- Tuesday
- April 22nd, 2025

நாளை சனிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்பரப்பில் புதன்கிழமை (25) இரவு அத்துமீறி நுழைந்துள்ள இந்திய மீனவர்களின் றோலர் படகுகள், இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து பாரிய சேதத்தை விளைவித்துள்ளன என்று கடற்றொழிலாளர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த மீனவர்களில் 150க்கும் மேற்பட்டவர்களின் வலைகளை றோலர்களில் வருகை தந்த இந்திய மீனவர்கள், நாசம் செய்தனர் என்று வடமராட்சி...

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலுக்காக போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இன்று புதன்கிழமையுடன் நிறைவு செய்ய வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...

கிளிநொச்சி பிரமந்தனாறு நாதன் திட்டப் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திங்கட்கிழமை (23) இரவு 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த தர்மரத்தினம் தர்மசீலன் (வயது 32) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கல்லாறு பகுதியிலுள்ள தவறணையில் திங்கட்கிழமை...

மத்திய அரசில் அங்கத்துவம் வகிக்கும் வன்னி அமைச்சரின் அதீத தலையீட்டினால் மீள்குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறும் மக்களுக்காக இந்திய அரசினாலும் வேறு சர்வதேச நிறுவனங்களினாலும்...

தமிழீழ விடுதலைப்புலிகள் தீர்க்கதரிசனத்துடன் தமிழர்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய அமைப்பாக மாபெரும் ஜனநாயக சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு சென்றுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் நாச்சிக்குடாவில் இடம்பெற்றது. காயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது யாழ்....

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயான ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு அவரின் மகள் விபூசிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது மகாதேவா ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுமி விபூசிக்கா, தனது தாய் கைது செய்யப்பட்டமைக்கான விபரம் முழுவதையும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர் அட்டை உள்ளவர்களில் 2500 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டையில்லை என கபே அமைப்பு சுட்டுக்காட்டியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு, கரைத்துறைபற்று இரு பிரதேசங்களிலும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. எனினும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 2500 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு...

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு வருமாறு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். முல்லைத்தீவு பொலிசார் ஊடாக இந்த அழைப்பாணையை கடந்த புதன்கிழமை பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் விடுத்துள்ளனர் என மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். அந்த அழைப்பாணையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத...

பிரதேச செயலகங்கள் மக்களின் பணியோடு நின்றுவிடாமல் சமூக பணியுடன் கலை பண்பாடுகளையும் பாதுகாக்க வேண்டுமென முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற பண்பாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, எமது மாவட்டம் பல...

யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் காலை 8.00 மணிக்கு துணுக்காய் வரை செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் போட்டித்தன்மையால் பயணிகள், அரச உத்தியோகத்தர்கள் தினமும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து அதாவது யாழ்ப்பாணம் கிளிநொச்சி, ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் அரச மற்றும் அரச...

பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட நெல்லை கொள்வனவு செய்பவர்கள் விலை, நிறை என்பனவற்றில் மாறுபாடுகள் செய்வதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மூடை நெல்லின் நிறை 69 கிலோகிராம் ஆகும். ஆனால் உடன்...

முல்லைத்தீவு, விசுவமடு விவசாயிகள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கித் திறப்பு விழா பொதுமக்களின் எதிர்ப்பால் செவ்வாய்க்கிழமை (10) கைவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் பொதுத்தேவைக்கென கடந்த 1977ஆம் ஆண்டு ஒதுக்கிய 6 ஏக்கர் காணியை, கடந்த 2011ஆம் ஆண்டு விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கம் அத்துமீறி அபகரித்துள்ளதாகவும் இதனை மீட்டுத்தருமாறு வள்ளுவர்புரம்...

புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரிஷாத் பதியுதீனை வரவேற்கும் நிகழ்வுகள் வன்னியில் இடம்பெற்று வருகின்றன. நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவுக்கு வருகை தந்த அமைச்சரை 'எமது தலைவரே வருக' என்று எழுதிய பதாதைகளுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய அரசின் கொள்கைகளில் ஒன்றான அரச ஊழியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது....

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமற்போயுள்ள வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், கடந்த ஆறு வருடங்களாகக் காணமற்போனவர்களைத் தேடி அவர்களது உறவுகள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்தும் புதிய அரசு அதுபற்றி அக்கறை காட்டுவதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். காணாமற்போனவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டச்...

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்டப் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் முல்லைத்தீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காணாமல் போனோரை கண்டுபிடிக்க கோரியும், கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியுமே இந்தப்...

கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை அமோக விளைச்சலைப் பெற்றுள்ள நிலையில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (06.02.2015) அறுவடை விழா நடைபெற்றுள்ளது. மத்திய கல்வி அமைச்சால் விவசாய வளாகப் பாடசாலை என அங்கீகாரம் பெற்ற உருத்திரபுரம் மகா வித்தியாலயம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 3...

முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சோதனை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு ரெட்பானா பாரதி வித்தியாலய மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உபகரணப் பொருள்களை வழங்கி விட்டு ரவிகரன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தச் இடம்பெற்றுள்ளது. ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்தார் எனக் கூறியே கடற்படையினரால் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சோதனை...

தமிழகத்தில் தைப்பொங்கல் திருநாளுக்கு முதல்நாள் பழையவற்றை எரித்துக்கழிக்கும் போகிப்பண்டிகையை வெகுசிறப்பாகக் கொண்டாடுவார்கள். அதேபோன்றுதான் நாமும், பொங்கலுக்கு முதல் வந்த தேர்தலில் பழைய ஜனாதிபதியை எமது வாக்குகளால் எரித்துப் பொசுக்கி அதிகாரத்தில் இருந்து களைந்திருக்கிறோம். புதிய அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இனப்பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வை முன்வைக்கத் தவறினால் நாம் இன்னுமொரு போகியைக் கொண்டாடவேண்டிவரும். என்று...

All posts loaded
No more posts