- Saturday
- February 22nd, 2025

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சியின் இறுதி அமர்வு இன்று(23) நடைபெறவுள்ளது. இதையொட்டி உறுப்பினர்கள், விருந்தினர்களுக்கு மதியபோசனத்துக்கு சிறப்பாக பாரம்பரிய முறைப்படி ஆட்டுக்கறி சாப்பாடு வழங்குவதற்கு பேரவைச்செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. சபை அமர்வுகளின் போது வழமையாக கோழி இறைச்சி, மீன் கறியே வழங்கப்பட்டு வந்தது. கடந்த 5 வருடங்களில் இரு தடவையே ஆட்டுக்கறி வழங்கப்பட்டது. இதேவேளை...

முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் நாளை மறுதினம் புதன் கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளது. மாகாணசபை முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரது பதவிகளும் முடிவுக்கு வந்துவிடும். இந்த நிலையில், தமக்குத் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்புத் தேவை என்று தெரிவித்து மூன்று உறுப்பினர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாகாண சபை உறுப்பினர்களில் பொலிஸ் பாதுகாப்பை தற்போது...

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமம் மற்றும் வெடுக்குநாறி மலைப்பகுதிகளுக்கு வட மாகாணசபை அவைத்ததலைவர் சி.வி,கே. சிவஞானம் தலைமையிலான 12 மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்துள்ளனர். வவுனியா வடக்கில் பழைய கிராமமான காஞ்சிரமாட்டை கிராமத்தில் வாழ்ந்த சுமார் 300 குடும்பத்தினர் யுத்தம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவிற்கும் நாட்டின்...

வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த 6 பிரேரணைகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், மாகாணசபையால் இதுவரை 437 பிரேரணைகளும் 19 நியதிக்...

வடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற மூக்கு கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மாகாண பிரதி கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த முறைகேடுகள் தொடர்பாக மேல் விசாரணைகளை நடாத்துவதற்கும் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கணக்காய்வாளர் நாயகத்தின் கவனத்திற்கு இந்த விடயத்தினை அனுப்பிவைக்கவுள்ளதாக அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வடமாகாணசபையின்...

வடமாகாண சபை கலைக்கப்பட ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் வடக்கு முதலமைச்சருக்கு எதற்காக வாகனம், தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மட்டும் வாகனம் வழங்க முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை விவகார அமைச்சின் ஊடாக வட மாகாணசபை...

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கான கால எல்லை இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது. அதனையடுத்து, குறித்த மூன்று மாகாண சபைகளும் ஆளுநர் வசமாகவுள்ளன. வட மேல் மாகாண சபை எதிர்வரும் 8ஆம் திகதியும், மத்திய மாகாண சபை எதிர்வரும் 10ஆம் திகதியும், வடக்கு மாகாண சபை எதிர்வரும் 25ஆம் திகதியும் கலைக்கப்படவுள்ளதாக...

வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர் தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினார் என யாழில் உள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவர் யாழ். காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ் மக்கள் அதிரும் படியான செய்தி வரும் , அதை பிரசுரிக்க தயாராக இருங்கள் எனவும்...

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சிலர் தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என வட மாகாண சபை அவைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். மேலும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைமைகள் யதார்த்தத்தை சரியாக உணர்ந்து கொண்டு செயற்பட்டிருந்தால் வடமாகாணசபையில் குழப்பங்கள் உருவாகியிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வடமாகாணசபையின்...

வடமாகாணசபையின் ஆயுட் காலம் ஒக்டோபர் 25ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் மாகாணசபையின் இறுதி அமர்வு அக்டோபர் மாதம் 23ம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்தநாள் அன்று நடைபெறவுள்ளது. வடமாகாணசபையின் 131வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடமாகாணசபையின்...

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட.மாகாண சபையின் 131 வது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. குறித்த பிரேரணையில், ‘யுத்தத்தினால்...

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அது குறித்து விசாரிக்க குழுவொன்றை அமைத்த வடக்கு...

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வட மாகாண அமைச்சராக செயற்பட்ட ப.டெனீஸ்வரனினால் தமக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, மேன்முறையீட்டு மனுவை தொடர்ந்தும் விசாரணை செய்வதை தடுக்கும் வகையில், சி.வி. விக்னேஷ்வரன் விடுத்த கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. புவநெக அலுவிகாரே, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன...

வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒருமாத காலமாக மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கிய குள்ள மனிதர்களின் நடமாட்டம் தற்போது ஓய்ந்துள்ளதாக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு நடைபெற்றது. இதன்போது வடக்கில் இடம்பெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு, வடமாகாண சட்டம் ஒழுங்கு அமைச்சர் எனும் ரீதியில்...

வடக்கில் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 விடயங்கள் வடக்கு மாகாணசபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனால் கொண்டுவரப்பட்டது. வட. மாகாண சபையின் 130 ஆவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது மாகாணசபை உறுப்பினர் உரையாற்றுகையில், “தமிழர் நிலங்களில் குறிப்பாக...

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ளவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது. இந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும், தமிழ் தேசிய...

தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு தமிழனத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிடம், வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பை...

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ்.பளிகக்கார பதவிவிலக சி.வி.விக்னேஷ்வரனே காரணம் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அவரது இராஜினாமாவிற்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது வருத்தப்படுவது போல் நடிப்பது வேடிக்கையாக இருப்பதாக, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவினால் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஊடக...

அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு வடக்கு அதிகாரிகள் அடிபணியக் கூடாது என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்திற்கான 110 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கைதடியில் உள்ள உள்ளுராட்சி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் தெரிவித்த அவர், ”அரசியல்வாதிகள்...

வட மாகாண அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார். அதன் ஊடாகவே தற்போது வட மாகாண அமைச்சர்கள் சபையில் நிலவுகின்ற சிக்கலான நிலைமைக்கு இலகுவாக தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவின் ஊடாக பா.டெனீஸ்வரனும் அமைச்சர் என்றே...

All posts loaded
No more posts