14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியவர் கைது

வவுனியா ஆராச்சிபுரம் பகுதியில் 14 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகப் படுத்திய ஒருவரை காவற்துறை கைது செய்துள்ளது.

குறித்த நபர் , சிறுமியை கைப்பேசி அழைப்பின் மூலம் அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளதாக அறியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மட்டக்களப்பு பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபர்மன்னார் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Related Posts