வாக்காளர்கள் யாருடைய மிரட்டல்களுக்கும் பயப்படத் தேவையில்லை : யாழ்.அரச அதிபர்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் பயப்பட தேவையில்லை சிலர் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரிய வரும் என மிரட்டுவதாக தகவல்கள் உண்டு அவ்வாறு நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதனை யாராலும் எச் சந்தர்ப்பத்திலும் பார்க்க முடியாது எனவே அவ்வாறானவர்களின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவையில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்....

சர்வதேச அழுத்தத்தினாலேயே மஹிந்த அலரிமாளிகையிலிருந்து ஓடினார்- மாவை

தேர்தல் தோல்வியை அடுத்து சதித்திட்டத்தினூடாக ஆட்சியை தக்கவைக்க முயன்ற மஹிந்த ராஜபக்ஷ மேற்குலகம் உட்பட முழு சர்வதேசமும் காட்டிய எதிர்ப்பு மற்றும் அழுத்தம் காரணமாகவே அலரிமாளிகையிலிருந்து ஓடினார் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நடாத்திய பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து...
Ad Widget

“தேசியத்தலைவர் பிரபாகரனை விற்றுப்பிழைத்து அரசியல் நடத்த வேண்டாம்” – திரு ந.அனந்தராஜ்

மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. என்றுமில்லாதவாறு பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தமை தமிழர்கள் எப்போதும் விலைபோகதவர்கள் என்பதை மீண்டும் ஒருதடவை உணர்த்தியுள்ளது. மேற்படி இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமராட்சியின் ஒரு சிறந்த கல்வியியலாளரும் முன்னணி வேட்பாளருமாகிய...

சர்வதேச நிலைப்பாட்டை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றியமைத்தோம்! – சுமந்திரன்

வெறுமனே அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்து பார்வையாளராக நாடாளுமன்றத்தில் நாம் அமர்ந்திருக்கவில்லை. நாடாளுமன்றத்திலேயும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், சர்வதேசத்திலும் இராஜதந்திர அணுகு முறையை மேற்கொண்டு, 2009இல் தமிழ் மக்கள் உரிமைப் போர் தொடர்பில் இருந்த நிலையை முற்றாக மாற்றி சர்வதேச நிலைப்பாட்டை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றியமைத்தோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

உண்மை அறியப்பட்டதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு வேண்டும்! – வவுனியாவில் சம்பந்தன்

"போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மை அறியப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் வழங்கப்படவேண்டும். அவ்வாறான நிலைப்பாடு இருந்தாலே நாட்டில் நல்லாட்சி ஏற்படும். உண்மை அறியப்பட்டதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு வேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த்...

நாங்கள் சொல்வதைத்தான் கூட்டமைப்பும் சொல்கிறது – அங்கஜன்

நாங்கள் சொல்வதைப் போன்றுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஜனநாயகவாதி என்று சொல்லுகிறது எனத் தெரிவித்தார், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன். யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்களின்...

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு தமிழ் கட்சி த.தே.கூ – சம்பந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற ஒரேயொரு தமிழ் கட்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்ற விசுவாசத்தை பெற்ற கட்சியாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய்ககூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா கலைமகள் விளையாட்டு திடலில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு...

ஈபீடிபீக்கும் த.தே.கூ.வுக்கும் என்ன வித்தியாசம்? – மணிவண்ணன்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (ஈபீடிபீ) இடையே என்ன வித்தியாசம் காணப்படுகிறது. நாங்கள் ஈபீடிபீயை நிராகரிக்க வேண்டுமானால், கூட்டமைப்பையும் தூக்கி எறியவேண்டும் எனத் தெரிவித்தார் தமிழ் தேசிய முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன். யாழ். தென்மராட்சி - கோவிலாக்கண்டி பிரதேசத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...

வெற்றிலை உண்டால் புற்றுநோய் வரும் என்பதால் விலகிவிட்டோம் – இரா.செல்வ வடிவேல்

வெற்றிலை உண்டால் புற்றுநோய் ஏற்படுவது போல வெற்றிலையில் தொடர்ந்து இருக்க முடியாத வகையில் வெற்றிலையுள்ளதால் அதில் இருந்து விலகி தமிழ் மக்களின் நாதமாகிய வீணையில் போட்டியிடுகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் இரா.செல்வ வடிவேல் தெரிவித்தார். யாழ். நகரப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்....

தமிழ் மக்களுடைய சகல பிரச்சினைகளுக்கும் நிச்சயமாக தீர்வினைக் காண்போம்!- யாழில் சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நேற்றய தினம் யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. முதலாம் கட்ட தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட பிரச்சார பணிகள் நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார். இந்த...

யுத்தத்தின் பின்னர் எவரும் பிரிவினையைக் கோரவில்லை!

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்த நாட்டில் பிரிவினையை யாரும் கோரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடந்து தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச சமூகத்தினால் தமிழ் மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பாக தமிழ் தேசிய...

எமது பாரம்பரியத்தையும் விவசாய பின்புலத்தையும் மாற்றியமைக்க நாங்கள் விரும்பவில்லை – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

தொழில் முயற்சிகளில் ஈடுபடவே நாங்கள் விரும்புகின்றோம். பாரிய செயற்றிட்டங்களை வகுத்து தொழிற் பேட்டைகளை உருவாக்கி எமது பாரம்பரியத்தையும் விவசாய பின்புலத்தையும் மாற்றியமைக்க நாங்கள் விரும்பவில்லை. மேலும் சுற்றுலாத்துறை போன்ற, எமது பாரம்பரியம் கலாசாரம், இயற்கை வளங்கள், சுற்றாடல் போன்றவற்றுக்கு அமைவாக விருத்தி செய்யப்பட வேண்டும் என்பது எமது விருப்பம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்....

நான் கொலைகாரன், பிரபாகரன் மிஸ்டரா? – மகிந்தவின் ஆதங்கம்

பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாத்த என்னை கொலையாளி என்று சித்தரிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் பல உயிர்களை கொன்று குவித்த விடுதலைப் புலிகளின் தலைவரை மிஸ்டர் பிரபாகரன் என்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் கடந்த காலத்தில் பயங்கரவாதம் காணப்பட்ட...

வாக்காளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களினதும் மிகப்பெரும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற நாட்டுக்காக பணி செய்யக்கூடிய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் தெரிவுசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்கள் தங்களது...

ஐ.நாவுக்கு எவ்வாறு பதிலளிப்பது! கூட்டமைப்பை நாடுகிறது அரசு!! பேச்சுகளும் நடந்தன என்கிறார் ரணில்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செப்ரெம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:- "நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வே எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்தது. வேறு எந்தவித...

புதிய அரசியல் சாசனம் மூலமாக தேசிய பிரச்சினைக்கு முழுமையான தீர்வு வேண்டும்! – சம்பந்தன்

"இலங்கையின் தற்போதைய அரசியல் சாசனம் நீக்கப்படவேண்டும். புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிட்டவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே...

மஹிந்தவின் காலத்தில் 700 பில்லியன் ரூபா வரி வருமானம் காணமல் போயுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியினால் அரச சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாக கூறி பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் செல்வந்தர்கள் வரி அறவிடுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். உயர் வருமானம் பெறக்...

தமிழீழக் கோரிக்கையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை! – விஜயகலா

தான் ஒருபோதும் தமிழ்ஈழக் கோரிக்கையை ஆதரிக்கவில்லையென்றும், எதிர்காலத்திலும் அதனை ஆதரிக்கப் போவதில்லையென்றும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் ஈழம் வரைபடத்தைக் கொண்டதான எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த 65-9815 என்ற இலக்கத்தகடு உடைய வாகனத்தை பயன்படுத்தியதாக தனக்கு எதிராக தேர்தல்கள் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும்...

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா

எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே நாம் திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு மக்களுடன் நேற்றைய தினம் (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு...

உரிமைகள் மறுக்கப்பட்டதால் ஆயுதம் ஏந்தினார் பிரபாகரன்! இறுதிவரை அவரை கூட்டமைப்பு ஆதரித்தது!!

"தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தபோதுதான் அதற்கு எதிராக வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்....
Loading posts...

All posts loaded

No more posts