Ad Widget

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டர் விபத்து!! எவரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை!!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்து விபத்துக்குள்ளான ஹெலிக்கொப்டரை மீட்பு பணியாளர்கள் கண்டுபிடித்துள்ள அதேவேளை அந்த ஹெலிக்கொப்டரில் பயணம் செய்தவர்களில் எவரும் உயிருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிக்கொப்டரில் பயணம் செய்தவர்கள் எவரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என சர்வதேச செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை – இந்திய படகு சேவை மீண்டும் ஒத்திவைப்பு!!

இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி இந்த படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் சில காரணங்களால் இன்று (17) வரை ஒத்திவைப்பதாக கப்பல் சேவை நிறுவனம் அண்மையில் அறிவித்தது. எனினும் எதிவரும் 19ஆம் திகதி வரை...
Ad Widget

யாழில் சிரட்டையில் கஞ்சி பருகிய இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, இன்றும் யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, பொது மக்கள் மட்டுமன்றி வீதியில் பயணித்த இராணுவத்தினரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில் பெற்று பருகியமை விசேட அம்சமாகக் கருதப்படுகிறது....

யாழ். பல்கலை மாணவர்களால் கல்வியங்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்கும் கடத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வரும நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கல்வியங்காட்டுச் சந்தியில; நேற்று புதன்கிழமை (15) வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு தினமும் பல்வேறுபட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு...

குழந்தையை பிரசவித்து கைவிட்டு சென்ற சிறுமி கண்டுபிடிப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர் , குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர். அந்த சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கடந்த 12ம் திகதி கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். துன்னாலையில் கராஜ்ஜில் பணியாற்றும் மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான...

ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபா!!

தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று புதன்கிழமை (15) 01 கிலோ கிராம் எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சைபழம் விநியோகிக்கப்படுகின்றது. சந்தைக்கு போதியளவு எலுமிச்சை பழம் கிடைக்காத காரணத்தினால் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தீவிரமடைந்துவரும் ரஷ்ய தாக்குதல்: வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ள ஜெலென்ஸ்கி

ரஷ்ய தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி( Volodymyr Zelenskyy) தமது வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் மீதான தாக்குதலை சமீப நாட்களாக ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கார்கிவ்(Kharkiv) பிராந்தியத்தில் மேலும் இரண்டு குடியிருப்பு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. அத்துடன் Zaporizhzhia பிராந்தியத்தில் ஒரு குடியிருப்பு பகுதியையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில்...

ஒரு குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு ரூ.103,283!!

பணவீக்கம் காரணமாக, இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 டிசம்பர் மாதத்தில் 16.5% அதிகரித்து 103,283 ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார வர்ணனை மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில், 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஒரு குடும்பத்தின்...

4 வயது மகளுக்கு சிறுநீரக பாதிப்பென பொய் கூறி யாசகம் பெற்றவருக்கு விளக்கமறியல்!!

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி , சிறுமியின் இரு சிறுநீரகங்களுக்கு பழுதடைந்துள்ளதாகவும் , அதற்கான...

பலஸ்தீனத்திற்கு குரல் கொடுக்கும் இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்தது?

”பலஸ்தீனத்திற்கு குரல் கொடுக்கும் இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்தது?” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது... பலஸ்தீனத்திற்கு குரல் கொடுக்கும் இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்தது? இதுதான் இலங்கையின் நயவஞ்சக தன்மை மற்றும் இரட்டை வேடம். பாலஸ்தீனத்தின் மீது...

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையினை நீடித்தது இந்தியா!

இந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. “ஊபா” சட்டத்தின் கீழ், அதாவது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள்...

இறுதி யுத்தத்தின் கொடூரங்களை மறைப்பதே அரசின் நோக்கம்!! : அம்பிகா சற்குணநாதன்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற கொடூரங்கள் மற்றும் வன்முறையை நினைவுகூருவதை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுவதை தடை செய்யும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளும், அதற்காக தெரிவிக்கப்படும் காரணங்களும் இதனை தெளிவாக வெளிப்படுத்துவதாக, அவர் தனது டுவிட்டர்...

யாழில் அரச உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாக தயாரித்து மோசடி!!

யாழ். கரவெட்டியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2023 ஒக்டோபர் மாதம் 10...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலனின் மகள், இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் சசிதரன், மாவிலாறு அணையை மூடி இறுதிக் கட்டப் போருக்கு வழி வகுத்தவர் என்று இராணுவ வட்டாரங்களில் குறிப்பிடப்படுகின்றார். இறுதிக் கட்டப்...

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திய இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தேவையற்ற அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். () அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியதால் இரத்த உறைவு உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக அந்நிறுவனத்தின் மீது உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட...

யாழில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து : பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைப் பேருந்து, விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் நேற்றையதினம் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி சென்ற போது, நாரந்தனை பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டமையால், பின்னால் சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது....

யாழில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு – இருவர் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும்...

யாழ். மின்சார சபை ஊழியரின் மரணம்: சாட்சியங்களை அச்சுறுத்தும் பொலிஸார்

புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கடந்த 10ஆம் திகதி பொலிஸாரினால் துரத்திச்செல்லப்பட்டு மின்சார சபை ஊழியர் ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. குறித்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையில் பணிபுரியும் ஊழியரான செல்வநாயகம் பிரதீபன் என்பவர் கடந்த 10...

நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்: விக்னேஸ்வரன்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் இரவு வேளையில் மிக மோசமான முறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டித்துள்ளார். இது தொடர்பில் அவர் கொழும்பிலிருந்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அந்த கண்டன அறிக்கையில், இரவில்...

ரஷ்ய – உக்ரைன் களமுனையில் இராணுத்தினரை அனுப்பும் தனியார் நிறுவனம்: தயாசிறியின் கருத்தால் பெரும் சர்ச்சை

ரஷ்ய மற்றும் உக்ரைன் போருக்கான வாடகைப்படையினராக செயற்பட இலங்கை இராணுவச் சிப்பாய்களை அவண்ட் கார்ட் நிறுவனமே அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரஷ்யாவுக்கு வாடகைப்படையினராக இலங்கை இராணுவச் சிப்பாய்களை அவண்ட் கார்ட் என்றொரு நிறுவனமே...
Loading posts...

All posts loaded

No more posts