- Monday
- April 21st, 2025

வடக்கு கிழக்கில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை என்பதையும் 1000 விகாரைகள் அமைப்பது என்பதையும் அனுமதிக்க முடியாது என தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் யாழ். மாநகர வேட்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணண் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக நேற்றயதினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்...

நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் பொய்களை கூறியுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பனர் ரட்ணஜீவன் கூல் நீதிமன்ற நீயாயாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார் என யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் கு.குருபரன் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டு கருத்து வெளியிடும்...

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரையில் 373 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 09 ஆம் திகதி முதல் நேற்று காலை 06.00 மணிவரை 559 தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை நாட்டின் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன. அதன்படி தேர்தல்...

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க செல்லிடத் தொலைபேசி மற்றும் குறுஞ் செய்தி வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இந்த சேவைகளை பயன்படுத்தி தேர்தல் வன்முறை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் குறுஞ் செய்தி வசதி தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது....

நிலையான ஓர் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும், கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். கல்முனையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...

உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து விட்டு வாக்களிக்காதவர்களிடம், அதற்கான செலவுத் தொகையை அறவிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து, அதற்கு தகைமை பெற்ற 4 ஆயிரம்...

வவுனியாவில் ஈ.பி.டி.பி.யின் வட்டார தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பதாதைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி.யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன் தெரிவித்தார். வவுனியா ஏ-9 வீதியில் அமைக்கப்பட்டிருந்த ஈ.பி.டி.பி வேட்பாளரின் தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக அமைக்கப்படிருந்த பதாதைகளே இவ்வாறு தீ வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை குறித்த வேட்பாளர் அலுவலகத்தை...

தென்னிலங்கைச் சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகள் எல்லாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கெல்லாம் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளில் போட்டியிடுபவர்கள் எல்லோரும் எமது அயலவர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்களாக உள்ளார்கள். தங்கள் வேலை வாய்ப்பு மற்றும் இதர சலுகைகளை எதிர்பார்த்தே இவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது வெள்ளிடைமலை. தெரிந்த முகம் என்பதற்காக இவர்களுக்கு நாங்கள் வாக்களித்தால், நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலையை...

“உள்ளூராட்சி சபைகள் தேர்தலின் போது வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது, தண்டனை சட்டக் கோவையில் உள்ளவாறு ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தும் வரையில் துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமான சூழ் நிலைகள் ஏற்படுமாயின் அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்” இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப்...

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் துறைகளில் பணியாற்றும் வாக்காளர்களுக்கு விஷேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அல்லது தனிப்பட்ட விடுமுறையில் இழப்பின்றி இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது...

ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் வியாழக்கிழமை ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு...

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்ட இருவருக்கு தலா நூறு ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இருவர் கடந்த 20ஆம் திகதி இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரையும்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில், காலை 11 மணியளவில் ஆரம்பமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முண்ணனியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் வருகைதந்தார். கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் தேர்தல் பரப்புரைகளுக்காக...

கடந்த காலங்களில் இனவாதம் பேசி மக்களை உசுப்பேத்தி வாக்குப்பெற்று மாநகரசபை உறுப்பினரானவர்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். கடந்த காலங்களில் வெறுமனே ஆசனத்தையும் தமது சட்டைப்பையையும் நிரப்பியவர்கள் மீண்டும் என்ன முகத்தோடு மக்கள் முன் வாக்கு கேட்டு வருகின்றார்கள். கடந்த காலங்களில் இவர்கள் வாக்கு கேட்டு வரும் போது பல்வேறு வாக்குறுதிகளை...

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு வலி வடக்குபிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வலிவடக்கு பிரதேச உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளருமான சுகிர்தன் ஊடாக தமிழரசுக் கட்சி தாக்கல் செய்திருந்தது. ஏற்கனவே குறித்த விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் காங்கேசன்துறைப் பொலிசாருக்கும்...

2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை தொடர்பான அறிவித்தலை சட்டத்தரணிகள் அறிவிப்பார்கள் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். “நிரந்தர தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்...

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சமீபகாலங்களில் அதிகரித்து வரும் தேர்தல் வன்முறைகள் காரணமாக இவ்வாறு பொலிஸாரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. மேலும் நடைபெற இருக்கின்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். அதனைத்...

நிரந்தரத் தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வகிபாகம்’ என்ற தலைப்பிலான மக்கள் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களை இலக்காகக் கொண்டு இச்சந்திப்பு நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வண்ணார்பண்ணை – பெரியகடை வட்டார வேட்பாளர் ம.அருள்குமரன் தலைமையில், நீராவியடியில் அமைந்துள்ள...

உள்ளுாராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பொன்று, நாளை (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. ‘நிரந்தரத் தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வகிபாகம்’ என்ற தொனிப்பொருளிலான குறித்த சந்திப்பு, யாழ். இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. யாழ். மாநகர சபை வேட்பாளர் ம.அருள்குமரன்...

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட பின்னர் அவ்விடத்தில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றுக்கான அலுவலகர்களின் அமைப்பினானாலேயே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. குறித்த இடங்களில் ‘சட்டமுரணான அறிவித்தல்’, ‘தேர்தல் சட்டங்களை பாதுகாப்போம்! சட்டமீறலை எதிர்ப்போம்! போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. உள்ளூராட்சி தேர்தலில் பிரசார நடவடிக்கைகளுக்காக தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள்...

All posts loaded
No more posts