மருந்து உறையில் அரசியல்வாதியின் பெயர்: கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, பருத்தித்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசியல்வாதியொருவரின் பெயர் அச்சிடப்பட்ட மாத்திரை உறைகள் வைத்தியசாலையொன்றுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு, அதில் மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு...

வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

தேர்தல் பரப்புரைக்காக, வீடுகளுக்குச் சென்ற வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு உள்ளது. சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி தெற்கு வட்டாரத்தில் போட்டியிடும் செல்லையா ஜெயபாலன் என்பவர், கடந்த வாரம் கைதடி தெற்கில் தான் போட்டியிடும் வட்டாரத்தில் உள்ள வீடுகளுக்கு தேர்தல் பரப்புரைக்காக சென்றிருந்தபோது, வட்டார எல்லையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, கால்நடையாக ஒவ்வொரு...
Ad Widget

தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க யாழ் வருகின்றார் ஜனாதிபதி!!

யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்ப்பாண நகரில் இடம்பெறும் பரப்புரைக்...

வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தமிழ்த் தேசியப் பேரவை மக்கள் சந்திப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையினர் நேற்று 08.01.2018 ஞாயிற்றுக்கிழமை வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை- மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டனர். நெடுங்கேணி ஒலுமடு, நெடுங்கேணி சூடுவெந்தான் கிராமம், வவுனியா வடக்கு, பரந்தன், புளியங்குளம் முத்துமாரி நகர், கனகராயன்குளம் பெரியகுளம், வவுனியா வடக்கு...

வழிபாட்டுத்தளங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க தடை!

வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்த விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கட்சி அலவலகங்களை தவிர்ந்த எனைய இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிபடுத்த முடியாது. தகுதியற்ற வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கைகள்...

த.தே.கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் அறிமுகம்!

யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் முஸ்லிம் பிரதிநிதிகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மேற்படி நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை யாழ். உஸ்மானிய கல்லூரி வீதியில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் யாழ். மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான, எம்.ஏ. சுமந்திரன், சீ.வீ.கே. சிவஞானம், ஜெயசேகரம்...

கூட்டமைப்பு தோல்வியுற்றால் புதிய அரசமைப்பை நிறைவேற்ற முடியாது – சுமந்திரன் கவலை!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கான மக்­கள் ஆத­ரவு சரிந்துவிட்­டது என்ற செய்தி பெப்­ர­வரி 11ஆம் திகதி வரு­மாக இருந்­தால், புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்ற முடி­யாது போகும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரிவித்துள்ளார். பரு­த்தித்­து­றை­யில் நேற்று இடம்­பெற்ற வேட்­பா­ளர் அறி­முக நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும்...

“யாழ் 2020 :நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” செயற்றிட்ட வரைவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வெளியீடு

யாழ்.நகரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தயாரிக்கப்பட்டுள்ள “யாழ் 2020 - நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” செயற்றிட்டம் தொடர்பான வரைபடம் இன்று (06.01.2018) சனிக்கிழமை நண்பகல் வேளையில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ் நகரிலுள்ள விருந்தினர் தங்ககம் ஒன்றில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் குறித்த “யாழ் 2020” செயற்றிட்ட வரைபடத்தை வெளியிட்ட தமிழ்த்தேசிய...

கூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல்!

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒரு மீது தாக்குதல் நடத்தப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி சிவன் கோயில் பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் கா.சற்குணதேவன் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலில் படுகாயமடைந்த சற்குணதேவன் சிகிச்சைக்காக சாவகச்சேரி...

யாழ். மாவட்டத்தில் பதினேழு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் 17 ஆயிரத்து 273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 22 ஆம் மற்றும் 25, 26 ஆம் திகதிகளில் தமது வாக்குகளை அளிக்கமுடியும் என யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி...

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை குற்றவாளி என உறுதிப்படுத்தியது நீதிமன்று!!!

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் 116 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் வழக்கொன்றில் யாழ் நீதவான் நீதிமன்றினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை நேற்று (04.01.2017) வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது சுதர்சிங் விஜயகாந்தை குற்றவாளி என...

மதவாதத்துக்கு மக்கள் முன்னணியில் இடமில்லை

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மதவாதத்தைக் கிளப்புகின்ற செயற்பாடு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் மதவாதத்துக்கு இடமில்லை என தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார். அங்கு மேலும் குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மதவாதத்தைக் கிளப்புகின்ற...

கொழும்புத்துதுறையின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவை ஆய்வு

கொழும்புத்துறைப் பகுதிக்கு நேற்று (01.01.2018) திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியப் பேரவையினர் துறைமுகப் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு அங்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் கள ஆய்வில் ஈடுபட்டனர். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவை போட்டியிடுகின்றது. “தூய கரங்கள் -...

நாங்கள் சின்னத்தைப் பார்த்து வாக்களிப்பவர்களல்ல ! நெகிழச் செய்த வயதான பெண்மணி

நாங்கள் சின்னங்களைப் பார்த்து வாக்களிப்பவர்களல்ல எங்களுக்கு நல் எண்ணங்களும் கொள்கைகளுமே முக்கியமானவை எனத் தெரிவித்த நாயன்மார்கட்டில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவர் மக்கள் நடக்கின்ற எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியப் பேரவையின் ஆதரவாளர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் விளக்கக் கூட்ட நிகழ்வென்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டிருந்தனர்....

தமிழ்த்தேசிய பேரவை வேட்பாளர்கள் நல்லைக்குருமணிகளிடம் ஆசி பெற்றனர்!

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் இன்று (01.01.2018) திங்கட்கிழமை சின்மயாமிஷன் பிரம்மச்சாரிய யாக்கிரத சைதண்யா சுவாமிகள் மற்றும் யாழ் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரம்மச்சாரிய சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இன்று காலை 09.30 மணியளவில் யாழ் சின்மயாமிஷன் சுவாமிகள்...

தமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் யாழ் ஆயரிம் ஆசிபெற்றனர்

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்குபொருட்டு இன்று (31.12.2017) ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் ஆடிகளால் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இன்று...

தமிழர்களை தமிழர்களே ஆள மக்களை அணிதிரட்ட வேண்டும்: த.தே.கூ

தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையை (நெடுங்கேணி) தமிழ் மக்களாகிய நாமே நிர்வகிக்கக் கூடிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை அணி திரட்டுமாறு வேட்பாளர்கள்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நெடுங்கேணி நகரில் அமைந்துள்ள கந்தசாமி கோயிலில்...

மாகாணசபை தேர்தல் தொடர்பில் நான் சிந்திக்கவில்லை: வடக்கு முதல்வர்

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி சிந்திக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை உடையவர்களை மதிப்பதாகவும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”வடக்கு கிழக்கில் இத்தேர்தல் காலத்தில் என் பெயரை...

முன்னாள் போராளிகளின் உதவியுடன் தேர்தலில் சாதிக்க கூட்டமைப்பு முயற்சி!

முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களின் உதவியுடன் உள்ளூரட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இறங்கியுள்ளனர். அந்தவகையில், கூட்டமைப்பினருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (புதன்கிழமை) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்ட இந்த சந்திப்பில், கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான...

ஊழலற்ற ஆட்சி! உள்ளிட்ட நலன்சார் திட்டங்களுடன் ஈ.பி.டி.பி-இன் தேர்தல் விஞ்ஞாபனம்

ஊழலற்ற ஆட்சி! நடந்த ஊழல் மோசடிகளுக்கு உடன் விசாரணை என்பதை வலியுறுத்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி தலைமையகத்தில், கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (புதன்கிழமை) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. சொன்னதைச் செய்தவர்கள்! செய்வதை சொல்பவர் என்ற மகுட வாக்குடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்...
Loading posts...

All posts loaded

No more posts