சுழிபுரம் சிறுமிக்கு நீதிகோரி நாளை கடையடைப்பு

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட 6 வயதுச் சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி நாளை யாழ்ப்பாணத்தில் முழுக்கடையடைப்பை நடத்த அனைவரையும் ஒத்துழைக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுழிபுரம் பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் தற்போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், நாளை யாழ்ப்பாண மாவடத்தில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் கடையைப்பை நடத்த...

தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியும்!

போக்குவரத்து விதிமீறலுக்கான தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியுமென போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர். போக்குவரத்து விதி மீறலுக்கான தண்டப் பணத்தை 14 நாட்களுக்குள் தபாலகங்களில் செலுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. எனினும் தபால் ஊழியர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பணத்தை செலுத்துவதில் சிக்கல் தோன்றியுள்ளது. இதற்கு மாற்று நடவடிக்கையாக தண்டப்...
Ad Widget

வடக்கு பட்டதாரிகளுக்கு அவசர அழைப்பு

திர்வரும் 20/06/2018 புதன்கிழமை காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன்பாக ” அபிவிருத்தி உதவியாளர் நியமனம் ” தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் அபிவிருத்தி உதவியாளருக்கான நேர்முகத்தேர்வை எதிர் கொண்ட வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளை வருமாறு கேட்டுக் கொள்கின்றோம். தகவல் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள்...

ஓட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் வருகிறது!

முச்சக்கர வண்டிகள் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்திலேயே பயணிக்க முடியும் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளுடனான போக்குவரத்துத்து விதிமுறைகள் இந்தவாரம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. “இந்த ஆண்டின் முதல் 120 நாள்களில் முச்சக்கர வண்டி சாரதிகளின் பொறுப்பற்ற சாரதியத்தால் 117 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். அதுதொடர்பில் போக்குவரத்து அமைச்சு கவனம்...

இளைஞர்கள் விழிப்படைந்தால் குற்றச்செயல்களை முற்றாக கட்டுப்படுத்த முடியும்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத் தக்கது. இளைஞர்கள் விழிப்படைந்தால் குற்றச்செயல்களை முற்றாக கட்டுப்படுத்த முடியும்” இவ்வாறு வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்தார். குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் இளைஞர்களின் நடவடிக்கைக்கு பொலிஸார் ஒத்துழைக்கவில்லையாயின் தனது கவனத்துக்கு கொண்டு...

நல்லூர் போராட்டத்துக்கு அணிதிரள இந்துக்களுக்கு சைவ மகா சபை அழைப்பு!

இந்துமத விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து இன்று (13) புதன்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. அரசால் இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையைக் கண்டித்து அகில இலங்கை சைவ மகா சபையால் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் சைவ சமயிகள்...

வாக்காளர் பெயர்ப் பதிவு படிவத்தை கையளித்துவிட்டீர்களா?

018ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை (பிசி படிவம்) துரிதமாக முழுமை செய்து, கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை கிராம அலுவலர்கள் தற்போது வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்தப் பணி இப்போது 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக தேர்தல்கள் செயலகம்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க சிறப்புக் குழு! : அங்கத்தவர்களை இணைக்க விண்ணப்பங்கோரல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை 2019ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் முன்னெடுத்துச் செல்ல சிறப்புக் குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் அங்கத்துவம் பெற விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்களை அவர் கோரியுள்ளார். இதுதோடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை...

தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளதா? இந்த எண்ணுக்கு அறிவியுங்கள்

தமிழ் மொழியில் எழுதப்படவில்லையா, தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளதா? அவை தொடர்பில் அறிவிக்குமாறு அரச கரும மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் மக்கள் தமது மொழி தொடர்பில் இழைக்கப்படும் தவறுகளை...

பேரவையின் இளையோர் மாநாட்டுக்கான காரணங்களை பட்டியலிடுகிறார் முதலமைச்சர்

தமிழ் மக்கள் பேரவையால் இளையோர் மாநாடு நடத்தப்படுவதற்கான காரணங்களை அதன் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பட்டியலிட்டு எடுத்துக் கூறினார். இதுதொடர்பில் யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விளக்கத்தை வழங்கினார். அவர் தெரிவித்ததாவது: உங்கள் யாவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய...

மீள்குடியமர்ந்தோரிற்கான பதிவு நடவடிக்கைகளின் காலஎல்லை நீடிப்பு!

வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தமக்கான வீட்டுத்திட்டம் போன்ற உதவித் திட்டங்களைப் பெறுவதற்கு பதிவு செய்யப்பட வேண்டிய காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபையின் தலைவர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்கள் உள்பட வேறுவேறு இடங்களில் தங்கியிருப்போர் மற்றும் மீள்குடியமர்ந்தோர் தமக்கான உதவித் திட்டங்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யப்பட வேண்டிய காலப்பகுதியே...

யாழ்ப்பாணம் உள்பட 12 மாவட்டங்களில் டெங்கு அபாயம் அதி உச்சம்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சமாக உள்ள மாவட்டங்கள் என இலங்கை நோய்தொற்றியல் பிரிவு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் நோய்த்தொற்றியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, காலி, களுத்துறை மற்றும் குருணாகல் ஆகிய 12 மாவட்டங்களில் டெங்கு...

வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய மாணவர்கள் முன்வர வேண்டும்: அரசாங்க அதிபர்

பாடசாலை மாணவர்களுக்கெதிரான வன்புணர்வுகள் தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடு செய்ய முன்வர வேண்டுமென்பதுடன், விழிப்புணர்வுகளை அடைய வேண்டுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அண்மைக்காலமாக பாடசாலை மாணவிகள் மீதான வன்புணர்வுகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பாக அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்...

இலங்கையில் உயிர்களை காவுகொள்ள காத்திருக்கும் புதிய வைரஸ்!

நாடு முழுவதும் பரவிவரும் இன்புளுவென்ஸா வைரஸ் நோய் தொற்றினால், இதுவரை அரச வைத்தியசாலைகளில் நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முக்கியமாக தெற்கில் பரவும் குறித்த இன்புளுவென்ஸா நோய் தொடர்பில் மக்களுக்கு முறையான விளக்கமளித்து அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நோய் ஏனைய பகுதிகளுக்கும் பரவி உயிர்ச்...

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்

தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட் (Vedanta Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டி அந்த ஆலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் போராடி வந்த தமிழக மக்கள் மீது கடந்த 22.05.2018 அன்று காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். குறிப்பாக இப்போராட்டங்களை ஒழுங்கு செய்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள்...

எச்சரிக்கை – யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை வேளையில் காற்றுடன் கூடிய மழை!!

தொடரும் சீரற்ற காலநிலையானது நாட்டின் பெரும்பாளான பகுதிகளிலும் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் இன்றும் (24) அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. மேலும் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களிலும் மழை அல்லது காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்...

வடக்கு முழுவதும் சனி, ஞாயிறு தினங்களில் மின் தடை

வடக்கு மாகாணம் முழுவதும் வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் – வவுனியா, மன்னார் மின்மார்க்கத்தில் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதால் இந்த தடை ஏற்படும் என இலங்கை...

மண்டைதீவு இராணுவ முகாமின் காணி உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளவும்: கஜதீபன்

மண்டைதீவில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு வட.மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். மண்டைதீவுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் ஒன்றை மேற்கொண்ட வட.மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் அப்பகுதியின் கிராமசேவகர் மற்றும் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மண்டைதீவின் நன்னீர் வளமுள்ள பகுதியில்...

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் பின்னர் துறைமுகம் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி பேரூந்துக் கட்டணங்கள் 12.5% வீதத்தினாலும், ஆரம்பக் கட்டணத்தினை 12 ரூபாவாகவும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை தனியார் பேருந்துகளில் புதிய...

தென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் வைரஸ் நாடு முழுவதும் பரவும் அபாயம்!

இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தென் பகுதியை ஆட்டிப்படைக்கும் வைரஸ் தொற்று நாடு மூடுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் தொற்றால் இதுவரை 600ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் முன் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்புளுவென்சா...
Loading posts...

All posts loaded

No more posts