- Thursday
- February 27th, 2025

சிறைச்சாலையில் வைத்து கைதிகள் தாககப்பட்டதை கண்டித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றசட்டத்தரணிகள் நேற்று நண்பகலிற்கு பின்னர் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் இந்த பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்ததுடன் நீதியமைச்சருக்கு மகஜர்...

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற சுகாதாரத் தொண்டர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான ஆதரவினை கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் வழங்கி வந்தனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு...

தனது பாராளுமன்ற உத்தியோகபூர்வ கடிதத்தலைப்பினையும் பதவி இலட்சினையையும் பயன்படுத்தி தான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதுபோல யாரே மோசடியில் ஈடுபட்டுவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். தான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதவில்லை என்றும் கிளிநொச்சிக்கு கல்வி அமைச்சு வேண்டாம் என்று கூறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர் தனது அரசியல் நேர்வழியை அதேவழியில் எதிர்கொள்ள முடியாத சில...

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குபட்ட இந்திராபுரம், முகமாலை ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள போதும், குறித்த பகுதிகளுக்கு அருகே மிதிவெடிகள் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் மீளக்குடியமர்ந்துள்ள இம்மக்கள் இன்னும் தற்காலிக குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தமக்கு நிரந்தர...

வடமாகாண கல்வி அமைச்சு, கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும், என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, அக்கடிதத்தில் மேலும்,...

கிளிநொச்சியில் கடந்த 17ம் திகதி விபத்துக்குள்ளான சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய நபருடையது என சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் முழங்காவில் பொலிஸாரால் கைபற்றப்பட்டுள்ளது. அத்துடன் வாகனத்தின் சாரதியையும்கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முழங்காவில் நாகபடுவான் பகுதியை சேர்ந்த அ.அபினேஸ் என்ற11 வயது சிறுவன் முழங்காவில் தேவாலய திருவிழாவை...

முல்லைத்தீவு மல்லாவி நகரப்பகுதியில் பண்டாரவன்னியன் சிலை ஒன்று நிறுவப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. எனினும் திறந்து வைக்கப்பட்ட சில வாரங்களிலேயே அச்சிலையின் ஒரு பக்க கை மற்றும் வாள் என்பன உடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிலையானது சேதமடைந்த நிலையில் தொடர்ந்தும் காணப்படுவதுடன், இது மாவீரன் பண்டாரவன்னியனை கொச்சைப்டுத்தும் செயல் என மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழரின் வீரத்தை...

பூர்வீக நிலமாக இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்;தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் குறித்த மக்கள் ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்pல் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக கடல் வளம் கொண்ட பகுதியாகக் காணப்படும் இரணைதீவில் வாழ்ந்த மக்கள் கடந்த 1992ம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து...

சுமார் முந்நூறுக்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 17 ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக்...

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அறிவித்தலையடுத்து அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை (17) கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் உலக தமிழ் சங்கம் அன்பளிப்புச் செய்த திருவள்ளுவர் சிலை...

தர்மபுரம் கல்லாறு பகுதியில், கடந்த 11ஆம் திகதி அதிகாலை 60 பவுன் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஐவரை, தர்மபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, ஒருதொகை நகைகள், ஒருதொகை பணம், மூன்று வாள்கள் மற்றும் கொள்ளை அடித்த பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும்...

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு இளைஞனின் கால் முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது டிப்போ சந்தியில் இருந்து கனகபுரம் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் அம்பாள் குள வீதியில் இருந்து கனகபுரம்...

எமது மக்களை அழிக்கும் நோக்குடனேயே கடன் வழங்கும் நிறுவனங்கள் எமது பிரதேசத்துக்குள் நுழைந்திருக்கின்றன அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக வடக்கு மாகாணசபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு. பசுபதிபிள்ளை தெரிவித்தார். நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பொதுச் சந்தை திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்...

தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் மற்றும் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் தலைமையில் கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மாவட்ட செயலகம் ஊடாக கிளிநொச்சி கிருஸ்ணர் கோவில் வரை பேரணியாக சென்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்து கலாச்சார...

வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்களின் அவசியத் தேவைகளுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலயகம் முன் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நியாய விலையில் மணலைத்தா, நியாய விலையில் மணல் வேண்டும், மணலுக்கு விலையா? மலைக்கு விலையா?...

வரலாற்றுச்சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்றுத் திங்கட்கிழமை (12) நடைபெறவுள்ளது. வருடாந்த பொங்கல் உற்சவம் வழமைபோன்று இம்முறையும் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும், வருகைதரும் பக்தர்களுக்குரிய போக்குவரத்துச்சேவைகள் உரிய முறையில் ஒழுங்குபடுத்த ப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன....

கிளிநொச்சி, கல்லாறு பகுதியில் ஆயுத முனையில் நாற்பது பவுண் தங்க நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபாய் பணம் என்பன, கொள்ளையிடப்பட்டுள்ளன இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து கொண்டு, நேற்று (11) அதிகாலை உட்புகுந்த, இனந்தெரியாத குழுவொன்று, அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு...

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் வரட்சிநிலை காரணமாக பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச சபைகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாகவும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கரைச்சிப்பிரதேச செயலர்பிரிவின் கீழ் உள்ள பொன்னகர் கோணாவில், மாலையாளபுரம், சாந்தபுரம், ஆகிய பகுதிகளிலும், பூநகரி பிரதேச...

வடக்கு முதல்வர் சி.வி.விக்ணேஸ்வரன் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நகர், தண்நீரூற்று உள்ளிட்ட பகுதிகளில் பல அபிவிருத்தி திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளார். இதற்கிணங்க குறித்த பகுதிகளில் அமைக்கப்பட்ட நூல் நிலையம், பொதுச்சந்தைகள், குடி நீர்விநியோக திட்டம் உள்ளிட்டவைகளை வடமாகாண முதலமைச்சர் நேற்று(வெள்ளிக்கழமை) திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள் மாவட்ட அரச அதிபர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

கிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு தண்டனை வழங்கியமையால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த ஏழாம் திகதி குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் குறித்த மாணவனை அலுவலகத்திற்கு அழைத்து தண்டனை வழங்கியுள்ளார். இதனால் கை எலும்பில் ஏற்பட்ட...

All posts loaded
No more posts