கோரோனா பற்றி வடக்கு மாகாண மக்கள் பின்பற்றவேண்டியவை – மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவுரை

உலகளாவிய தொற்றுநோயாக கோரோனா (COVID 19) தொற்றுநோய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலும் 16.03.2020 வரை 28 நோயாளிகள் கோரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். எனினும் இதுவரை வடமாகாணத்தில் கோரோனாத் தொற்றுள்ள ஒரு நோயாளரும் அடையாளங் காணப்படவில்லை. ஆனாலும் இந் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான மாகாண சுகாதார சேவையினரின் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் வருமாறு: தனிமைப்படுத்தல் (Quarantine)...

பண்டிகை காலத்தில் புடவைகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ளவும்

எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு தேவையான புடவைகளை கொள்வனவு செய்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்வது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு பெரும் உதவியாக அமையும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். புடவை முதலானவற்றை கொள்வனவு செய்யும் பொழுது சில வேளைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புடவைகளை தொடுதல், அந்த...
Ad Widget

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களுக்கு அவசர அறிவிப்பு!!

மார்ச் 1 தொடக்கம் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, தென்கொரியா மற்றும் ஈரான் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தங்களை பதிவு செய்துகொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யாத நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...

கொரோனா வைரஸ் – பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்

புதிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொடர்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கான பயணத்தை முடிந்தவரை இரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. கொழும்பில்நேற்று(9) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் யாசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். குழுக்களாக செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வெளிநாட்டு பயணங்களையும்...

கையடக்கத் தொலைபேசியின் திரையில் கொரோனா வைரஸ்!!!!

கொவிட் 19 (கொரோனா) வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கையடக்கத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று...

சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை தொடர்பாக மக்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளும் கர்ப்பிணி தாய்மார்களும் அவதானத்துடன் இருத்தல் அவசியம் எனவும் அந்த அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அதிக வெப்பம் நிலவுவதால், பல்வேறு நோய்களும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள்...

கடும் வெப்பம்: 4 மாகா­ணங்­க­ளுக்கு விஷேட அறி­வு­றுத்தல்

நாட்டில் நிலவும் அதிக வெப்­ப­மான கால­நிலை கார­ண­மாக வடமேல், மேல், சப்­ர­க­முவ மற்றும் தென் மாகா­ணங்­க­ளுக்கும் மன்னார், மொன­ரா­கலை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கும் விஷேட அறி­வு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த பகு­தி­களில் வெப்பம் அதி­க­ரிக்கக்கூடும் என்­பதால் பொதுமக்கள் சுகா­தார நலன் தொடர்பில் அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்டும் என்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. அதிக வெப்­ப­மான கால­நிலை...

கடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் வைத்தியர்கள் ஆலோசனை

நாட்டில் தற்பொழுது பெரும்பாலான பிரதேசங்களில் நிலவும் அதிக வெப்பநிலையினால் உடல் ஆரோக்கியம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார பிரிவு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது. வெப்பநிலையின் காரணமாக வைத்தியசாலைக்கு வரும் நோய் நிலைமைக்கு உட்பட்டுள்ள நோயாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது நிலவும் வெப்பத்துடனான காலநிலையில் சிறுவர்கள், குழந்தைகள், வயதானோர் அதிக வெயில் வேளையில்...

வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்திற் கொண்டு அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று காலை 10.30 மணி முதல் நாளை காலை வரை நாட்டில் நிலவக் கூடிய காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வட மேல் மாகாணம், மேல் மாகாணம் மற்றும்,...

யாழில் கிராம சேவையாளரிடம் மீண்டுமொரு ஈஸி காஸ் மோசடி முயற்சி!!

யாழில் கிராம சேவையாளரிடம் மீண்டுமொரு ஈஸி காஸ் மோசடி மேற்கொள்ள முயற்சித்த போதிலும் குறித்த கிராம சேவையாளர் சுதாகரித்துக் கொண்டதால், மோசடி கும்பலிடம் ஏமாறாது தப்பிக்கொண்டார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , யாழ்.அச்சுவேலி பகுதியை சேர்ந்த கிராம சேவையாளர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் ஒருவர் தன்னை புலனாய்வு பிரிவின் காவற்துறைப்...

பல்கலைக்கழகக் கற்கை நெறியைக் கைவிட்டுச் சென்ற மாணவர்களுக்கு வாய்ப்பு

பல்கலைக்கழகக் கற்கை நெறிகளை பகிடிவதையின் காரணமாக இடையில் கைவிட்டுச் சென்ற மாணவர்களுக்கு மீளவும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொடுக்கும் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய சிபாரிசுகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அந்தவகையில், இக்குழுவிற்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க...

ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்!! பொலிஸார் எச்சரிக்கை!!

தென்னை மர வட்டு மிதிப்பதாக குறைந்த கூலி பேசி வேலையை தொடங்கும் நபர்கள் வேலை முடிய அதிக பணம் கேட்டு மிரட்டி பணத்தினை பெற்று சென்றனர் என பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்ற இருவர்...

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் – விண்ணப்பகாலம் நீடிப்பு

தொழில்வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் இம் மாதம் 14 ஆம்...

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்!!

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக பணி செய்யும் கலாசாரமொன்றை ஏற்படுத்தும் வகையில் இளம் தலைமுறையினரை பேண்தகு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நம்பகமாகவும் தர்க்கபூர்வமான அடிப்படையிலும் பங்களிக்கச் செய்வது இதன் நோக்கமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள்...

சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ அறிக்கையினை அரச வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம்!

இலகு ரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு தேவையான மருத்துவ அறிக்கையினை அரச வைத்தியசாலைகளினூடாக வழங்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அத்துடன் இந்த மருத்துவ அறிக்கையினை வௌியிடக் கூடிய வகையில் அரச வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்தவும இதன் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்துனால் உருவாக்கப்படும் மாதிரிக்கு அமைய இந்த சான்றிதழ் விநியோககிக்கப்படவுள்ளதாக...

கிராம அலுவலரின் சான்றிதழ்களுக்கு பிரதேச செயலரின் ஒப்பம் தேவையில்லை!!

கிராம சேவையாளரினால் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு பிரதேச செயலரின் ஒப்பம் பெறும் நடைமுறை இரத்துச் செய்யப்படுவதாக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வரும் பெப்ரவரி 10ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கிராம சேவையாளரால் வழங்கப்படும் வதிவிடச் சான்றிதழ், நற்சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்கள், கடிதங்களுக்கு அந்தப்...

கொரோனா வைரசில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு பாடசாலைகளுக்கு ஆலோசனை!!

கொரோனா வைரசில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதகாப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுஙைகள் தொடர்பில் அனைத்து மாகாண, வலய மற்றும் தொகுதி கல்வி அதிகாரிகளுக்கும், தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சீனாவில் வூஹான் மாநிலத்தில் காணப்பட்ட இந்த வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவிவருகின்றது. இந்த வைரஸ் இதற்கு முன்னர்...

கொரோனா வைரஸ் – மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரசாரங்களைக்கண்டு ஏமாற வேண்டாம் என அரச தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் அது தொடர்பாக அரச சுகாதார அதிகாரிகளால்...

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனை: அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!

வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குத் தேவையான வைத்திய பரிசோதனைக்கு இணையத்தள பதிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வைத்திய பரிசோதனைக்கான நாள் மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக பதிவுசெய்வதற்கு இன்று (திங்கட்கிழமை) முதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இதற்கென அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தள செயலி இன்று முதல் செயற்பாட்டுக்கு வரவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல்...

கொரோனா வைரஸ் தாக்கம் : கொழும்புக்கு வரும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!!

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்புக்கு வரும் அனைவரையும் மூக்கு கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நெரிசலான பகுதியில் கூடும் அனைவரும் முகத்திற்கு மூக்கு கவசம் அணியுமாறு கொழும்பு தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார். கொழும்பு நகரத்தில் உள்ள பொது இடங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்குள் நுழையும்போது இந்த முறையை பின்பற்றவும் ஊழியர்களுக்கு...
Loading posts...

All posts loaded

No more posts