2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு

2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை... நம் நாட்டின் தலைவிதியையும் எம் நாட்டில் வாழும் பல்வேறு இன மக்களின் தலைவிதியையும் நிர்ணயிக்கக்கூடிய ஒரு முக்கிய தேர்தலை நம்நாடு எதிர்நோக்கியுள்ள வேளையில் வட – கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் பேசவும் செயற்படவும் வேண்டிய முக்கிய கடமை...

தயவுசெய்து தேர்தலில் இருந்து விலகுங்கள்- சிவாஜியிடம் கூட்டமைப்பு பகிரங்க வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தலில் இருந்து தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தை விலகுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ரவிராஜ் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2005ஆம் ஆண்டில் நாங்கள் வாக்களிக்காமல் விட்டதால்தான் மஹிந்த ராஜபக்ஷ...
Ad Widget

தமிழ் கட்சிகளை கடுமையாகச் சாடும் யாழ்.பல்கலை மாணவர்கள்

ஜனாதிபதித் தேர்தலில் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் வலுவான முடிவுகளை எடுக்கவுள்ள நிலையில் முந்திக்கொண்டு அறிக்கைகளை விட்டு கூட்டை சிதறடித்தவர் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே என குற்றம் சுமத்தியுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தாங்கள் எடுத்த முயற்சியை சரியாக அணுகாது ஐந்து தமிழ் கட்சிகளும் தவறிழைத்துள்ளன என குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக மாணவர்கள்...

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிக்கை

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், இலங்கைக்கு ஜனநாயக ரீதியாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்தற்கான தேர்தல் 2019 நவம்பர் 16ஆம் திகதி...

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு புளொட் ஆதரவு!!

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே தமிழைரசுக் கட்சியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது புளொட்டும் சஜித்தை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம்...

தமிழரசுக் கட்சி என்னுடன் ஏன் கலந்துரையாடவில்லை? – சிவாஜி

சிங்கள பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவை தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சி தன்னுடன் ஏன் கலந்துரையாடவில்லை என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். மன்னார் தனியார் விடுதி ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது....

வெளிப்படைத் தன்மையற்ற விஞ்ஞாபனத்தை நம்பி எவ்வாறு வாக்களிக்க முடியும்? –சி.வி.விக்னேஸ்வரன்

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வாராந்தம் கேள்வி பதிலில், புதிய ஜனநாயக முன்னணியியன் ஜனாதிபதி வேட்பாளருடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ள நிலையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர்...

ஜனாதிபதி தேர்தலில் 13 போலி வேட்பாளர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலில் குறைந்தபட்சம் 13 போலி வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது. இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு களமிறங்கியுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் இந்த போலி வேட்பாளர்களில் ஏழு பேர் முக்கியமான ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவும் ஏனைய ஆறு பேர் மற்றொரு முக்கிய...

அரச, தனியார் துறை ஊழியர்களுக்கான தேர்தல் வாக்களிப்பு விடுமுறை விபரம் வெளியானது

அரச , தனியார் துறைகளில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு அவர்களின் தொழில் நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் விடுமுறைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன் இதன்போது ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனிபட்ட விடுமுறை விதிகளுக்கு எந்தவித இழப்புகளுமின்றி அந்த விடுமுறைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரச மற்றும்...

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம்!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (31) கண்டியில் வெளியிடப்பட்டது. விஞ்ஞாபனத்தில் சில சிறப்பம்சங்கள் வருமாறு, போதைப்பொருள், ஊழல் மற்றும் மதத் தீவிரவாதம் என்பவற்றுக்கு எதிரான போர். பலமான தேசத்தை உருவாக்குதல். தேசத்தை பாதுகாக்க ஸ்மார்ட் பாதுகாப்பு மற்றும் நவீன ஆயுதப்படை, அறிவார்ந்த புலனாய்வு வலையமைப்பு உருவாக்கம். மக்கள்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு!!

ஊடக அறிக்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? இலங்கைத்தீவில் கடந்த பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானதாகும். அந்த நோக்கில் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தீரக்கமான முடிவுகளை எடுத்து பேரம்பேச வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இத்...

மூன்று ஆண்டுகள் சிறை!!! அரச ஊழியர்களிற்கு எச்சரிக்கை!

தபால்மூலம் வாக்களிக்கும் அரச உத்தியோகத்தர்கள், வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தால் குறைந்தது 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரச உத்தியோகத்தர்கள் சிலர் தமது வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தே தேர்தல்கள்...

தபால் மூல வாக்களிப்பில் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம் ; ஐந்து கட்சிகள் கூட்டாகக் முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் நாளை இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கோர முடியாதுள்ளது. எனினும், தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கும் ஐந்து கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன. எதிர்வரும்...

மக்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்கவும்: விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலில் தம்மால் யாரையும் ஆதரிக்க முடியாது, மக்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்க வேண்டுமென அறிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன். அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்- திங்கட் கிழமை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட 5 கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பின்னர் அந்தக்...

வாக்குரிமையை உதாசீனப்படுத்தாதீர்கள்!!

வாக்­கு­ரி­மையின் முக்­கி­யத்­து­வத்தைப் பற்றி எமது உயர்ந்த சட்­ட­மான அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மக்களின் இறைமை மக்­க­ளுக்­கு­ரி­யது. அதா­வது இந்த நாடு மக்­க­ளுக்கு சொந்­த­மா­னது. அந்த இறைமை அதி­கா­ரத்தை உதா­சீ­னப்­ப­டுத்த முடி­யாது, மக்­களே அதனை அனு­ப­வித்­தாக வேண்டும். இதற்கு அமைய இந்த இறை­மையை அனுபவிப்ப­தற்­கான ஓர் அணு­கு­மு­றை­யாக வாக்­கு­ரிமை கூறப்­பட்­டுள்­ளது. எனவே வாக்­கு­ரிமை என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தொன்­றாகும் என...

வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு, ஆட்சியில் அமர்ந்ததும் 30 ஆயிரம் பேருக்கு நியமனம்!!!

வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் 30 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த...

சிறையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக கோட்டா யாழில் உறுதி!

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மேலும் அனைவரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன் எனவும்கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையை ஆரம்பித்த...

மஹிந்த, கோட்டா யாழ் வருகை!!ஆயுதம் தாங்கிய இராணுவம், பொலிஸார் அதியுச்ச பாதுகாப்பு!!

பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் வரும் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபாய ராஜபக்சவுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் பிரச்சார நடவடிக்கைக்காக இன்று மதியம் மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்சவும் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளனா். இதற்காக யாழ்.நகாில் ஆயுதங்களுடன் இராணுவத்தினா் வீதிகளில் பாதுகாப்பு கட மையில் ஈடுபட்டிருப்பதுடன், பொலிஸாரும்...

பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பின்னரே அடுத்த முடிவு – மாவை சேனாதிராஜா

பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் அரசியல், சமூக பிரச்சினைகளில் உறுதியாக முன்வைக்கும் தீர்வு என்ன என்பதை அவதானித்து அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக தீர்வு என்ன என்பதை கவனித்து பொறுமையாக தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும்...

தேர்தலை பகிஸ்கரிப்பதா? அல்லது சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவா? ஆனந்தசங்கரி கேள்வி

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கொடுத்த கோரிக்கைகள் எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் மக்களிடம் தாங்கள் தேசியத்திற்காகப் பாடுபடுகின்றோம் என்று நாடகம் ஆடுவதற்காக கொடுக்கப்பட்டவை. தென் இலங்கை அரசியற் தலைவர்கள் அமைச்சர்கள் பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் சமஸ்டி கிடையாது - ஒற்றையாட்சி அரசியலின் கீழ்தான் தீர்வு என்று திரும்பத்திரும்ப கூறியும்...
Loading posts...

All posts loaded

No more posts