Ad Widget

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் யாழ்ப்பாணத்தில் !

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது, 'அரசாங்கம் உடைத்து உடைத்து தேர்தலை நடத்தினால்...

முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்புக்கு அமைச்சர் டளஸ் பகிரங்க அழைப்பு

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும், கிழக்கை மேலும் அபிவிருத்தி செய்யவும் எம்முடன் ஒன்றுபடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். (more…)
Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்: சந்திரகாந்தன்

என்னை வீழ்த்த நினைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, என்னை எந்தவிதத்திலாவது...

கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க மும்முரம்!

கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை தோன்றியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி 11 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலதிக ஆசனங்கள் இரண்டு உட்பட 14 ஆசனங்கனை கைப்பற்றியுள்ளன. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய...

கிழக்குத் தேர்தல் இன்று தமிழ்க் கூட்டமைப்பு – மு.கா. – அரச தரப்பு மும்முனைப்போட்டி

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இங்கு இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. அத்துடன் வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கும் இன்று நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் 108 உறுப்பினர் தெரிவிற்காக...

கிழக்கு தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு, தமிழ் சிவில் சமூகத்தின் வேண்டுகோள்

தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். எமது தாயகத்தில் கடந்த காலத்தில் இரண்டு முறை (1989, 2008) நடந்த மாகாண சபைத் தேர்தல்களை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் புறக்கணித்திருந்தன. அரச சார்புத் தமிழ்க் கட்சியொன்றினால்...