மீன்கள் இறந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது

கடந்த தினங்களில் நந்திக்கடல் களப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய வட்டுவாகல் களப்பில் பல்வேறு வகையான மீனினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பிரதேசங்களில் நிலவிய கடும் வறட்சியே அதற்கான காரணம் என மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாரா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, வறட்சியான காலநிலையில் களப்பு மற்றும் கடலுக்கு இடையிலான தொடர்பு...

கருத்தமர்வு எனக்கூறி மாணவியை அழைத்துசென்ற ஆசிரியரால் பரபரப்பு!

கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரம் கல்வி பயிலுகின்ற மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்ற...
Ad Widget

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு உள்ளகப் பயிற்சி மருத்துவர்களை நியமிக்க அனுமதி

இலங்கை மருத்துவ சபை கிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலைக்கு உள்ளகப்பயிற்சி மருத்துவர்களை நியமிப்பதற்கான அனுமதியினை மத்திய சுகாதார அமைச்சுக்கு கடந்த வாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாணத்தில் தற்போது யாழ்போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமே மருத்துவர்கள் உள்ளகப் பயிற்சிக்காக (Internship) நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், எதிர்வரும் நவம்பர்...

இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!

முல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப் பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளன. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திராதிகள் உதவியுடன் அந்த பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல்...

இரணைமடுவுக்கு கீழான சட்டவிரோத நெற்பயிர்கள் அழிப்பு

கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு கீழான தீர்மானிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக மேலதிகமாக விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் இன்று 01-06-2017 அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டுக்கு 890 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு இரணைமடு குளத்திள் கீழ் உள்ள 22 கமக்கார அமைப்புகளுக்கும் வயல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் தீர்மானிக்கப்பட்ட அளவை விட...

பூர்வீக நிலத்திற்கு திரும்பச் செல்ல வலியுறுத்தி மக்கள்பேரணி

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் தாங்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்ல திரும்பச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று (29) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு கிளிநொச்சி திரேசாம்பாள் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச...

கிளிநொச்சியை சிறந்த நகரமாக மாற்றுவதற்கு இராணுவம் தடையாகவுள்ளது: சிறிதரன்

கிளிநொச்சி ஒரு நகரமாக மாற்றமடையாது இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் காரணமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், நகர திட்டமிடல் பற்றி விளக்கமளித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கடுமையான...

வடக்கு பல அபிவிருத்தி பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளது

கிளிநொச்சி மாவட்டம் குடிநீர் தட்டுப்பாடு, பெருமளவு வீதிகள் புனரமைக்கப்படாமை, முறையான நகர் திட்டமிடல் இல்லாமை, பாரிய தொழிற்சாலைகள் மீள இயங்காமை, குளங்கள் புனரமைக்கப்படாமை, நன்னீர் மீன்பிடி தொழில் வளர்ச்சியடையாமை போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குள் சிக்குண்டுள்ளது. இந்த நிலையில் விசேட அபிவிருத்தி திட்டங்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையாக உள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட...

கிளிநொச்சி நீர்த்தாங்கி இம்மாத இறுதியில் இராணுவத்தினரால் விடுவிப்பு

யுத்த அழிவு சின்னமாக பேணப்பட்டு வந்த கிளிநொச்சியில் யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி இராணுவத்தினரால் எதிர்வரும் முப்பதாம் திகதி விடுவிக்கப்படவுள்ளது. குறித்த நீர்ததாங்கி உள்ள நாற்பது பேர்ச் காணி இராணுவத்தினரால், கரைச்சி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதனை பிரதேச செயலகம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையிடம் கையளிக்கவுள்ளது. யுத்த காலத்தில் இராணுவத்தினராலும்...

ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இரவு 8.30 மணிக்கு யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டே குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பொன்னகரை சேர்ந்த தவமன்றன் பாலசூரியர் என்ற 43 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து குறித்த...

முல்லைத்தீவில் மூன்று கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு வேலைத்திட்டங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு கமநலசேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மூன்று கோடி 70 இலட்சம் ரூபா செலவில் பத்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மத்திய கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சிறிய குளங்கள் புனரமைப்பு, நீர் விநியோக வாய்க்கால்கள் புனரமைப்பு போன்ற பத்து வேலைத்திட்டங்கள்...

வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைப்பு

வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி வாடியடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இதனை வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புதன்கிழமை (24.05.2017) சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின்...

விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் திடீர் அகழ்வு

வறக்காபொல பகுதியைச்சேர்ந்த நிமல் சேனாரத்ன என்ற நபர் 2009 ஆண்டு பிற்பகுதியில் விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணி புரிந்துள்ளார். குறித்த நபர் 2010 ம் ஆண்டு இரண்டாம் மாதம் முதல் வீடு வந்து சேரவில்லை என அவரது மனைவியால் வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு...

பிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர் : பொதுமக்கள் விசனம்

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் காணப்பட்ட ஒரு அரச மரத்தில் கடந்த முப்பது வருடங்களாக பிள்ளையார் கோவில்...

போராட்டங்களை உதாசீனம் செய்தால்!விளைவுகளை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டிவரும்!

உரிமையைக் கேட்டு அமைதியான முறையில் போராடும் மக்களின் போராட்டங்களை உதாசீனம் செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டிவருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணனியின் தலைவருமான சுரேஸ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார். எனவே நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம் தனது நல்லெண்ண அடிப்படையில்...

கடும் நிபந்தனைகளுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் அனுமதி!

சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மாலை அனுஷ்டிக்கப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை, கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களது பெயர்கள் காணப்படக் கூடாது என்ற...

எமது நினைவேந்தல் நிகழ்வு அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுது. இதில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர், உயிர் நீத்தோருக்கான எமது பிரார்த்தனை நிகழ்வு தற்போது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே நான் காண்கின்றேன் என்றார். தொடர்ந்து உரையாற்றிய...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கிளிநொச்சியில் தனி சிங்கள கொடி!

கிளிநொச்சி நகரில் சிறுபான்மை இனங்களை சித்தரிக்கும் நிறங்கள் அகற்றப்பட்ட தனி சிங்கள கொடி சில விஷமிகளால் பறக்கவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பகுதிக்கு பேருந்தில் வந்த சிலரால் இந்த கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலானது, இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறிவரும்...

நீதிமன்ற தடை உத்தரவுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் பகுதில் நினைவுக் கற்கள் நாட்டப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைகூரும் விதமாக பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்கள் நாட்டதாக நிகழ்வில் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக நினைவுக்கற்களை...

முல்லைத்தீவில் ஹர்த்தால்

வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூறும் வகையில், இன்று வியாழக்கிழமை (18) முழுவதும், முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஹர்த்தால் காரணமாக, பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ள போதிலும், அரச நிறுவனங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts