- Saturday
- February 22nd, 2025

“முதலீட்டு சபை, கொழும்பு பங்குச்சந்தை மற்றும் இலங்கை வர்த்தக சபை ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள, இணையத்தினூடாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இதனை காலத்திற்கு உகந்ததொரு நடவடிக்கையாக நாம் கருதுகின்றோம். 2006 முதல் 2014 வரையான 9 ஆண்டு காலத்தில் நமது நாடு அபிவிருத்தியடைந்த வேகத்தை நீங்கள்...

“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையத்தை நிறுவும் சட்டமூலத்தை இன்று இந்த சபையில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இப்புதிய கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானம் கடந்த 2014 செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி, நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதொன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த கட்டுமானத்திற்கு சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி சீ ஜின் பிங்...

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் கொருளாதார ரீதியில் பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரசு அதனை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும்...

குரூர் ப்ரம்மா… எனதினிய தமிழ் மக்களே! பல்லாயிரக்கணக்கில் இங்கே வருகை தந்துள்ள அனைத்து உறவுகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை முதற்கண் கூறி வைக்கின்றோம். “அழுத குழந்தையே பால் குடிக்கும்” என்பார்கள். குழந்தை அழுதால்தான் தாய்க்கு அதன் பசி பற்றி பொதுவாக நினைவுவரும். “அழுதால் உன்னைப் பெறலாமே” என்றார் மணிவாசகப் பெருமான். இறைவன் கூட அழுபவர்களுக்கே வரம்...

யுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் ஏறத்தாழ இரண்டே முக்கால் இலட்சம் மோட்டார் வாகனங்கள் வாகனவரி செலுத்தியுள்ளன. இவை தவிர, வேறு மாகாணங்களில் பதிவுசெய்யப்பட்ட பெருந்தொகையான வாகனங்களும் வடக்கில் பயன்பாட்டில் உள்ளன. காற்றை மாசுபடுத்துவதில் பெற்றோலிய எரிபொருட்களில்...

தமிழ் மக்களால் தெரிவான ஜனாதிபதி எமது மக்களை வீதியில் விட்டுவிட்டார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தில் 4 வருடங்களை வீணடித்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கிளிநொச்சியில் 4,500 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

தமிழரசுக் கட்சியின் வாலிபர் முண்ணணி மாநாட்டில் கட்சியின் காங்கேசன்துறை வாலிப முண்ணணியின் தலைவர் கந்தசாமி மயூரதன் ஆற்றிய உரை தமிழ்த்தேசிய அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பெனும் விடயப்பரப்பில் சிந்தனை ஓட்டத்தை செலுத்துகின்ற போது நம்முடைய ஞாபகத்திற்கு பல கனதியான விடயங்கள் வந்து சேருகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சி என்பது தமிழர்களுடைய ஒரு தனித்துவ அடையாளமாகவும், நீண்ட வரலாற்று பின்னணியையும்...

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 வது...

காரைநகர் பிரதேசசபையின் கசூரினா சுற்றுலாமையத்தில் முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகக் கட்டடதிறப்புவிழா கசூரினா சுற்றுலா மையம்இ காரைநகர் 24.10.2018 புதன்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் பிரதம அதிதியூரை குருர் ப்ரம்மா ...................... இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, இந்த நிகழ்வைச் சிறப்பிப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும்...

தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு நீங்கள் யாவரும் முன்வரவேண்டும் என்று அழைக்கின்றேன். அது முடியாது என்று...

கொடூரமான முறையில் ஆயுதரீதியாக முன்னெடுத்த யுத்தத்தை நிறுத்திக்கொண்ட அரசு இப்போது யுத்தத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் அரசு சத்தம் இல்லாத யுத்தம் ஒன்றை எம்மீது தொடுத்திருக்கிறது. வனங்களைப் பாதுகாத்தல், வன ஜீவராசிகளைப் பாதுகாத்தல் என்றுசொல்லி ஏராளமாக எமது நிலங்களைக் கையகப்படுத்திவருகிறது. இந்த நிலஅபகரிப்பைத் தடுக்கத்தவறினால் அமெரிக்காவில் அதன் பூர்வகுடிகளான...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சுக்கே வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்வில்...

வடக்கில் எதிர்வரும் காலங்களில் அமையவுள்ள மாகாண சபை தற்போதுள்ள மாகாண சபையை பார்கிலும் கூடுதல் வினைதிறனுடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். யாழ்.அச்சுவேலி புனித திரேசாள் மகளீர் கல்லூரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்....

எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினரும் மிக விரைவில் எம்முடன் சேர்ந்து போராட வேண்டிய தேவை ஏற்படும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பால் பதனிடும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்...

சுயநல அரசியல்வாதிகளினாலேயே நாட்டில் நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர், ‘நாட்டின் நல்லிணக்கம் வரலாற்று தொடக்கம் சீராக...

இனப்பிரச்சனைக்கு தீர்வினை காணப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணத்திற்குமான அலுவலகம் வடக்கில் முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் மற்றும் புதிய கடன் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று(வியாழக்கிழமை) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது....

சமஷ்டி முறைக்கு தமிழ் அரசியல் தலைவர்களே முதலில் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு சட்டக்கல்லூரியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எமது அறிவின்மை பிழையான சரித்திரத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்ட...

இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை காணப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் இந்த விளையாட்டுக்களில்...

வடக்கில் நிகழுகின்ற குற்றச்செயல்களுக்குத் திரைப்படங்களே காரணம் என்று சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்தபோது தெரிவித்திருக்கிறார். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் எமது மாணவர்களில் பெரும்பாலானோர் தங்களது ஆதர்ச நாயகர்களாகத் திரைப்பட நடிகர்களை வரித்துக்கொண்டு அவர்களது நடை, உடை, பாவனையைப் பின்பற்றி வருகிறார்கள் என்பதை நாம்...

சிங்கப்பூர் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைள் சிலவற்றையேனும் இலங்கை அரசாங்கம் கடைபிடிப்பதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவற்றில் ஒன்றையாவது இந்த அரசாங்கம் கடைபிடித்தால் நாடு அபிவிருத்தியடையும் என கூறினார். இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

All posts loaded
No more posts