தமிழ், சிங்கள மீனவர்களுக்கிடையில் முறுகல்

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பிலான அளவீட்டின் போதே, இந்த அமைதியின்மை இன்றைய தினம் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. யுத்தத்தினால் கொக்குளாய் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழ் மீனவர்கள் இடம்பெயர்நத நிலையில், தமிழர்களின் கரைவலைப்பாடுகளை நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துவந்த...

ஊடகவியலாளர்களின் தொழில் திறன் விருத்திக்கான பயிற்சிகள்

கிளிநொச்சியில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக ஊடகத் தொழில் ஈடுப்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க.திருலோகமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று (17) கிளிநொச்சியில் இடம்பெற்ற கிளிநொச்சி ஊடக அமையத்தின் இருபது ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில்...
Ad Widget

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பின் கீழிருந்த தங்கங்களை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பின் கீழிருந்த மற்றும் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை, உரியவர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது. அவ்வாறு மீட்கப்பட்ட, சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை முதற்கட்டமாக கையளிப்பதற்கான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவல்...

மினி சூறாவளி ; 38 வீடுகள் சேதம்

வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், மழையுடன் கூடிய கடுங்காற்று வீசியமையால், 38 வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. அந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாம் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக, பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தினால், வவுனியா களுக்குன்னமடுவ, பெரியக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளே சேதமடைந்தன. எனினும், இந்த அனர்த்தத்தினால் எவருக்கும் சிறு காயங்கள்...

பூநகரி முட்கொம்பனில் விபத்து : முந்திச்செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் முன்சென்ற வாகனத்தில் மோதி ஒருவர் பலி

பூநகரி - முட்கொம்பன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக பயணித்த வாகனம் ஒன்று, பூநகரி - பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு திருப்பிய போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், இதன்போது காயமடைந்த இருவரும் கிளிநொச்சி...

தமக்கு எதிராக போராடும் மக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய இராணுவத்தினர்!

முல்லைத்தீவில் கேப்பாபுலவு இராணுவத் தலைமையகம் முன்பாக தமது பூர்வீகக் காணிகளை மீட்கப் போராடும் மக்களுடன் இராணுவத்தினர் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இம் மக்கள் கடந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டத்தை 56ஆவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றனர். இந்த நிலையில் இராணுவத் தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இராணுவத்தினர் சென்று சந்தித்து புத்தாண்டு...

புதுவருடத்தை துக்கதினமாக அனுஷ்டித்த மக்கள்!

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை 54 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். சித்திரை புதுவருட...

மலையக மக்களை இழிவுப்படுத்தியதால் நிறுத்தப்பட்டது கரை எழில் நூல் விநியோகம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில் கரை எழில் எனும் நூலும் வெளியிடப்பட்டு வருவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் பல்வேறு ஆக்கங்களுடன் வெளியிடப்படுகின்ற கரை எழில் நூலில் கிளிநொச்சியும் மலையக தமிழர்களும் எனும் தலைப்பில் தமிழ்க்கவி என்பவரின் கட்டுரையும் வெளிவந்துள்ளது. குறித்த கட்டுரையில் எழுத்தாளர் கிளிநொச்சி வாழ் மலையக தமிழர்களை...

பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு: முறையிட்டால் நடவடிக்கை

“இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ அல்லது என்னிடமோ, பாதிக்கப்பட்ட பெண்ணினால் முறைப்பாடு செய்யப்படுமாயின், நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்தார். சிறிதரன் எம்.பியின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமாகி வேழன் என்றழைக்கப்படும் அருணாச்சலம்...

முல்லைத்தீவிலிருந்து சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்

முல்லைத்தீவு - நாயாறு களப்புப் பகுதியில் அத்துமீறி நுழைந்த 23 சிங்கள மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களால் அடாத்தாக அமைக்கப்பட்டிருந்த 8 வாடிகளில் 6 வாடிகள் அகற்றப்பட்டும் உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளரினால் கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி நாயாறு...

கேப்பாப்பிலவில் அமைக்கப்பட்ட அடுக்கு மாடியைத் தக்கவைக்க இராணுவம் முயற்சி!

பாதுகாப்பு அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் அமைக்கப்பட்ட 150 கோடி ரூபா பெறுமதியான கட்டடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக் கட்டடம் அமைந்துள்ள தமக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு அங்குள்ள மக்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்ற நிலையில், மக்களுக்கு மாற்றுக் காணிகளும் பணமும் வழங்குவதற்கு அரச அதிகாரிகளுடன்...

பொதுச்சந்தைக் காணியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினர்

முல்லைத்தீவு, புதுகுடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள பொதுச்சந்தைக்குரிய காணியில், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் நடத்தி வந்த சிறு வர்த்தக நிலையம், தேனீர் சாலை மற்றும் இலவச திரையரங்கு என்பவற்றை, அங்கிருந்து இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். இந்தத் திரையரங்கு, வர்த்தக நிலையம் என்பன கடந்த புதன்கிழமை (05) அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது, இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த...

தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி தாய் ஒருவர் விசப் போத்தலுடன் போராட்டம்

தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் இணைந்து விசப் போத்தலுடன் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டார். குறித்த பிரச்சினைக்கு ஒரு வார காலத்திற்குள் சரியான முடிவு வழங்கப்படும் என மாவட்ட செயலக அதிகாரியால் உறுதிமொழி வழங்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. வவுனியா தோணிக்கல்...

மூல்லைத்தீவில் சோகம் : பிறந்து ஒரே நாளேயான சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் இந்த குழந்தையை பிரசவித்து, எரித்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்....

வட்டுவாகல் பிரதேசம் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்றது!

முல்லைத்தீவு, வட்டுவாகல் கடற்படைத்தளம் அமைந்துள்ள பிரதேசம், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற பிரதேசம் என கடற்படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 372 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 617 ஏக்கர் காணியில் வட்டுவாகல் கடற்படைத்தளம் அமைந்துள்ளது. இப்பகுதியில், பொதுமக்களுக்கு சொந்தமான 600 வரையான கால்நடைகளும் உள்ளன. இவற்றை பொது மக்கள் விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியபோதும்...

திணைக்கள காணிகளை விடுவிக்க கோரி கண்டன பேரணி

கிளிநொச்சி மாவட்டத்தில் ராணுவத்தின் வசமுள்ள திணைக்கள காணிகளை விடுவிக்க கோரி மாவட்ட விவசாய சம்மேளனத்தினால் கண்டனப் பேரணி ஒன்று நேற்று (27) முன்னெடுக்கப்பட்டுள்ளன. வட்டக்கச்சி பண்ணைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கண்டனப் பேரணி சிறிது தூரம் ஊர்வலமாக வந்து பின்னர் அங்கிருந்து வாகனங்களில் கிளிநொச்சி நகருக்கு வருகை தந்து மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக சென்று ஜனாதிபதி...

டெங்கு வருமுன் தடுக்க அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்

சுகாதார அமைச்சானது எதிர்வரும் வரும் 29 இலிருந்து சித்திரை 4 வரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. 2017 ம் ஆண்டில் வரும் முதலாவது டெங்குக் கட்டுப்பாட்டு வாரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது. எனவே தேசிய நிகழ்ச்சி திட்டத்திற்கு மக்களின் ஒத்துழைப்பை வழங்குமாறும் பொதுச் சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வரலாற்றில் இல்லாத பாரிய டெங்குநோய்த் தாக்கத்திற்கு நாடு...

சாட்சியை கோரும் இராணுவம்; கதிகலங்கும் மக்கள்

இராணுவத்தின் கையில் கொடுத்த தமது பிள்ளைகள் தொடர்பில் விசாரணைக்காக செல்லும்போது உங்கள் பிள்ளையை இராணுவத்திடம் கொடுத்ததற்கான சாட்சிகள் உள்ளதா? என கேட்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர். இறுதி யுத்தம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தின் கையில் கொடுத்து விட்டே தாம் நலன்புரி நிலையங்களுக்கு சென்று தமது பிள்ளைகள் வருவார்கள் என காத்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்....

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் பாரிய விளையாட்டு மைதானம்

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் வட்டுவாகல் பாலத்துக்கு இருகில் பாரிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது. 32 ஏக்கர் நிலப்பரப்பில் 780மில்லியன் ரூபா செலவில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அளவீடு பணிகள் நேற்று காலை ஆரம்பமாகின. இந்த தேசிய விளையாட்டு மைதானம் முல்லைத்தீவுக்கு தேவை என்பதனை மறைந்த வடக்கு மாகாணசபை பிரதி அவைத்தலைவர் அமரர் அன்ரனி...

மடு பிரதேசத்தில் பெருந்தொகையான காணி ராணுவத்தின் வசமுள்ளது

மன்னார் – மடு பிரதேச செயலக பிரிவில் காணப்படும் 48 ஏக்கர் காணி பாதுகாப்பு தரப்பிடம் உள்ளதாக மடு பிரதேச செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவை தளமாகக் கொண்டு இயங்கும் அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு எனும் அமைப்பானது, குறித்த பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு தரப்பால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி விபரங்களை தருமாறு கோரி தகவல்...
Loading posts...

All posts loaded

No more posts