“முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் எனது பிள்ளையை பேருந்தில் ஏற்றியதைக் கண்டேன்”: தாயொருவர் சாட்சியம்

“அரசாங்கத்தை நம்பி இராணுவத்திடம் ஒப்படைத்த எமது பிள்ளைகளைப் பற்றிய தகவல்களை விரைவில் வழங்கவேண்டும்” என கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 68ஆவது நாளாக (வெள்ளிக்கிழமை) தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவரே இவ்வாறு...

A9 வீதியை வழி மறித்து போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும்” என, தெரிவித்து உறவினர்களால் குறித்த போராட்டம் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் 67ஆவது நாளாக நேற்றம் முன்னெடுக்கப்பட்டது. 67 நாட்கள் ஆகியும் அரசாங்கம் தீர்வு எதனையும் வழங்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஏ-9 வீதியை வழி...
Ad Widget

ஹர்த்தாலிற்கு ஒத்துழைத்து போராட்டத்தை பலமடையச் செய்யுங்கள்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலிற்கு ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தினை பலமடையச் செய்யுமாறு, கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்தராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார். நேற்றயதினம் (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் எங்களுடைய...

முன்னாள் போராளி ஒருவர் உட்பட இருவர் சுட்டுப்படுகொலை!

வெளிநாட்டு முகவர் ஒருவரினால் புலம்பெயர்ந்து சென்ற முன்னாள் போராளி ஒருவர் உட்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் ஈரான் எல்லைப்பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்லும் நோக்கில் முல்லைத்தீவு செம்மலை மற்றும் உடுப்புக்குளம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புறப்பட்டிருக்கின்றனர். வெவ்வேறு...

கேப்பாப்புலவில் 189 ஏக்கர் தனியார் காணி 6 வாரங்களில் விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் 189 ஏக்கர் விஸ்தீரனமான தனியார் காணிகள் நிதிஒதுக்கீடுகள் கிடைத்ததன் பின்னர், 6 வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா உறுதி அளித்துள்ளார். அதேபோல், முள்ளிக்குளம் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளை, தேசிய காணி விடுவிப்பதற்கான நடைமுறையின் கீழ் விடுவிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர...

முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த கால்பந்து சுற்றுப் போட்டி : அக்கினி சிறகுகளிடம் ரி.ஐ.டி விசாரணை?

அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ”நொக் அவுட்” முறையிலான கால்பந்து சுற்றுப் போட்டியை, அக்கினிச் சிறகுகள் அமைப்பு, கிளிநொச்சியில் நடத்திவருகிறது. இதில், வடக்கு, கிழக்கிலுள்ள விளையாட்டு சங்கங்கள் பங்குபற்றுகின்றன. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினத்தை அடிப்படையாக கொண்டே, இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மே18...

எங்களுக்கு எமது பிள்ளைகள் கிடைக்காவிட்டால் இவ்விடத்திலேயே செத்துவிடுவோம்

“இறுதி யுத்தத்தில் நந்திக்கடல் பகுதியில் காணாமல் போன எனது 17 வயதான பெண்பிள்ளை குறித்த தகவல்கள் எதுவுமே தெரியாது. இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்ததைக் கண்டதாக எமது உறவினர்கள் கூறினார்கள். எங்களுக்கு எமது பிள்ளைகள் கிடைக்கவேண்டும், இல்லையெனில் இவ்விடத்திலேயே செத்து விடுவோம்” என கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவான தாயொருவர்...

27ம் திகதி பூரண ஹர்த்தால் : தமிழ் மக்கள் பேரவையும் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்​டோர் மற்றும் நில மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள அழைப்பிற்கு, தமிழ் மக்கள் பேரவையும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு நீதி கோரும் வகையில், தமிழ்...

வறுமையின் காரணமாக தொழிலிற்கு சென்ற சிறுவன் சடலமாக வீடு திரும்பிய அவலம்!!

முல்லைத்தீவு பாலிநகர்ப் பகுதியில் யுத்தத்தில் தந்தையை இழந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக 16 வயதில் தொழிலிற்காக கொழும்பு சென்ற நிலையில் நேற்றைய தினம் சடலமாக வீடு திரும்பிய அவலம் நிகழ்ந்த்து. குறித்த சம்பவத்தில் பாலிநகரைச் சேர்ந்த விக்கினேஸ்வரன் - வினோதன் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பி்தேச...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் விபரங்கள் சமர்ப்பிப்பு

வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் பேர் விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று(வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தயாகத்தில் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் நடை பெறும் இடத்துக்கு கடந்த மாதம் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண விஜயம்...

கிளிநொச்சியில் 15 வயது சிறுமி கடத்தல்!

15 வயது சிறுமி 13 பேர் கொண்ட மோட்டார் ஊர்திகளில் வந்த குழுவினரால் கடத்தப் பட்டுள்ளார். தர்சனா கோவிந்தசாமி எனும் இந்த சிறுமி (April 20, 2017) காலை 10 மணியளவில் பிரமந்தனாறு கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த வேளையிலேயே கடத்தப்பட்டுள்ளார். இவர் உரித்திரபுரத்திலுள்ள மகாதேவா இல்லத்தில் வசித்து கல்வி பயில்பவரெனவும் விடுமுறைக்காக...

திடீரென மயங்கி விழுந்த கர்ப்பிணிப்பெண் மரணம்

சமுர்த்தி கூட்டத்திற்குச் சென்றுகொண்டிருக்கும்போது கர்ப்பிணித் தாயார் ஒருவர் சடுதியாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த கர்ப்பிணிப்பெண் வீதியில் மயங்கி விழந்ததையடுத்து உறவினர்களும் அயலவர்களும் அவரை தருமபுரம் வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச்சென்றபோதிலும் அதற்கிடையில் அவரது உயிர்பிரிந்துவிட்டது. இறக்கும்போது கர்ப்பவதியாக...

காக்கை வன்னியன் போன்றவர்களால் தமிழர் சமுதாயம் அழிகின்றது

காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் எம்முட் சிலர் ஈடுபடுவது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் அமைக்கப் பெற்ற மாவீரன் குலசேகரம் வயிரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை திறப்பு விழா நேற்று...

கிளிநொச்சி அபிவிருத்திக்கு இடையூறாக வனவள திணைக்களத்தின் செயற்பாடுகள்: அரச அதிபர்

வனவளத்திணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். மாவட்டச்செயலகத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச காணிகள் அனைத்தும் தங்களுடைய வனவளத் திணைக்களத்திற்குரியவை என்றும் அதில் எந்த பணிகளை மேற்கொள்வதாக இருந்தாலும் தங்களின் அனுமதியை...

நில மீட்பு போராட்டத்தை கைவிடாதீர் : முதலமைச்சர் ஆலோசனை

மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை காணிகள் விடுவிக்கப்படும் வரை கைவிட வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். நேற்றயதினம் கேப்பாபுலவு மக்களை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 52 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கும்,...

காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் உள்ளது

தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பிரகாரம் படிபடியேனும் காணிகள் விடுவிக்கப்படும்...

கேப்பாப்பிலவு மக்களுக்கு மாற்றுக் காணிகளே வழங்கப்படும்: இராணுவம் திட்டவட்டம்

கேப்பாப்பிலவு மக்களின் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் அல்லது நஷ்டஈட்டுத்தொகையே வழங்கப்படும் என இராணுவத்தினர் உறுதியாக கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் காணியிலுள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தலைமையகத்தை அகற்றி அந்த காணிகளை மக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) அரசாங்க அதிபர் மற்றும்...

கிளிநொச்சியில் காற்றுடன் கூடிய மழை!

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்னகர், பாரதிபுரம், செல்வபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதுடன், பயன்தரும் மரங்களும் சேதமடைந்துள்ளது. திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியமையால் குறித்த பாதிப்பை மக்கள் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வீடுகள்...

வட்டுவாகல்,கேப்பாபிலவு போராட்டங்களில் கஜேந்திரகுமார் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலை அண்டிய வட்டுவாகல் பகுதி ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி மக்களால் நேற்று 19-04-2017 ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து கேப்பாபிலவு சென்று அங்க தொடர்ச்சியாக காணி விடுவிப்பிற்காகப் போராவரும்...

கிளிநொச்சியில் அன்னை பூபதியின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

அகிம்சை போராட்டத்தின் மூலம் தமிழர்களின் போராட்டத்தை முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்த அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்றது. இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற இந் நினைவுதின நிகழ்வில், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு,...
Loading posts...

All posts loaded

No more posts