போலி வைத்தியர் குறித்து எச்சரிக்கை!

கிளிநொச்சி - அக்கராயன் பிரதேசத்தில் நடமாடுகின்ற போலி வைத்தியரொருவர் தொடர்பில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென, அக்கராயன் பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த நபர், அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் வைத்தியராகப் பணியாற்றாத நிலையில், அந்த வைத்தியசாலையில் தான் பணியாற்றுவதாகக் கூறி, கிராம மக்களிடம் பணம் அறவிடுதல் உள்ளிட்ட பல மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, வைத்தியசாலை...

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோர் அலுவலகத்தின் மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அமர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கருத்தறியும் அமர்விற்கு வருகைதந்த காணாமல் போனோர் அலுவலக பணியாளர்கள்...
Ad Widget

மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலகம் திறந்துவைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் குறித்த அலுவலகத்தினை திறந்து வைத்தார். வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன், ப.அரியரத்தினம் ஆகியோரின் மாகாண நிதியொதுக்கீட்டில் இவ்வலுவலகம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வட.மாகாண மகளிர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி...

அனுமதியற்ற மருந்தகத்தால் ஒருவர் உயிரிழப்பு: சுட்டிக்காட்டிய அமைச்சருக்கு மா.சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவில் அனுமதி பத்திரமின்றி இயங்கிவரும் மருந்தகத்தில் பெற்றுக் கொண்ட மருந்தினால் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் அவற்றை மூடுவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் உத்தரவிட்டிருக்கும் நிலையில், மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். இதன் காரணமாக அமைச்சர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 126 வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை)...

கிளிநொச்சியில் விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

பாதசாரிகள் கடவையை கடக்க சென்ற மாணவியொருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு அருகில் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட மாணவி மீது கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்த வாகனமொன்று மோதியதில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை குறித்த விபத்து சம்பவித்துள்ளது. பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த, உமையாள்புரம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் தரம்...

பொலிஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரி மக்கள் மகஜர்!

அக்கராயன் பொலிஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி வட.மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரிடம் பிரதேச மக்கள் நேற்று (திங்கட்கிழமை) மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சதுரங்கவின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரியே பிரதேச மக்களால் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. அக்கராயன் பிரதேசத்தில் இருந்து சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட...

முல்லைத்தீவில் எரிக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள்!

முல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெடுங்கேணிப் பகுதியில் ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இம்மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெடுங்கேணியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், அது குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இருவர் கைது...

சிறுத்தை கொல்லப்பட்ட விவகாரம்: மேலும் நால்வர் கைது

கிளிநொச்சி, அம்பாள்புரம் பகுதியில் சிறுத்தையொன்றை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில 23,26,22 மற்றும் 24 வயதான சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில்...

சிறுத்தை கொலை: வனஜீவராசிகள் திணைக்களத்தால் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை அடித்துக் கொல்லப்பட்டமை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களமே கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சிறுத்தையை உயிரிடன் மீட்கும் தமது பணிக்கு கிராமத்தைச் சேர்ந்த சிலர் இடையூறு விளைவித்தனர் எனவும் அரியவகை வன விலங்கை சித்திரவதைக்குட்படுத்தி சிலர் அடித்துக் கொண்டனர் எனவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது...

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் கொடி, 20 கிலோ கிளைமோர், கிரினைட்டுகளுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் கொடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை விடுதலைப்புலிகளின் கொடியுடன் மூவர் முச்சக்கர வண்டியொன்றில் பயணம் மேற்கொண்டவேளை அதனை மறித்து பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டபோது ஏனைய இருவரும் தப்பி சென்றனர். இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும்...

கிளி. மக்களை அச்சுறுத்திய சிறுத்தையை அடித்துக்கொன்ற இளைஞர்கள்!

கிளிநொச்சி, அம்பாள் குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையொன்றை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் அதனை அடித்துக் கொன்றுள்ளனர். அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நுளைந்த சுமார் 4 அடி நீளமான குறித்த சிறுத்தை மக்களை அச்சுறுத்தியதுடன் இருவரை தாக்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர். எனினும்...

தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனின் குடும்பத்துக்கு ரூபா 3 மில்லியன் இழப்பீடு

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனின் குடும்பத்துக்கு முப்பது இலட்சம் ரூபா இழப்பீட்டை ஓப்பந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன. தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்த கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் (வயது – 19) என்ற இளைஞன் கடந்த 8ஆம் திகதி தாமரை கோபுரத்தின் 16ஆவது மாடியில் மின் தூக்கி...

நுண்கடன் நிறுவனத்துக்கு எதிராக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

முல்லைத்தீவு நகரில் இயங்கும் நுண் கடன் வழங்கும் நிறுவன ஊழியர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திர ஊடகவியலாளராக தொழிற்படும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (14) முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை...

30 வருடங்களின் பின்னர் இரணைமடுவில் இருந்து குடியிருப்பு நோக்கி நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி

30 வருடங்களின் பின்னர் இரணைமடு குளத்திலிருந்து நீர், குடியிருப்பு பகுதிகள் நோக்கி நேற்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டது. கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஏற்று நீர்பாசண திட்டம் யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்திருந்த நிலையில் அதன் புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரணைமடு குளத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட நிதியில் குறித்த ஏற்று நீர்பாசண...

கிளிநொச்சி மாவட்டத்தில் மாதம் 3 ஆயிரம் பேருக்கு மலேரியா இரத்தப் பரிசோதனைகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் மாதாந்த 3 ஆயிரம் பேருக்கு மலேரியா தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம.ஜெயராஜா தெரிவித்துள்ளார். மலேரியாவை முற்றாக தடைசெய்யும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் அத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வுகளை...

கொழும்பு தாமரை கோபுர பணியில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி இளைஞர் மரணம்!!

இரண்டாம் இணைப்பு தாமரைக் கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த மாணவன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு உயர்தர பிரிவில் உயிரியல் பிாிவில் கல்வி கற்க்கும் கோனேஸ்வரன் நிதர்சன் 19 ஆவார். நண்பர்களுடன் இணைந்து மின் இணைப்பு பணிக்குச் சென்ற மாணவன் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக...

விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் கண்டுபிடிப்பு!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போதே இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் காணப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், புதையல் தோண்டிய விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற...

கேப்பாபுலவுக் காணி உரிமையாளர்களுடன் விசேட கூட்டம்!

கேப்பாபுலவில் காணி விடுவிப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றும் படையினர் வசம் உள்ள காணி உரிமையாளர்களின் விருப்பம் அறியும் கூட்டம் ஒன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளதுடன், இக்கூட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச காணிப்பகுதி அதிகாரி சோ.சேந்தனும்...

14 வயது சிறுமி மீது வன்புணர்வு – பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விளக்கமறியல்

14 வயது சிறுமியை பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயாரே பொலிஸ் உத்தியோகத்தரிடம் அனுப்பியதாக சிறுமி நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த வழக்கு விசாரணையானது எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது தாயாரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும்...

இளைஞன் வெட்டிக் கொலை: சுன்னாகத்தில் ஒருவர் கைது

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் கடந்த 23ஆம் திகதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கள்ளபாடு வடக்கினை சேர்ந்த 27 வயதுடைய வ.சதாநிசன் என்ற இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் சுன்னாகத்தினை சேர்ந்த சந்தேகநபரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். கடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் உள்ள பனங்கூடல் ஒன்றுக்குள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் குறித்த இளைஞனின்...
Loading posts...

All posts loaded

No more posts