தேர்தலில் வாக்களிப்பது எப்படி? : தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்துக்கள் பொதுமக்களின் குழப்பத்தை அதிகப்படுத்துகின்றன!!

தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பொதுமக்களின் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார். 'எமது வாக்காளர்கள் புள்ளடி இடுவதற்குப் பழகியிருக்கிறார்கள். எனவே வாக்குச்சீட்டில் எவரேனும் புள்ளடி இட்டால், அதனை நாம் '1' எனக் கருதுவோம். அதேபோன்று இரண்டாம் மற்றும்...

தமிழ் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது!!

ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொதுக் கட்டமைப்பினால் சுயேட்சை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (12) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரான, த.சிற்பரன் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.
Ad Widget

நாடளாவிய ரீதியில் கிராம சேவகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் இன்று திங்கட்கிழமை (12) முதல் நாளை வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்கிணங்க நீர்கொழும்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 39 கிராம சேவகர்கள் காரியாலயங்களும் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் கிராம சேவகர்கள் இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை கடமையில் இருந்தும் விலகியிருப்பதோடு புதன்கிழமை...

வவுனியா குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகத்தின் விசேட அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இலக்கம் JC 23 வெளிச்சுற்று வவுனியா...

ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – சர்வ மத தலைவர்கள் கோரிக்கை

தேசிய ஒற்றுமைக்கான சர்வ மத கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் பொரளையில் அமைந்துள்ள Bishop தலைமை காரியாலயத்தில் வணக்கத்துக்குரிய களனி வஜ்ர தேரரின் தலைமையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கார்டினல் ரஞ்சித் மல்கம் மற்றும் வணக்கத்துக்குரிய சோம ரத்தின தேரர், வணக்கத்துக்குரிய ஜீனானந்த தேரர், கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் – சரத் பொன்சேகா

024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதை அவர் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு!!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் பண்டத்திரிப்பு - செட்டிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், அயலவர்கள் அது குறித்து சோதித்த போது சடலம் வீட்டின்...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்புக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய மத்திய அரசு கடந்த மே 14 அன்று அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீத்தம் சிங் அரோரா தலைமையிலான தீர்ப்பாயம் தடை செய்வது...

யாழ். நீதிமன்றுக்கு போதையில் வந்த நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாண நீதிமன்றிற்கு வழக்கு விசாரணைக்கு மதுபோதையில் வந்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றுக்கு வந்த நபர் மதுபோதையில் வந்துள்ளார். குறித்த நபர் மதுபோதையில் மன்றுக்கு விசாரணைக்கு வந்ததை அடுத்து, அந்நபரை கைது செய்த நீதிமன்ற பொலிஸார் மன்றில்...

முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயம்!!

முல்லைத்தீவு கல்விளான் பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (24.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வயலில் அறுவடை செய்த நெல்லை வீதி காவலில் பாதுகாத்தவரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளிவராத நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரைணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வேலணை பகுதியில் பொறுப்பற்ற முறையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்!!

வேலணை பிரதேச மருத்துவமனை மற்றும் வேலணை பிரதேச சுகாதார மருத்துவர் பணிமனை அமைந்துள்ள வளாகத்திற்கு அருகிலுள்ள தனியார் காணியினுள் மருத்துவமனை வாளாக எல்லையிலிருந்து அண்ணளவாக 10மீற்றர் தூரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பாவிக்கப்பட்ட ஊசிமருந்து குப்பிகள் மற்றும் மருந்து ஏற்ற பயன்படுத்திய ஊசிகள் இப்பகுதியில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக...

யாழில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்!

கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் செவ்வாய்க்கிழமை மாலை (23) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்ஞப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். முற்றவெளி மைதானம் முன்பாக செவ்வாய்க்கிழமை (23) மாலை இவ் நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது நினைவேந்தல் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ஏனையவர்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந்...

மருத்துவர் இராமநாதன் அர்சுணா பேராதனை வைத்தியசாலைக்கு மருத்துவ அதிகாரியாக மாற்றம்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்சுனா பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார். இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் எந்தவித விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலையில்...

9 இந்திய மீனவர்கள் கைது!

தமிழகத்தின் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வந்துள்ளது. மேலும் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீன்பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின்...

மருந்தகத்திற்குள் நடந்த மரணச் சடங்கு! விசாரணைகளை ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மரண சடங்கு இடம்பெற்றமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , கந்தர்மடம் பகுதியில் வீடொன்றில் மருந்தகம் ஒன்று நடத்தப்பட்டு வந்தது. வீட்டின் முன் பாகத்தினை மருந்தகமாக மாற்றி , அதனை பதிவு செய்து நடாத்தி வந்துள்ளனர். வீட்டின் மற்றைய பாகத்தில் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த வீட்டில் வசித்து...

பருத்தித்துறையில் வாள்வெட்டு! 3 பேர் படுகாயம்!!

பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மூவரில் இருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மற்றையவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

13 ஆவது திருத்தச்சட்டம் செல்லுபடியாகாது! – சி.வி விக்னேஸ்வரன்

பெரும்பான்மையினரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக சிறுபான்மையினர் என அடையாளப்படுத்தும் நாங்கள் ஆனால் வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக காணப்படும் எங்களுடைய இந்த ஆயுதம் தான் இந்த கட்டமைப்பு என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை...

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!!

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை (22) கைச்சாத்திடபட்டது. தமிழ் சிவில் சமூகத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்டது. கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவருக்கு வாக்களித்தும் எந்தவித...

அதிபர், ஆசிரியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை!

இன்று (22) முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று முதல் மாகாண கல்வி மற்றும் வலய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள், தர வட்டங்கள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்....

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அபிவிருத்தி குழு நியமனம்!!

சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் மேற்கொள்வதாகவும் , அதற்காக 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போதே இந்த அபிவிருத்தி குழு...
Loading posts...

All posts loaded

No more posts