இறுதிப் போரில் கைப்பற்றப்பட்ட நகைகளும், ஆயுதங்களும் எங்கே? சுமந்திரன் கேள்வி

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி தற்பொழுது வரையில் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார். வடக்கில் பெறப்பட்ட நகைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பாரியார் அணிந்து கொள்வதற்கு வழங்கினாரா? எனவும் அவர் வினா தொடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை...

பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்புவேன் – யாழ்.ஆயர் உறுதி

போரினால் பாதிக்கப்பட்ட கணவரை இழந்த பெண்களிற்காகவும்,அரசியல் கைதிகளிற்காகவும், இன்னமும் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களிற்காகவும் குரலெழுப்புவேன் என யாழ்.மறை மாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் பேர்னாட் ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். போர் முடிவடைந்து ஆறுவருடங்களாகின்றன பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனது மறைமாவட்டம் குறித்தும் அது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்...
Ad Widget

மக்களின் அன்றாட வாழ்வில் தலையிடும் உரிமை படையினருக்கு இல்லை! – மாவை சேனாதிராசா

பொதுமக்களின் வாழ்வியல் விடயங்களில் இராணுவத்தினரும், கடற்படையினரும் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டி துறைமுகத்தை இடமாற்றுவது தொடர்பில் இடம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி கடற்றொழிலாளர்களின் கையெழுத்துக்கள் பெற முயற்சிக்கப்படுகின்றமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் புதிய அரசாங்கத்தில் இணைந்து...

1 ½ இலட்சம் இராணுவத்தினர் உள்ள இராணுவ அரணுக்குள் போதைப்பொருள் வந்தது எவ்வாறு?

'சுமார் 1 ½ இலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடமாகாணத்தில் எவ்வாறு போதைப்பொருள் பாவனை என்ற புற்றுநோய் வேகமாக பரவியது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்' என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தால் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கி நேற்று செவ்வாய்க்கிழமை (03) நடத்தப்பட்ட ஊழியர்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு...

நான் என்று வாழத் தலைப்பட்டதே சமூக சீரழிவுக்குக் காரணம் – வடக்கு முதல்வர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களையும், சேவையில் 25 வருட காலத்தைப் பூர்த்தி செய்த பணியாளர்களையும், கௌரவித்து விருதுகள், பரிசில்கள் வழங்கும் நிகழ்வு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தலைமையில் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் ஊழியர் சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக...

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது இனச் சுத்திகரிப்பு – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை வெளிப்படையாகப் பேசுவதன் ஊடாகவே இரு சமூகத்துக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையை தடுக்காமைக்கு ஒவ்வொரு தமிழர்களும் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் தலைமைத்துவங்களின் செயற்பாடுகள் தமிழர்களிடையே சந்தேகத்தை...

மகிந்த ஆட்சியில் இனஅழிப்பே நடந்தது! – வெளிவிவகார அமைச்சர்

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் பௌத்த நாடு என்ற பெயரில் சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம்களை இலக்குவைத்து திட்டமிட்ட இனஅழிப்பும், அடக்குமுறையும் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு கொழும்பில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில்...

‘வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்’ – வடமாகாண முதலமைச்சர்

இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார். யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியர்கைளப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில்...

அதிக மரங்களை நடுகை செய்யும் பொதுஅமைப்புகளுக்கு பிரமாண அடிப்படையிலான நன்கொடை உதவியில் முன்னுரிமை – பொ.ஐங்கரநேசன்அறிவிப்பு

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகையில் அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடுகைசெய்து பராமரிக்கும் பொது அமைப்புகளுக்கு, பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து வழங்கப்படும் உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர்பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சனசமூக நிலையங்கள், மாதர் அமைப்புகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் போன்ற...

மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாடு துரித வளர்ச்சியடையும்

எமது நாட்டின் இனத்தின் ஒற்றுமை மற்றும் அதன் சமத்துவ தன்மைக்காக மூவின மக்களும் ஒன்றினைந்து செயற்படவேண்டும். அப்போது நாடு துரித வளர்ச்சியினை பெற்றுக்கொள்ளும் என புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். இலங்கையின் ஒரே மக்கள் என்ற அமைப்பின் (Unity Mission trust) எற்பாட்டில் புதிய இலங்கையினை உருவாக்கும்...

ஐ.நா. தீர்மானத்தின் ஊடாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

"ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. இதை ஏற்று அரசு பொறுப்புக்கூறவேண்டும். இதை நாமும் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்துவிடமுடியாது. அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அவர்கள் கௌரவமாக வாழவேண்டும். இழப்பீடு வழங்கப்படவேண்டும். உண்மை கண்டறிப்படவேண்டும். இவற்றை செய்தால்தான் நல்லிணக்கத்துக்கான வழி திறக்கப்படும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்...

கூட்டமைப்பைப் பிளவுபடுத்த சிங்கள ஊடகங்கள் சில முயற்சி! – மாவை குற்றச்சாட்டு

வடமாகாண சபை மூலம், மக்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது, அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது, மற்றும் வடமாகாண சபையின் சமூகமான செயற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், வடமாகாண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்...

எப்படியும் வாழ முடியும் என்ற துர்ப்பாக்கிய நிலைக்குள் எமது சமூகம் – யாழ்.அரச அதிபரின் ஆதங்கம்

எமது சமூகம் மனித விழுமியங்களை இழந்து எப்படியும் வாழலாம் என்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மாவட்ட ரீதியிலான முதியோர் நலன்பேணும் அமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த புதன்கிழமை யாழ்.சென் ஜோன்ஸ் அன்புலன்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்...

தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் பகிரங்க அழைப்பு

யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்து பல்வேறு துன்ப சுமைகளோடு வாழ்ந்து வருகின்ற எமது மக்களுக்கு உதவிட முன்வருமாறு தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. வன்னி விழிப்புணர்வற்றோர் சங்க வெள்ளை பிரம்பு தின நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற போது நிகழ்வின் சிறப்பு...

பண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்தவர்கள் யாழ். மக்கள் : வடக்கு முதல்வர்

கலாசாரத்தை உலகுக்கு கற்றுக் கொடுத்து, பண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்தவர்கள் யாழ். மக்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், யாழ். மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்...

உண்மைக்கு முதலிடம் வழங்க வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பு – ஜனாதிபதி

முழுமையான பத்திரிகை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடிப்படைவாதிகளின் குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இடமளிக்காது உண்மைக்கு முதலிடம் வழங்க வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரபால தெரிவித்தார். நாட்டின் சுதந்திரத்தையும் ஊடகத்துறையின் சுதந்திரத்தையும் முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்போடு இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதான பத்திரிகைகளின் தலைப்புகளை பிரசுரிக்குமாறு கட்டளை...

மீனவர் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் கூட்டு ரோந்து, ஜெயலலிதாவுடன் பேச்சு! – சம்பந்தன் வலியுறுத்தல்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுடனும் இலங்கை அரசு பேச்சுகளை நடத்த வேண்டும் என்றும், இந்தியக் கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் ஆலோசனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் ஏற்படும்...

தமிழ் பிரதிநிதி பொய்கூறும் போது இராணுவம் பொய்கூறுவது பெரிய விடயமல்ல – ஹர்மன் குமார

வடக்கில் ஒரு சிறு துண்டு நிலத்தையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கவில்லையெனவும், இராணுவம் நிலைகொண்டுள்ள காணிகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகள் என இராணுவப் பேச்சாளர், தென்னிலங்கை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஜெனீவா சென்று பொய் கூறும் போது, அந்த இராணுவ ஊடக பேச்சாளர் பொய் கூறியது...

சதாம், கடாபியின் கதியே மஹிந்தவுக்கும் ஏற்பட்டிருக்கும்! – எஸ்.பி.திசாநாயக்க

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றி அவரது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தால் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபி,ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் ஆகிய தலைவர்களுக்கு ஏற்பட்டிருந்த நிலையே இன்று அவருக்கும் ஏற்பட்டிருக்கும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசு ஏன் நீக்கவில்லை? – நாடாளுமன்றில் சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசு வழங்கிய வாக்குறுதிக்கமைய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என்று நாடாளுமன்றில் அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நாவில் அரசு எழுத்துமூலம் வழங்கிய வாக்குறுதிகளை செயல்வடிவாக்கி உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றவேண்டும் என்றும், இந்தச் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக அமையைவேண்டும் என்றும்...
Loading posts...

All posts loaded

No more posts