உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : வேட்பு மனுத் தாக்கல் திகதி அறிவிப்பு!!

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான இறுதி அறிக்கை 6 வார காலத்தில்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 27ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு...
Ad Widget

மக்கள் நலனுக்காக தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார்!

தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் நலனுக்காக ஒன்றிய அழைப்பு விடுத்தால் எனது பங்களிப்பு நிச்சயமிருக்கும் என தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூர் ஆட்சி மன்ற...

செம்மணிப் புதைகுழி ஆதாரங்கள் அழிக்கப்படும் ஆபத்து!

செம்மணி மனிதப் புதைகுழிக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, அநீதிகள் நடக்கக்கூடும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றுகையில், "கொக்குத்தொடுவாய் பகுதியிலும், மன்னார் பிரதேசத்திலும்...

பருத்தித்துறையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச் சூடு!

பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி மணல் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் பயணித்த லொறியொன்ற பின்தொடர்ந்துச் சென்ற பொலிஸார் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து லொறியில் இருந்த சாரதியும் உதவியாளரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த லொறியில் பயணித்த உதவியாளர் காயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைப்...

யாழில் அரச தாதியர் சங்க பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அரச தாதியர் சங்கம் நேற்று (27) பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதான வளாகத்தில் ஒன்று கூடிய தாதியர்கள் தாதியர்களுக்கு பாதீட்டில் சரியான நீதியை பெற்றுக் கொடு! குறைக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவை அதிகரி! பதவி வியர்வை பழைய முறைப்படி வழங்கு! ஆகிய பதாகைகளை ஏந்திய வண்ணம்...

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது!!

2016 ஆம் ஆண்டு காலம் முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் 14 ஆணைக்குழுக்கள் பிரதானவையாக காணப்படுகின்றன. இவற்றுக்காக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 144 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் பிரதம...

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்குமாறு கோரி தீவக கடற்தொழில் அமைப்பு மகஜர் கையளிப்பு!!

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை இன்று வியாழக்கிழமை (27) தீவக கடற்தொழில் அமைப்பு முன்னெடுத்தது. தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ் பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக...

யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராக இன்று முதல் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக இன்று முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் ” நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையினது நிர்வாகத்தினைத் தக்க வைப்பதற்காக மருத்துவமனை...

சந்தேக நபரின் கையை முறித்த நெல்லியடிப் பொலிஸார்!!

நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி பகுதியை சேர்ந்த நந்தகுமார் இலங்கேஸ்வரன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 18ஆம் திகதி எனது அம்மா வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் முன்னால் நின்ற போது, முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸார் , என் மீது தாக்குதல்...

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு 6 மாதத்தில் தீர்வு!

தையிட்டி விகாரை பிரச்சினையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி...

இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதிகள்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று (25) அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். கடலில் தத்தளித்தவர்களை கடலோரக் பொலிஸார் மீட்டு கடலோர போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்; நிதியை நாங்கள் கொண்டு வருகின்றோம் – இராமநாதன் அச்சுனா

வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சையளிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பிச்சை எடுப்பதற்கு தயராக இல்லையென்பதனை உங்களுக்கு சொல்லுகின்றேன். எமது சகோதரர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள். நாங்கள் பில்லியன், ரில்லியன் கணக்கான நிதியை கொண்டு வருகின்றோம். பிச்சை போடுகின்றோம் .தலதா மாளிகைக்கு குண்டுவைத்த ரோஹன விஜேவீர...

வௌவால்களால் பரவும் கொரோனா வைரஸ் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!

வௌவாலிலிருந்து பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸை சீனாவின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது, விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவின் நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான ஆய்வாளர்கள், மேற்கொண்ட ஆய்வில் இப்புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. எச்.கே.யு.05 வி-02 என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த வைரஸ்...

யாழ். மாவட்ட செயலரின் மகன் பயணித்த வாகனம் விபத்து

யாழ்ப்பாண மாவட்ட செயலரர் ம. பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் கந்தர்மடம் சந்திக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி...

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து போட்டியிட இணக்கம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (23) யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டணியில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை...

அதிக வெப்பநிலை குறித்த எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை குறித்து பொது மக்கள் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்தி, வடமேல், மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் நிலவும் வெப்பம் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை தொடர்பில் அவதானம் செலுத்த...

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – வாக்குமூலம் பதிவு

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் நேற்றைநய தினம் (20) வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். தையிட்டி விகாரையில் கடந்த 12 ஆம் திகதி மேற்கொண்ட போராட்டம் தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிசாரால் குறித்த வாக்குமூலம்...

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி!

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா நேற்றைய தினம் (20) பார்வையிட்டார். இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸார், முறைப்பாட்டாளர் மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த பகுதியில் 2011ஆம் ஆண்டுக்கு...

பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை!!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாளான பெப்ரவரி 27ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக 01.03.2025 சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts