- Tuesday
- April 22nd, 2025

செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் 22ஆவது ஆண்டு நினைவு தினம், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது. கிருஷாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் இதன்போது நினைவுகூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. செம்மணி படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் 50 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற...

சம்பளப் பிரச்சினை உள்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.ச. ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு வடக்குப் பேருந்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதையடுத்து வடக்கில் இன்று இ.போ.ச. பேருந்துச் சேவைகள் முடங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பளப் பிரச்சினை உள்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தெற்கில் இ.போ.ச. ஊழியர்கள் நேற்றுமுன்தினம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தனர். எனினும் நேற்று வடக்கு...

யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைக்கு தொந்தரவு செய்யும் குற்றவாளிகளைக் கைது செய்ய ஆதரவை வழங்குமாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய குடாநாட்டில் அதிகளவில் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் நேற்றையதினம் பொலிஸாரினால் விநியோகிக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக ஒன்றிணையுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை’-இன் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இப்போராட்டம் இடம்பெறவுள்ளது. மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை, முல்லைத்தீவு மாவட்ட தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள், கலை, கலாசார, பண்பாடுகள் சிதைக்கப்படுவதை...

வாள்வெட்டுக் கும்பல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் தமக்கு நேரடியாகத் தகவல்களை வழங்கி உதவுமாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ கேட்டுள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை இரகசியமாக தொலைபேசியிவோ அல்லது நேரடியாகவோ தெரிவிக்குமாறு, அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் தலையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று (18) நடைபெற்ற...

நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலையும் காற்றின் வேகமும் இன்று குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டமாக காணப்படக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். மத்திய மற்றும்...

முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35–70க்கும் இடைப்பட்டதாக காணப்பட வேண்டுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சட்டம் 2081/44 ஆம் இலக்க விசேட வர்த்தமானி ஊடாக விலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுகொண்ட ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு வருடம் ஓட்டும் அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சாரதிகளுக்கான தகைமைகளை முழுமைப்படுத்தியவர்கள், வைத்திய பரிசோதனை அறிக்கை மற்றும்...

யாழில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்களும் தங்களின் ஆதரவினை முழுமையாக வழங்க வேண்டுமென வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்ணான்டோ பொதுமக்களிடம் இன்று (சனிக்கிழமை) கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த செயற்பாட்டுக்கு மக்களும் தங்களது முழு பங்களிப்பினை வழங்குவார்களாயின் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய உதவியாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

யாழ். போதனா வைத்தியசாலை நீங்கலாக யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பிராந்தியத்திற்குட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவு சேவையாற்றி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் தேவையான 18 வைத்தியர்களில் 9 வைத்தியர்கள் மட்டும் கடமையாற்றுகிறார்கள். அங்கு...

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஈரானின் மீதான...

நிறமூட்டப்பட்ட தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பருப்பு வகைகள் இரத்தினபுரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது தற்போது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறுவதுடன் வேகவைக்க வழமையைவிட கூடுதலான நேரம் எடுக்கும். இவ்வாறான பருப்பு வகை விற்பனை...

இலங்கையில் இருதய நோய் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் இருதய நோய் காரணமாக 24 மணித்தியாலங்களுக்குள் 150 பேர் வரை உயிரிழக்கின்றனர். வருடத்திற்கு 48 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர். இவர்களில் 25 வீதமானவர்கள் இளைஞர்கள்....

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்புஎதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட வைத்தியர்களுடன் தொடர்பற்ற அரசாங்கத்தின் உடன்படிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப்பணிப்புறக்கணிப்பு அமையுமெனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தமது பிரச்சினைகள் தொடர்பிலும்...

சிறுவர்கள் மத்தியில் வாய்புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர் பபா பலிஹவடன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த உற்பத்திகளின் பாவனை அதிகரித்துள்ளமைக காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சுகாதார நிறுவனங்களால் புகையிலை சார்ந்த உற்பத்திகளின் விற்பனை தடை...

கிளிநொச்சி - அக்கராயன் பிரதேசத்தில் நடமாடுகின்ற போலி வைத்தியரொருவர் தொடர்பில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென, அக்கராயன் பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த நபர், அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் வைத்தியராகப் பணியாற்றாத நிலையில், அந்த வைத்தியசாலையில் தான் பணியாற்றுவதாகக் கூறி, கிராம மக்களிடம் பணம் அறவிடுதல் உள்ளிட்ட பல மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, வைத்தியசாலை...

இந்த திட்டத்தை இலங்கை போக்குவரத்துச் சபை தனது இணையத்தளம் ஊடாக நேற்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. பயணிகள் தாம் பயணிக்க விரும்பும் மாவட்டத்தைத் தெரிவு செய்து தமது ஆசனத்தை முற்பதிவு செய்து கொள்ளலாம். கட்டணத்தை இணையம் ஊடாக செலுத்தும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இணையத்தள முகவரி வருமாறு: https://sltb.express.lk/

வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக சம்பவ இடத்திலேயே விதிக்கப்படும் தண்டப்பணம் நேற்று 15ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் அதிகரிக்கப்படுகின்றன. வாகான புகைப் பரிசோதனைச் சான்றிதழை எடுத்துச் செல்லத் தவறினால் 500 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என புதிய போக்குவரத்து விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அந்தச் சான்றிதழ் வாகன வரி அனுமதிப் பத்திரம்...

வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக விதிக்கப்படும் தண்டப்பணம் இந்த மாதம் 15ஆம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார். வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்துவதற்கான தண்டப்பணம் ரூபா 25 ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகுமம் அவர்...

இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் வடக்கில் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். குறித்த சேவை எதிர்வரும் 21 ஆம் திகதி வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தவகையில் வடமாகாணத்திற்கு 20 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளது. இதில் யாழ்ப்பாணத்திற்கு 7 அம்புலன்ஸ் வண்டிகளும்,...

எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர்கள் தமது வாக்குரிமை பத்திரத்தை பூரணப்படுத்தி கிராம சேவையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென தேர்தல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலின்போது தமது வாக்குரிமையை உறுதிசெய்யும் பொருட்டு குறித்த வாக்குபத்திரத்தை விரைவாக பூரணப்படுத்தி கையளிக்குமாறு தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் வாக்காளர் பதிவேற்றில் பெயரை பதிவுசெய்ய...

All posts loaded
No more posts