முள்ளிவாய்க்காலை சுவீகரிக்க வந்தவர்கள் மக்களால் விரட்டியடிப்பு!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். காணி அளவீட்டிற்காக இன்று (வியாழக்கிழமை) காலை அங்கு நில அளவையாளர்களும் காணி உத்தியோகத்தர்களும் அங்கு சென்றுள்ளனர். இதன்போது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதோடு, அதிகாரிகளை உள்நுழைய விடாமல் துரத்தியுள்ளார்கள். கோட்டாபய கடற்படை முகாமிற்காக, முள்ளிவாய்க்கால்...

அம்பாள்புரம் மாணவர்களுக்கு புதிய பேரூந்து சேவை!

முல்லைத்தீவு – அம்பாள்புரம் மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கடந்தவாரம் வழங்கிய பணிப்புரைக்கமைவாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து நேற்று(புதன்கிழமை) முதல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. தினமும் காலையும் மதியமும் இச்சேவை இடம்பெறவுள்ள அதேவேளை இம்மாணவர்களுக்கு தேவையான பேரூந்து பிரவேசப் பத்திரங்களை வன்னிவிளாங்கும் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஊடாக மாணவர்களுக்கு வழங்க விரைவில்...
Ad Widget

இரணைமடுவில் வேறு இடத்திற்கு நகர்த்தப்பட உள்ள அரச மரம்!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் பகுதிக்கருகில் காணப்பட்ட அரச மரம் பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. படையினரால் பாரிய குழியினை ஏற்படுத்தி, அரச மரம் பாதிக்கப்படாத வகையில் அதனை நகர்த்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது. மேலும் இந்த அரச மரம் வேறொரு இடத்தில் வைக்கப்படலாம் என பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டனர்....

முல்லைத்தீவில் வயற்காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை!

முல்லைத்தீவு – நித்தகைக்குளத்தையும் அதனோடு இணைந்த வயற்காணிகளையும் விடுவித்துத் தருவதுடன், வயற்காணிகளுக்கு செல்வதற்கான வீதியினையும் மறுசீரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். இது தொடர்பாக தெரியவருகையில், நித்தகைக்குள விடுவிப்பு மற்றும் வீதி மறுசீரமைப்பு போன்றவை தொடர்பான கோரிக்கையொன்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் குமுழமுனை கிழக்கினுடைய கமக்கார அமைப்பினரின் அழைப்பை ஏற்ற...

முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொது நோக்கு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் இறுதி யுத்தத்தின் பின்னர் பல வாழ்வாதார நெருக்கடிகளை...

முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பிரதேசத்தின் போக்குவரத்து பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வு

ஆங்கிலப் பத்திரிகையொன்றில்நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியிருந்த, “போக்குவரத்து வசதி இல்லாமையினால் நாள்தோறும் 24 கி.மீ. தூரம் நடந்து பாடசாலைக்கு செல்லும் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு அம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்” எனும் செய்தி தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டது. இதனால் அவருடைய ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ் பிரிவினது தலையீட்டின் காரணமாக அந்த மாணவர்களினதும்...

இராணுவ வாகனம் விபத்து : நால்வர் படுகாயம்!

வவுனியா ஓமந்தைப் பகுதியில் இராணுவ வாகனத்துடன், வான் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, இராசேந்திரன்குளம் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றி வந்த வான், ஓமந்தை வேப்பங்குளத்தில் திரும்ப முற்பட்ட போது, வேகமாக வந்த இராணுவ வாகனம்...

கிளிநொச்சி பெண் கொலை: கணவன் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இன்றைய தினம் (வியாழக்கிழமை) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கிளிநொச்சி வட்டகச்சி பகுதியைச் சேர்ந்த 24 வயதான குறித்த...

காணாமற்போனோரை மீட்டுத்தர மகிந்தவால் மட்டுமே முடியும்!

வடக்கு – கிழக்கில் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால்தான் முடியும் என காணாமற்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அவர்களின் உறவுகளின் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக தொடர் போராட்டத்தை வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும்...

கிளிநொச்சியில் குடும்ப பெண் கொலை!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பகுதியில் நேற்று (புதன்கிழமை) பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்ப பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் (வயது 24) கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் இடம்பெறும்கொண்டாட்ட நிகழ்வொன்றிற்கு அயலவர்கள்...

கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்க வேண்டாம் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி

கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கையில், “வவுனியா – வடக்கில் கனகராயன்குளம் தெற்கு கிராமசேவகர் பிரிவில், கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணியையும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான காணியையும் நீண்ட...

தேர்தல் கடமையிலீடுபட்ட வாகனம் விபத்து : மூவர் படுகாயம்

முல்லைத்தீவில் தேர்தல்கடமையில் ஈடுபட்ட மாவட்ட செயலக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடலுக்கு அண்மையாக மூன்றாம்கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர் மற்றும் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை...

மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி மரணம்!!

நாடு தேர்தல் அமளியில் காணப்படுகின்ற நிலையில் வன்னியில் விசுவமடுவில் முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான வீரப்பன் என்று அழைக்கப்படும் சந்திரச்செல்வனின் மரணம் அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவர், போராட்டத்தின்போது தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளிலும் கடும்...

கேப்பாபுலவு மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய பொலிஸ் அதிகாரி!!

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் நேற்று (04) 339 ஆவது நாளாகவும் தொடர்கிறது.இந்நிலையில் நேற்றைய தினம் இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினம் இடம்பெற்ற நிலையில் சுதந்திர தினத்தை எதிர்க்கிறோம் வெறுக்கிறோம் என தெரிவித்து தமது போராட்ட இடமெங்கும் கருப்பு கொடிகள் கட்டி பல்வேறு...

சுதந்திர தினத்தைப் புறக்கணித்தனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தினத்தைப் புறக்கணித்து தமது போராட்டத்தைத் தொடர்ந்திருந்தனர். இதன்போது கறுப்பு உடையணிந்தும், தலையில் கறுப்புப் பட்டி அணிந்தும் இருந்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நேற்றுடன் 350 நாட்களாக தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராடி வருகிறார்கள். இதுவரை தமக்கான தீர்வுகள் எதுவும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்களுக்கு நடந்த சோதனை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசார கூட்டத்துக்கு வருகைதந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பொலிஸார் தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய மாபெரும் பிரசார...

முல்லைத்தீவில் வாக்கு அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டமை தொடர்பாக இருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வாக்காளர் அட்டைகள் புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டிலே இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டே கைப்பற்றப்பட்டன. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 288 வாக்குச்சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில்...

சிறுவனை தாக்கிய சம்பவம்: சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பிணை

கிளிநொச்சியில் சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தலா ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த நால்வரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மீண்டும்...

போலி வாக்குச் சீட்டுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் கைது!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர் ஒருவர் சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கரைச்சி பிரதேச சபைக்கு பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான கிருஸ்வேணி விக்ரர்லோகநாதன் ( விக்கரர்சாந்தி) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். பரந்தன்...

சிறைக்காவலர்கள் தாக்கிய சிறுவனுக்காக மனித உரிமை ஆணைக்குழு களத்தில்!

சிறுவன் ஒருவன் சிறைக்காவலர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற சிறுவன், சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தில் மோதி விபத்திற்குள்ளானான். சிறுவனின் தவறினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறி, சிறைக்காவலர்கள் மனிதாபிமானம் இன்றி சிறுவனைத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான சிறுவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின்...
Loading posts...

All posts loaded

No more posts