்றம் உத்தரவிட்டால் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவிடம் விசாரணை நடத்தப்படும்: பொலிஸ்

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான பிரதான சந்தேகநபர் தப்பிச்செல்ல இராஜாங்க அமைச்சர் விஜயகலா உதவியதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டால் அவர் மீது விசாரணை நடத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வித்தியா கொலை...

சுமந்திரன் கொலை முயற்சி: ஆஸி. செல்கிறது விசாரணைக் குழு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள, விசேட பொலிஸ் விசாரணை குழுவொன்று அவுஸ்ரேலியா செல்லவுள்ளது. குறித்த சந்தேகநபரை நாடுகடத்த தேவையான ஆவணங்களுடன் அந்நாட்டிற்குச் செல்லும் விசாரணைக் குழு, அந்நாட்டு அரசாங்கத்திடம் இக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது. இக் குழுவினர் இவ்வாரம் அவுஸ்ரேலியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமந்திரனை...
Loading posts...

All posts loaded

No more posts