குடும்பஸ்தரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது!

முல்லைத்தீவு, முள்ளியவளை, முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும் ஒரு குழுவினருக்குமிடையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி...

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

மது போதையில் அரச பாடசாலை ஒன்றிற்குள் சென்று மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் முல்லைத்தீவு, மல்லாவி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது...
Ad Widget

முன்னாள் போராளியின் உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவரால் முன்னெடுக்கப்பட்டிருந்த ‘நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம்’ நேற்றிலிருந்து (17) தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. அழகரெத்தினம் வனகுலராசா என்னும் ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி, கடந்த 14 ஆம் திகதி முதல் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நீர் மற்றும் உணவின்றி நீதி...

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ!; காலாவதியான தீயணைப்புக் கருவிகள் இயங்காததால் பதற்றம்!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (13) திடீரென எக்ஸ்ரே பிரிவில் தீ பரவியபோது, தீயினை கட்டுப்படுத்த வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்புக் கருவிகளை பயன்படுத்தியபோதும் அவை இயங்கவில்லை. அதனையடுத்து, நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் வைத்தியசாலைக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விசேட பெண்கள் மருத்துவமனை கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்புக் கருவிகளை கொண்டுசென்று, பயன்படுத்திய பின்னரே தீ கட்டுப்பாட்டுக்குள்...

கிளிநொச்சியில் உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்று உத்தரவு!!

கிளிநொச்சியில் தனியார் பன்றிப் பண்ணை ஒன்றில் நோய் தொற்று காரணமாக உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி மன்றுக்கு அறிக்கை இடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பன்றி வளர்ப்பு பண்ணையில் திடீரென கடந்த சனிக்கிழமை (01) ம் திகதியும் ஞாயிற்றுக்கிழமை (02)ம் தொடர்ச்சியாக 50க்கும்...

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட வைத்திய சேவைகள்!!

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் புதன்கிழமை (29) சிறுதுநேரம் வெளிநோயாளர்பிரிவின் வைத்தியசேவைகள் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிடப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இது குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடி பிறிதொரு வைத்தியரை வைத்திய சேவையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டார். அத்தோடு உடனடியாக வைத்தியசாலைக்கு...

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்பு!!

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் நிலங்களுக்கும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப் பாதிப்பு காரணமாக குளங்களில் நீர்மட்டம் அதிகரித்தமையால் முதலைகளும் மக்கள் குடியிருப்புபகுதிகளுக்குள் புகுந்து பெரும் அச்சத்தை...

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம் : உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பதில் பொறுப்பதிகாரி உறுதி

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள சிரேஸ்ர ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்கள் மீது 15ஆம் திகதி புதன்கிழமை காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செய்தியாளர்...

ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்!! முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!!

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (09) முன்னெடுக்கப்பட்டது கையில் பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்பு போராட்டம்...

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் திங்கட்கிழமை (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்டீரியாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். கால்நடைகளின்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் முன்னெடுக்கப்பட்டது. தன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பங்களிட்டிருந்தனர்.

கிளிநொச்சியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு!

கிளிநொச்சியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பரந்தன் - புதுக்குடியிருப்பு ஏ - 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியிலேயே இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏ - 35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் கட்டுமானம் இடம்பெற்றுவரும் பாலத்திலேயே குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...

புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார்!! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தருவதாகக் கூறிய புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். குறித்த போராட்டம் இன்று காலை கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அலுவலகம் முன்பாக இடம் பெற்றதுடன்...

கிளிநொச்சியில் கோர விபத்து – குழந்தை பலி!! மேலும் மூவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்!!

கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (25) இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. A9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த மோட்டார்...

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட...

கிளிநொச்சியில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதி!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் நிமால் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு!!

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர். அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு பெப்ரவரி 27 இல்!!

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை (12) எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் (ஓ எம் பி ) சார்பில் அலுவலகத்தின் சட்டத்தரணி, ஓஎம்பி அலுவலகத்தின் கிளிநொச்சி , முல்லைத்தீவு பிராந்திய இணைப்பாளர் கிருஷாந்தி ரத்நாயக்க,...

கிளிநொச்சியில் குடும்பப் பெண் உயிரிழப்பு!! 14 வயதுடைய மகன் அதிக மது போதையில் மீட்பு!!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் 14 ஆவது வயதுடைய மகன் அதிக மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக குறித்த மகன் மீட்டதாக ஆரம்ப விசரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயதுடைய சிறுவன் விசாரணைக்காக தர்மபுரம்...

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் பலத்த மழை; வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிப்பு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். புதுக்குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள், போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியாமல் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். புதுக்குடியிருப்பின் பல இடங்களில் வெள்ள...
Loading posts...

All posts loaded

No more posts