வௌவாலிலிருந்து பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸை சீனாவின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது, விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சீனாவின் நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான ஆய்வாளர்கள், மேற்கொண்ட ஆய்வில் இப்புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
எச்.கே.யு.05 வி-02 என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த வைரஸ் மேர்பிகோவைரஸ் துணை வகையைச் சேர்ந்தது என்றும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வைரஸ் குறித்து தகவல் வெளியிட்டுள்ள ரோய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் கொவிட்-19 வைரஸை போன்று செயல்படக்கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த வைரஸ் மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது இடைநிலை உயிரினங்கள் மூலமாகவோ பரவுவதற்கு சந்தர்ப்பமுள்ளது.
இந்த வைரஸ் கொரோனாவைப் போல மனிதர்களின் சுவாச மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
இருப்பினும், இந்த வைரஸின் வீரியம், கொரோனாவை விடக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.