- Saturday
- April 19th, 2025

அரசியலமைப்பிறகு மாறாக நாடாளுமன்றம் கலக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையாளருக்கு மஹிந்த தேசப்பிரிய மாற்றியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “ஜனாதிபதியால் கடந்த 2019.11.09 ஆம் திகதி...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இம்முறை பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தி களமிறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, பல மாவட்டங்களிலிருந்து பிரதமர் மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பொது தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றம் உறுப்பினர்களை தெரிவு செய்யப்படுவார்கள் என வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியானது. நாடாளுமன்றம் உறுப்பினர்களை தெரிவு செய்யும் திகதி 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதியாகும். அத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான...

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பிலேயே அடுத்த எமது நடவடிக்கைகள் காணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திஸ்ஸமகாராம, சந்தகிரிகொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாட்டில் தற்போது மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதனால் தேர்தல்...

எல்லை நிர்ணய அறிக்கைக்கு இம்மாதத்திற்குள் நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கப்படின், மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க அண்மையில் ஊடங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது...

வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் சி.வி.விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வினவியபோது அடுத்த...

எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர்கள் தமது வாக்குரிமை பத்திரத்தை பூரணப்படுத்தி கிராம சேவையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென தேர்தல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலின்போது தமது வாக்குரிமையை உறுதிசெய்யும் பொருட்டு குறித்த வாக்குபத்திரத்தை விரைவாக பூரணப்படுத்தி கையளிக்குமாறு தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் வாக்காளர் பதிவேற்றில் பெயரை பதிவுசெய்ய...

018ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை (பிசி படிவம்) துரிதமாக முழுமை செய்து, கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை கிராம அலுவலர்கள் தற்போது வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்தப் பணி இப்போது 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக தேர்தல்கள் செயலகம்...

வடமாகாண சபையின் அடுத்த தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிச்சயம் க.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிறுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அடுத்த மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை களமிறக்க முடிவு செய்துள்ளீர்களா?என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த சுமந்திரன், கட்சியின் கொள்ளைகளை மறுதளித்து செயற்பட்ட...

தேர்தல் காலத்தில் தேர்தல் தினத்தில் அடையாள அட்டைகோரி செயலகத்தை நாடுகின்றவர்கள் இன்றும் உள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார் வாக்காளர் தினத்தினை முன்னிட்டு யாழ்.முற்றவெளியில் இருந்து மாவட்டச் செயலகம் வரையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனியினைத் மொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தலமையுரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்...

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை விருப்பம் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதை பரிசீலிக்கத் தயாரெனவும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் தான் இழைத்த தவறை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் இழைக்கத் தயாரில்லை எனவும் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மத்தியில்...

மாகாண சபை தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம், நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கேகாலை நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர், அதன் விமர்சனங்களால் தேர்தல் காலதாமதமாகி...

ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருட நிறைவில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “சப்ரகமுவ, வட மத்திய, கிழக்கு ஆகிய மாகாண சபைகள் தற்பொழுது கலைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும்...

தொகுதிவாரி தேர்தல் முறை மிகவும் மோசமானது என்பதற்கு வவுனியா நகரசபையின் ஆட்சியதிகாரம் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி வசமானமை மிகச் சிறந்த உதாரணம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இந்த தேர்தல் முறையின் கீழ் நகரசபையில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றிய கட்சி ஆட்சி அமைக்கமுடியாத...

நேற்றயதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுப்பிவைக்கப்பட் செய்தியறிக்கை... தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றது என்பதை நாம் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். அந்த வகையில் இன்றைய தினமும் இவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்து காண்பிப்பதற்காக தந்திரோபாய நடவடிக்கையாக யாழ் மாநகரசபை மற்றும் சாவகச்சேரி...

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை புதன்கிழமை (21.03.2018) மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றங்களில் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களில் 38 சபைகளில் போட்டியிட்டு 98 ஆசனங்களை பெற்று எமது அரசியல் பலத்தை இதர தமிழ் அரசியல் தரப்பினருக்கும் தென்னிலங்கைக்கும் மக்கள் எம்மீது வைத்துள்ள உறுதிப்பாட்டின் வலிமையை வெளிப்படுத்திக் காட்டியுள்து என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (17) கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களில்...

உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 11 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் நேற்று இரவு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக தலைவர் லியனகே தெரிவித்துள்ளார். ஏனைய மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் இன்றைய தினத்திற்குள் வெளியிடப்படவுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அதற்கான உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களினதும் பெண் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கிடைக்கத் தாமதமாகிது. இந்நிலையில் தற்போது 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

All posts loaded
No more posts