இயல்பு நிலைக்குத் திரும்பியது கண்டி!!

கண்டி மாவட்டத்தில் இயல்புநிலை ஏற்பட்டுள்ளது. ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் முப்படையினரும் பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கண்டியில் கடந்த ஒரு வாரகாலமாக நீடித்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. முஸ்லிம்களின் வணிக நிலையங்கள், வீடுகள், உடமைகள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பன சிங்கள இனவாதக் கும்பல்களால்...

மின்னஞ்சல்களையும் கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டம்!

சமூக வலைத்தளங்களை தொடர்ந்து ஏனைய வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களையும் கட்டுப்படுத்துவதற்கும், ஒழுங்கு முறைகளை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தியதன் மூலம் நாட்டில் நிலவிய இனங்களுக்கிடையிலான மோதலை பாரிய அளவில் கட்டுப்படுத்த முடிந்ததாக குறித்த சந்திப்பில் கருத்து...
Ad Widget

சமூக வலைத்தளப் பயன்பாடு : தடைகளை மீறிய ஜனாதிபதி, பிரதமர், டிஜிட்டல் கட்டுமான அமைச்சர் !!

சமூக ஊடக வலையமைப்பு குறித்த தடைகளை ஜனாதிபதியும், பிரதமரும், டிஜிட்டல் கட்டுமான அமைச்சரும் மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் சமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்த சட்டங்களை மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாற்றுவழிகளை பயன்படுத்தி பேஸ்புக் மற்றும் மற்றைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர்...

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை ஹெட்டியாவத்தைப் பகுதியில் முச்சக்கர வண்டியில் வந்த இனம்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன்...

கண்டி பதற்றத்திற்கு காரணமான பிரதான சந்தேகநபர் கைது!

கண்டி நிர்வாக மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்த பிரதான சந்தேகநபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் மேலும் ஒன்பது சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றயதினம் (வியாழக்கிழமை) காலை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அமித் ஜீவன் வீரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்...

புலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு அறிவித்தனர்! : பாதுகாப்புப் படைகளின் பிரதானி

யுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய (புதன்கிழமை) செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”முஸ்லிம் சமூகத்தைப் பற்றி மிகமுக்கியமான ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும்....

அம்பாறை கொத்து ரொட்டியில் காணப்பட்ட பொருள் குறித்து தகவல்!

அம்பாறையிலுள்ள உணவகமொன்றில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் ஒருவகை மருந்து கலக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென இரசாயண பகுப்பாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கொத்து ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மா திரண்டு கட்டியாக காணப்பட்டமையே, தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அம்பாறையில் உள்ள உணவகமொன்றில் தயாரிக்கப்பட்ட கொத்துரொட்டியில், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்து கலக்கப்பட்டிருந்ததாக தெரிவித்து அண்மைய நாட்களாக...

சங்கா, சனத், மஹல வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம்

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாக பிரபல கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய மஹல ஜயவர்தன ஆகியோர் அறிவித்துள்ளனர். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலுவாக இருக்க வேண்டிய தருணம் இதுவெனத் தெரிவித்துள்ளனர். டுவிட்டர் மூலம் இருவரும் இவ்வாறு கருத்துரைத்துள்ளனர். இன அல்லது மதத்தின் அடிப்படையில் எவரும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட இடமளிக்கப்பட...

பாதுகாப்பை கருத்திற்கொண்டே சமூக வலைத்தளங்கள் முடக்கம்: ஒஸ்டின் பெர்னாண்டோ

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்க நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார். அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தில் நேற்ற (புதன்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் முதலான சமூக...

கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை : பற்றியயெரிந்த வாணிப நிலையங்கள்

கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றுபிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது. கடந்த சில மணித்தியாலங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அக்குரண, 8 ஆவது மைல் கல், கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் முஸ்லிம்களின் 25 இற்கு மேற்பட்ட கடைகள், தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் வானில் கரும்புகை...

திகனவில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு : கைது செய்யப்பட்ட 24 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

திகன நகரிலிருந்து இரு ஆண்களின் சடலங்களை, பொலிஸார் நேற்று காலை மீட்டுள்ளனர். 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உட்பட இருவரின் சடலங்களே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை திகன சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 24 பேரும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக,பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மக்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறப்பார்களா? : வியாழேந்திரன்

இனவாத, மதவாத வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய திட்டத்தை முன்வைக்காவிட்டால் முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை துறப்பார்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சவால் விடுத்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த சவாலை விடுத்தார். ஒரு இனம் அழிக்கப்படும்போது ஒரு இனம் சந்தோசப்படும் நிலையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்த அவர்...

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனம்!!

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை 10 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இன வன்முறைகளைத் தடுக்கவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வௌயிடப்படும் என்றும் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னரே அமைச்சர் இதனை தெரிவித்தார். 10 நாள்களுக்கு அவசரகாலச்...

தெல்தெனிய- பல்லேகலயில் பதற்றம்: மீண்டும் ஊரடங்குச் சட்டம்

கண்டி தெல்தெனிய மற்றும் பல்லேகல பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நீடிக்கும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல பகுதிகளிலும் நேற்று மாலை முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று...

ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்வு!

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்படவுள்ளது. அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுறுத்தப்படக்கூடிய வயது எல்லையை 67 ஆக நிர்ணயம் செய்வது குறித்த புதிய சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி என திகதியிடப்பட்டு இந்த சுற்று நிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில்...

ஊரடங்குச் சட்டம் நீக்கம்: கண்டியில் தொடர்ந்தும் STF பாதுகாப்பு

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், குழப்பம் ஏற்பட்ட தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் தொடர்ந்தும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினமும், நேற்றும் தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியற்ற சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இந்த...

கண்டி மாவட்டத்தில் பொலிஸ் ஊடரங்கு!

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிவரை இந்த ஊடரங்கு நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கண்டி திகன நகரில் இன்று காலை முதல் ஏற்பட்ட அசாதாரண நிலமையை அடுத்தே இந்த ஊடரங்கு போடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்... முஸ்லிம்...

15 வயதையடைந்தவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தால் 15 வயதை அடைந்தவர்களும் தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், “15 வயதை பூர்த்தியடைந்தவர்களும் இனிவரும் காலங்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் செயன்முறையில் வயதெல்லை...

பெண் பிரதிநிதிகளின் பெயர் பெயர்பட்டியலை ஒப்படைக்க கால அவகாசம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் பெண் பிரதிநிதிகளின் பெயர் அடங்கிய தமது பெயர்பட்டியலை, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார். பெண் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனைக்...

விடுதலைப்புலிகளின் குண்டே வெடித்தது! : இராணுவ வீரரின் அதிர்ச்சித் தகவல்

தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி உட்பட்ட மேலதிக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுத்த திட்டத்தில் விளைவே பேரூந்து குண்டுவெடிப்பிற்கு காரணம் என கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் தெரிவித்துள்ளார். அண்மையில் தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் பொலிஸாருக்கு...
Loading posts...

All posts loaded

No more posts