புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் முறைப்பாடுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்கனவே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி,...

மாவை சேனாதிராஜாவின் இறுதி சடங்கு குறித்த அறிவிப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82வது வயதில் நேற்று (புதன்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காலமாகியுள்ளார் குளியலறையில் கால் தடுக்கி கீழே விழுந்ததால் தலையிலுள்ள நரம்பொன்று பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்....
Ad Widget

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் சிறப்பு காவல் குழுவினால் புதன்கிழமை (29) பிற்பகல் கைது செய்யப்பட்டு அன்று இரவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டபோது, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் அவரை தலா 200,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியது. அதன்படி, இந்த வழக்கு...

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட வைத்திய சேவைகள்!!

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் புதன்கிழமை (29) சிறுதுநேரம் வெளிநோயாளர்பிரிவின் வைத்தியசேவைகள் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிடப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இது குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடி பிறிதொரு வைத்தியரை வைத்திய சேவையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டார். அத்தோடு உடனடியாக வைத்தியசாலைக்கு...

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிர்ணய விலைகள்!

நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமிருந்து பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு,உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வெள்ளை முட்டையின் விலை 28-35 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 870-1,000 ரூபாவாகவும்,ஒரு...

நெல்லியடியில் பச்சை குத்தும் நிலையம் மூடப்பட்டது!!

நெல்லியடியில் துஷ்பிரயோகங்கள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட பச்சை குத்தும் நிலையம் ஒன்று வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையினால் மூடப்பட்டுள்ளது. குறித்த பச்சை குத்தும் நிலையத்தில், சிறுவர்களுக்கு பச்சை குத்தப்பட்டதாகவும், துஸ்பிரயோகங்கள் நடைபெற்றதாகவும், சுகாதாரத்திற்கு தீங்கான வகையில் பச்சை குத்தும் செயற்பாடுகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அது தொடர்பில் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த...

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!!

2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (G.C.E O/L) பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 26ஆம் திகதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு பிரவேசித்து...

அசெளகரியங்களை ஏற்படுத்தும் தனியார் பேருந்தினர்!!

அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி தனியார் பேருந்தினர் பயணிகளுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். நேற்று (27) யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகளவான பயணிகளை ஏற்றியவாறு பயணித்த பேருந்தின் காப்பாளர், பயணிகளின் இருக்கைக்கு மேலாக கடந்து சென்று அசௌகரியங்களை ஏற்படுத்தியமை பயணிகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கும் முகமாலை பகுதிக்கும் இடையில்...

நாட்டில் வீழ்ச்சியடைந்து வரும் காற்றின் தரம்!

கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு,...

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம்!

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காயமடைந்த இருவரும் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது. இதன்போது இந்திய...

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தின் பின்னர்...

பல்கலைகழக மாணவர்கள் மீதான பழிவாங்கல்கள் கற்றல் உரிமைகளிற்காக அனைவராலும் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமானது திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்டுள்ளது!!

எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் கடந்த 24 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டமானது நான்கு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து நடைபெற்றிருந்தது. தற்பொழுது ஒரு சில நிர்வாக மற்றும் அரசியல் நோக்கங்களிற்காக அது முழுமையாக திரிபுபடுத்தப்பட்டு போராட்டத்தின் நோக்கம் முழுமையாக திசை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. போராட்டத்தின் நோக்கத்தினையும் சரியான புரிதலையும் வழங்கும் நோக்கத்துடன்...

போதைக்கு எதிராக மிக பெரிய செயற்பாட்டை முன்னெடுக்க முன் வாருங்கள் – பேராசிரியர் ரகுராம்

இளம் சமுதாயத்தை நாசமாக்க கூடிய போதை பாவணையை தடுத்து நிறுத்தி ஒரு ஆரோக்கியான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் இந்த கால பொறுப்பை கைகளில் ஏந்த வேண்டும் என யாழ் . பல்கலைக்கழக பேராசியர் சி. ரகுராம் அறைகூவல் விடுத்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலான போதைப்பாவனையை தடுத்து நிறுத்துக்கும் முயற்சியில்...

நாய் தூக்கிலிடப்பட்ட சம்பவம்; மாங்குளத்தில் பெண்ணொருவர் கைது!

நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பில் வடமாகாண மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலானதுடன், பலரின் கண்டனத்தையும் பெற்றது. இது தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே மேற்கண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

பாடசாலை காணிக்கு தீர்வு வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்!!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பகுதியில் பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அபகரித்து வைத்திருப்பதால் அதனை மீட்டுத்தரக்கோரி இன்று திங்கட்கிழமை (27) காலை பாடசாலை சமூகத்தினர், ஊர் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். யுத்த காலத்துக்கு முன்னர் நீண்டகாலமாக பாடசாலை இயங்கிவந்த காணியை யுத்தம் நிறைவடைந்து...

கசூரினா கடலில் நீராடிய அறுவர் வைத்தியசாலையில்!!

கசூரினா கடலில் நீராடிய அறுவர் விஷப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கசூரினா சுற்றுலா மையமானது காரைநகர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படுவதால் இது குறித்து காரைநகர் பிரதேச சபையின் செயலாளரை தொடர்புகொண்டு வினவியவேளை, இன்றையதினம் (26) விஷப்பாசி தாக்கி ஆறுபேர் காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக...

பென்சில்களால் சிறுவர்களுக்கு ஆபத்து?

சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான பென்சில்களில் சிறுவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பாடசாலைச் சிறுவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள் பல்வேறு வண்ணங்களில் கவர்ச்சிகரமான தோற்றத்தில் விற்கப்படுவதால் குழந்தைகள் அவற்றை வாங்குவதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர் எனவும், அவ்வாறான பென்சில்களில் அதிக அளவு இரசாயனங்கள் மற்றும் பாதரசம், ஆர்சனிக் மற்றும்...

மீளவும் பேராசிரியர் ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும்; யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன விடயத்திற்காக பாடுபட்டாரோ அந்த விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மீளவும் கலைப்பீட...

மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட யாழ் கலாசார மண்டபம்!

இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் தற்போது மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மண்டபம், யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெயர் பலகை இன்றையதினம் பொருத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற அழிவு யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் புதுடில்லி சென்றிருந்த...

யாழில் ஆரம்பமாகியது உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி!!

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை (24) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. இன்று வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமான இந்த கண்காட்சி 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 10:00 மணி முதல், இரவு 07:00...
Loading posts...

All posts loaded

No more posts