- Tuesday
- April 22nd, 2025

மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணியை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் மோட்டார் சைக்கிள் பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து...

எதிர்காலத்தில் தமிழ் இனத்தை ஒன்றிணைக்கும் ஒரு நாளாக மே 18ஆம் திகதி விளங்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில், “முள்ளிவாய்க்கால் நிகழ்வினை அனுஷ்டிப்பதில் முரண்பட்ட சில தரப்பினர், அந்நிகழ்வின்...

வாகன வரி அனுமதிப் பத்திரம் பெறப்படாத வாகனங்கள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத வாகனங்களின் அனைத்து பதிவுகளும் நீக்கப்படும் என வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் அறிவித்துள்ளார். அதன்படி கடந்த 2017 டிசம்பர் 31ஆம் திகதி வரை 5 வருடங்களாக வாகன வரி அனுமதிப் பத்திரம் பெறப்படாத வாகனங்களே இவ்வாறு இரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

மே 18 தமிழர் தேசத்தின் தேசிய துக்க நாளாக அனுஷ்டிக்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழர் தேசத்தை சிங்களப் பேரினவாதப்...

எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி அன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA), இந்தியாவுடனான எட்கா (ETCA) உடன்படிக்கை உட்பட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...

மண்ணெண்ணெய் விலை அதிகரித்தாலும் சமுர்த்திக் குடும்பங்களுக்கும், மீனவர்களுக்கும் பழைய விலையான 44 ரூபாவுக்கே மண்ணெண் ணெய் வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனா ரத்ன தெரிவித்தார். மண்ணெண்ணெய்யின் விலை 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க வேண்டும். இல்லாவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையாக உள்ளது. இதனால் அரசாங்கம் எரிபொருள் மானியம் வழங்க முன்வர வேண்டுமென அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு அரசாங்கம் எரிபொருள்...

வடக்கு மாகாணத்தில் உள்ள அரச வைத்திய சாலைகளின் மருத்துவ அதிகாரிகள் சங்கம், 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். இதன்படி அவர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல், குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் (புதிய...

இன்று வடக்கு, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களில் கடும் உஷ்ணமான காலநிலை நிலவும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை பொலன்னறுவை மாவட்டத்திலும் கடும் உஷ்ணமான காலநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும், வௌிக்கள செயற்பாடுகளில் அதிக அளவு ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னறிவிப்பு இன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது. சிங்கபூருடனான வர்த்தக உடன்படிக்கை மற்றும் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக உத்தேச சட்ட மூலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடத்தின் ஊடாக வழங்கப்பட்ட...

நாட்டின் சில மாகாணங்களில் இன்று அதிகளவான வெப்பநிலை உணரப்படுமென காலநிலை அவதானநிலையம் அறிவித்துள்ளது. இதனால் வெளியில் செல்வோர் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு அந்நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிகளவில் வெப்பம் உணரப்படுமென காநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

சமுக வலைத்தளங்கள் ஊடாக வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு என்று பல்வேறு பெயர்களில் இந்த கும்பல் இயங்குவதாக தெரிய வந்துள்ளது. வௌிநாடுகளில் பணி புரிகின்ற...

தமிழினத்தின் மறுக்கப்படும் நீதிக் காகவும் ஏமாற்றப்படும் தமிழ் சமூகத்திற்காகவும் முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவுகூர அனைவரும் அணிதிரள வேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுநாள் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழகத் தின் அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமேனனால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நவீன யுகத்தில் நிகழ்ந்த...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின எழுச்சி நிகழ்வு எதிர்வரும் 1.05.2018 அன்று நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் அனைத்து தொழிற் சங்கங்கள், பொது அமைப்புக்கள் பொது மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம். இடம் :- கிட்டு பூங்கா...

இலங்கையில் நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை தொடர்பில், மக்களுக்கு விசேட எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அதிகமான வெப்ப நிலை காணப்படுவதால், பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதிக உஷ்ணமான காலநிலை காரணமாக சிறுவர்களின் உடலில் வறட்சி நிலை ஏற்படாமல் பாதுகாக்குமாறு கோரப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள,...

எதிர்வரும் ஜூன் மாதமளவில் இளைஞர் மாநாடு ஒன்றினை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தமிழர் தாயகத்தின் முன்னேற்றத்தகும் அபிவிருத்தியில் இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்படுகின்றது....

இலங்கையில் ஓட்டோ வண்டிகளை செலுத்தும் சாரதிகளுக்காக புதிய சட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த சட்டத்துக்கு அமைய, பயணிகளின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ஓட்டோக்களை பயன்படுத்தும் சாரதிகளின் வயதெல்லை 35 இற்கு மேல் இருக்க வேண்டியது கட்டாயமாக்கபடவுள்ளது. இந்த சட்ட திட்டத்தினை மீறும் ஓட்டோ சாரிகளுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின்...

வலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கட்டுவன் வீதியின் மேற்கு புறமாகவுள்ள (ஜே-240- தென்மயிலை, (ஜே 246 மயிலிட்டி வடக்கு), (ஜெ-247 தையிட்டி கிழக்கு) கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் தமது காணிகளை உடனடியாக தமது கிராம சேவகரிடம் பதிவினை மேற்கொள்ளுமாறு தெல்லிப்பளை பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ கேட்டுகொண்டுள்ளார். காணிகளை...

பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாய நடைமுறைக்கு வருகிறது. இந்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார். முச்சக்கர வண்டிகளுக்கு...

“உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விண்மீன்கள் அமைப்பினரால் விழிப்புணர்வு வாகனப்பேரணியொன்று இடம்பெறவுள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது விண்மீன்கள் அமைப்பின் தலைவர் நகுலேஸ்வரன் புவிகரன் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உணவு வீண்விரயமாகுவதை தடுக்கும் நோக்குடன் வீண்மீன்கள் அமைப்பை உருவாக்கி இல்ல, பொது நிகழ்வுகளில்...

All posts loaded
No more posts