போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகள்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்கள் நடத்தி வரும் நில மீட்புப் போராட்டத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றது. போராட்டம் நடைபெறும் இடத்துக்கு முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் வருகை தந்து சிறுவர்களைப் பரிசோதனை செய்து மருந்துகளையும் வழங்கி வைத்தனர். கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து தமது பூர்வீக...

கேப்பாப்பிலவு படைமுகாம் கட்டடங்கள் புனருத்தாபனம்!

கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியான போராட்டத்தினை நடத்தி வருகின்ற நிலையில், காணி விடுவிப்பு தொடர்பான எந்த விதமான கரிசனையும் கொள்ளாத விமானப்படையினர், படைமுகாமுக்குள் உள்ள கட்டடங்களின் புனருத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விமானப்படையின் விடுமுறை மண்டபத்துக்கான புனருத்தான பணிகளையே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பிலவுக்குடியிருப்பில் உள்ள மக்களுடைய காணிகளை...
Ad Widget

கிளிநொச்சியில் டெங்குக் காய்ச்சலால் 17 வயது மாணவி பலி!

கிளிநொச்சி மாவட்டம் ஜெயந்தி நகரைச் சேர்ந்த 17 வயது மாணவியொருவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு டெங்கு அல்லது எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பப்படுகின்ற போதும் டெங்கு காச்சலுக்கான வாய்பே அதிகமுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிகின்றன. மாணவியின் மரணத்திற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பட்டுள்ளது எனவும்...

தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்; விமானப்படை எச்சரிக்கை

முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீளகுடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய காணிகள் மீண்டும் கிடைக்காது விடின் விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவரும் என மக்கள் தெரிவித்திருந்தனர். இந்த...

குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி

வவுனியா மாவட்டம் கனகராயன்குளத்திலுள்ள குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி பாடசாலை அதிபர் செல்வி ஜெயந்தினி அவர்களது தலைமையில் நேற்று(17 மாசி 2017) இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு...

கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக கிளி. வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் இன்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது 524 ஏக்கர் காணிகளை தங்களிடம் கையளிக்க கோரி கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 18ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களின்...

நாய்களை ஏவிவிட்டு மக்களைக் கலைக்கும் இராணுவம்!

இன்று 18ஆவது நாளாக தமது நிலத்தை மீட்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் பிலவுக்குடியிருப்பு மக்களைத் துரத்துவதற்காக விமானப்படையினர் நாய்களை ஏவிவிடுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிலவுக் குடியிருப்பு மக்களின் சிறீலங்கா விமானப்படையினர் கடந்த எட்டு ஆண்டுகளாகக் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலையில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு குறித்த மக்கள் கடந்த 31ஆம் நாளிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...

கேப்பாபிலவு போராட்டம் : வீதியில் பிறந்த நாள் கொண்டாடிய சிறுமி!

கேப்பாபிலவு புலக்குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4வயதுக் குழுந்தையான சதீஸ் கதிசனா தனது பிறந்தநாளை வீதியோரத்தில் கேக்வெட்டிக் கொண்டாடிய சம்பவம் அனைவரது மனங்களையும் உருகச்செய்துள்ளது. கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியு்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். தமது சொந்த நிலத்தில் வாழ்ந்திருந்தால் இவ்வாறு...

பாடசாலையைப் புறக்கணித்து போராட்டத்தில் இணைந்துகொண்டனர் மாணவர்கள்!

நேற்று மூன்றாவது நாளாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உயர்தர மாணவர்கள் நேற்று பாடசாலையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினை வெளிப்படுத்தி வரும் நிலையில், நேற்று பாடசாலை மாணவர்களும் இப்போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர். இருப்பினும் அண்மையில்...

கிளிநொச்சியில் ஜரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டம் அங்குரார்ப்பணம்

ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் ​நேற்று இடம்பெற்றது. ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவா் ஹி டுங்லாய் மர்கியு சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு, கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மருதநகர் கிராமத்தில் இரண்டு வீட்டுத்திட்ட பயனாளிகளின் வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். கிளிநொச்சி மாவட்டத்தில்...

எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் கைது

வவுனியா - மறவன்குளம் பகுதியில் நேற்று (15) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியினை மேற்கொண்ட நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று காலை குறித்த சிறுமி வீட்டின் பின்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியிலுள்ள 45 யதுடைய நபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றதை அவரது சகோதரன்...

கிளிநொச்சி மக்களுக்கு அவசர அறிவித்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படுவதால் ஒவ்வொருவரும் உங்களால் இயன்றபங்களிப்பை...

கேப்பாப்பிலவை வட்டமிட்ட விமானம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ராணுவமும் பொலிஸாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு மேலாக விமானப் படையினரின் விமானமொன்று திடீரென வட்டமிட்டுச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள்...

வடக்கில் 3 சிறுவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்! மாகாணம் முழுவதும் அச்சுறுத்தல்!!

வன்னியில் 3 சிறார்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைத் தனிப் பிரிவில் வைத்துச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.இந்த நோய்த்தொற்று அச்சுறுத்தல் வடக்கு மாகாணம் முழுவதும் உள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.ஹதொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிகையில்"2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தல்...

வீதிகளில் சிதறிக்கிடக்கும் மின்சார சிட்டைகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின்...

காணிகள் விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கூற்றை ஏற்க மக்கள் மறுப்பு

முல்லைத்தீவு – கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வழங்கியதை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், காணி விரைவில் விடுவிக்கப்படும் என கூறியமை தொடர்பான தகவலை, கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் நேரில் சென்று மாவட்ட அரசாங்க...

மக்களின் காணியை இராணுவத் தேவைக்கு வழங்குமாறு பிரதேச செயலருக்கு கடிதம்!

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளான மொத்தம் 9 ஏக்கரையும் படையினரின் பயன்பாட்டிற்கே வழங்குமாறு இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் மீன்டும் கோரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தின் பெரும் பகுதியை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்தனர். இதற்குள் மக்களின் நிரந்தர உறுதிக்காணிகள் பலவும் அடங்கியிருந்தன. இவற்றினை விடுவிக்குமாறு கோருக்கை...

கடும் மழைக்கு மத்தியிலும் போராட்டத்தை கைவிடாத மக்கள்

கடும் மழைக்கு மத்தியிலும் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைக்கு தீர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், இன்று 15 ஆவது நாளாகவும் அம் மக்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட காணிகளை தம்மிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளளது....

முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகள் நடமாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள அம்பகாமத்தை அண்டிய பகுதிகளில் நடமாடும் புலிகளினால் இதுவரை 14 மாடுகளை பிடித்துச் சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் குறித்த பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுடிசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பகாம் மற்றும் மம்மில் பிரதேசங்களில் புலிகளினால்...

ஆதரவு தெரிவிக்க வருபவர்களை புகைப்படம் எடுக்கும் படையினர்

கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு வழங்க மற்றும் உதவிகளை வழங்க செல்வோரை விமான படையினர் தமது அலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகின்றார்கள். அத்துடன் வருபவர்களின் வாகன இலக்கங்களையும் குறிப்பெடுத்து கொள்கின்றனர். கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார். அப்பகுதி மக்களின்...
Loading posts...

All posts loaded

No more posts